என் மலர்
நீங்கள் தேடியது "WHO"
- மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர்.
- ராஜஸ்தானிலும் இருமமல் மருந்து குடித்த குழந்தைகள் இறந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல் ராஜஸ்தானிலும் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எதிலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களின் மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இதில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்பான கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர், ரீலைப் ஆகிய 3 இருமல் மருந்துகள் பாதிக்கப்பட்ட மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துகள் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், கடுமையான, உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த மருந்துகள் ஏதாவது நாட்டில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே புகாரளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டு உள்ளது.
முன்னதாக கலப்பட மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- சமைக்கும் போது வெளிப்படும் புகை மற்றும் புகை உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
- சமையலறையில் இருந்து வாயுக்கள் வெளியேறவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
அம்மா... காலை உணவு ரெடியா:
ஐயோ... சாப்பாடு வைக்க இவ்வளவு நேரமா?, அம்மா... எனக்கு கொஞ்சம் காபி கொடுங்க: ...
இது தான் ஒவ்வொரு வீட்டிலும் காலை நேரத்தில் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது. கணவன் பிள்ளைகளுக்காக சமையல் அறையில் தினமும் பெண்கள் ஓடி ஓடி வேலை செய்கிறார்கள்.
சமையலின் ருசியை மட்டும் பார்க்கும் பலர் சமையலறை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அங்குள்ள காற்று மாசுபட்டால் அது நம் வீட்டு பெண்களை பாதிக்கும்.
இந்தியப் பெண்கள் ஒரு நாளைக்கு மூன்றரை மணி நேரம் சமையலறையில் செலவிடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பல வீடுகளில் சமையலறைக்குள் போதுமான வெளிச்சம் மற்றும் காற்று செல்லவும். அங்கு வெளியாகும் புகை மற்றும் வாயுக்களை காற்றோட்டம் செய்யவும் போதுமான காற்றோட்டம் இல்லை..
இது பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சமைக்கும் போது வெளிப்படும் புகை மற்றும் புகை உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
2020-ம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு பாதுகாப்பற்ற சமையல் நடைமுறைகள் காரணமாக வீடுகளில் ஏற்படும் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 3.2 மில்லியன் பெண்கள் இறப்பதாக மதிப்பிட்டுள்ளது. இவற்றில், 32 சதவீதம் இதய நோய், 23 சதவீதம் பக்கவாதம், 21 சதவீதம் சுவாச நோய்கள், 19 சதவீதம் மற்றும் 6 சதவீதம் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை பாதிக்க வாய்ப்பு உள்ளது.
சமையலறை வாயுவிலிருந்து வெளியாகும் நைட்ரஜன் டை ஆக்சைடை நீண்ட காலமாக உள்ளிழுப்பது ஆயிரக்கணக்கான ஆஸ்துமா தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம்.
சமையலறையில் இருந்து வாயுக்கள் வெளியேறவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
சுவாச நோய்கள் தலைவலி, சோர்வு, கண்களில் எரிதல் கண்களில் நீர் வடிதல் மற்றும் அதிகரித்த ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கியாஸ் எரிவதால் அறைக்குள் நைட்ரஜன் டை ஆக்சைடு கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு வெளியாகின்றன. அதிக வெப்பநிலை எண்ணெயில் உணவை வறுக்கும்போது அதிக மாசுக்கள் வெளியிடப்படுகின்றன.
சிலர் இன்னும் மரம் மற்றும் கரியைப் பயன்படுத்தி சமைக்கிறார்கள். இது கார்பன் டை ஆக்சைடு நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் புகையை அறைக்குள் வெளியிடுகிறது.
சமையல் அறையில் வெப்பமான வானிலை நீரிழப்பு மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
நீண்ட நேரம் நின்று சமைப்பது கீழ் முதுகு மற்றும் குதிகால் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பயோமாஸ் எரிபொருளை அதிகமாக உள்ளிழுப்பது பெண்களுக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது. இது நுரையீரல் திசுக்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும்.
சமைக்கும் போது வெளியாகும் புகை மற்றும் வாயுக்கள் வெளியேற அனுமதிக்க கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட வேண்டும்.
முடிந்தவரை குறுகிய நேரத்தில் சமையலை முடிக்க முயற்சி செய்யுங்கள்.
அடிக்கடி சமையலறையை விட்டு வெளியே வந்து கொஞ்சம் தண்ணீர் குடித்து சிறிது நேரம் நடப்பது நல்லது.
புகை மற்றும் வாயுக்களை வெளியேற்றுவதற்கு வெளியேற்றும் விசிறிகள் மற்றும் புகைபோக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
மின்சார அடுப்பு மூலம் இழப்பை ஓரளவு குறைக்கலாம்.
ஏற்கனவே சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தூண்டல் அடுப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.
சமையலறைகள் சிறியதாகவும், காற்று மற்றும் வெளிச்சம் குறைவாகவும் இருக்கும்போது பெண்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கியாஸ் மற்றும் சமையல் எண்ணெய்களை சூடாக்குவதால் வெளியாகும் வாயுக்களால் பெண்கள் ஆஸ்துமாவை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர். வீட்டில் இருக்கும் பெண்களும் வெளியில் இருந்து வரும் தூசியால் நோய்வாய்ப்படுகிறார்கள் என சுவாச நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- குரங்கு அம்மை நோய் பரவல் சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
ஜெனீவா:
உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பதிவாகின.
இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டப்பட்டது. கமிட்டியின் 15 உறுப்பினர்களில் 11 பேரும், 9 ஆலோசகர்களில் 6 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நாடுகளில் சரிவைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் சில நாடுகளில் நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருகின்றன. மேலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
- குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது.
- உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனிவா:
டென்மார்க்கில் 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரசால் பாதிப்புக்கு ஆளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது. பின்னர் இந்த நோய் தாக்கம் மனிதர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது. உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா என்பதை தீர்மானிக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
- கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.
ஜெனீவா:
சீனாவின் உகான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசுகையில், 2023-ம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என்றும் கூறினார்.
கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ள நிலையில், வரும் 2023-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேசமயம், கொரோனா வைரசின் தோற்றத்தை நன்கு புரிந்துகொள்வதற்காக, நாங்கள் கேட்டுள்ள தரவுகளை பகிர்ந்துகொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் சீனாவிடம் தொடர்ந்து கூறிவருவதாக டெட்ரோஸ் கூறினார்.
- தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும்.
- சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
ஜெனீவா:
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
இந்தியாவிலும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரயஸ், சீனா தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தற்போது சில நாடுகளில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. சீனாவில் உள்ள நிலைமை கவலை அளிக்கிறது. சீனாவின் கொரோனா பாதிப்பு பற்றிய விபரங்களை பகிர்ந்து ஆய்வுகள் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்தவேண்டும். சீனாவுக்குத் தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது என தெரிவித்தார்.
- உலக நாடுகள் அனைத்திலும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
- இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
நியூயார்க்:
சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா பி.எப்.-7 மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளன. கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவால் தினமும் ஏராளமானோர் பலியாகி வருவதாகவும் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய ஆம்புலன்சு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து உலக நாடுகள் அனைத்திலும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியதாவது:-
சீனாவில் கொரோனா பரவலின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை அடைந்து உள்ளது. சீனாவில் நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தி உள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ள கூடியது.
சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து விளக்கம் அளிக்க அந்நாடு முன்வர வேண்டும். இது குறித்தான விரிவான தகவல்கள் எங்களுக்கு தேவை. நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும் தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.
மருத்துவ பராமரிப்பு அதன் சுகாதார அமைப்பை பாதுகாப்பதற்கான எங்கள் ஆதரவை நாங்கள் சீனாவுக்கு தொடர்ந்து அளித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது.
- அங்கிருந்து வரும் தரவுகள் முழுமையாக இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஜெனீவா:
சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் ஆக்கி உள்ளன. இதை உலக சுகாதார நிறுவனம் நியாயப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் காணொலிக் காட்சி வழியாக பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கிருந்து முழுமையான தரவுகள் இல்லை. இந்த நிலையில் சில நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் என்று நம்பி எடுக்கிற நடவடிக்கைகள் சரியானவை, புரிந்துகொள்ளத் தக்கவை என்றார்.
- மரியான் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு பரிசோதித்தது.
- இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெனீவா:
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்தை எடுத்து கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. அந்த மருந்தில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மரியான் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு பரிசோதித்தது. இதில் இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மருந்துகள் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மருந்துகளை தரமற்றது என்று அறிவித்துள்ளது. எனவே இந்த இருமல் மருந்துகளின் பயன்பாட்டை கைவிடுமாறு உலக நாடுகளை கேட்டுக்கெண்டுள்ளது. ஏற்கனவே மரியான் பயோடெக் நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.
- மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.
ஜெனீவா :
குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் சாப்பிட்ட குழந்தைகள் இறந்திருப்பது அதிர வைத்துள்ளது.
இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.
அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இந்த மருந்து குடித்து உஸ்பெகிஸ்தானில் 8 குழந்தைகள் இறந்துள்ளன.
இந்த நிலையில் தரம் குறைந்த இருமல் மருந்துகளை தயாரித்து அளித்த மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.
- சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவியது
- கொரோனா தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது.
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் 2019 டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது
இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று தனது நாட்டில் வெளிப்பட்டது தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது.
கொரோனாவின் ஆரம்ப காலத்தில் வுகான் நகரத்தில் ஹுவானன் சந்தைதான் தொற்றின் மையமாக விளங்கியது. ஆனால் அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்புள்ள தரவுகளை சீனா வெளிப்படையாக வெளியிடவில்லை. இதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும். இந்தத் தரவுகள் 3 ஆண்டுக்கு முன்பே பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம் என தெரிவித்தார்.
- கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது.
- முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி. வகை திரிபு பின்னர் இந்தியாவிலும் பரவ தொடங்கியது.
புதுடெல்லி:
கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஏராளமான உயிர்களை காவு வாங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் உலகம் முழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொருளாதார முடக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் நடத்தி தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர். அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதின் விளைவாக தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. இதனால் உலகம் முழுவதும் சகஜநிலை திரும்பியது.
இருப்பினும் அவ்வப்போது கொரோனா உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் மாறுபாடு, அதன் பல்வேறு திரிபுகள் என பல வகைகளில் உருமாறி பரவிய வண்ணம் உள்ளது.
இதனால் சில நாடுகளில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது. முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி. வகை திரிபு பின்னர் இந்தியாவிலும் பரவ தொடங்கியது.
இதனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை கொரோனா தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.
குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்க எக்ஸ்.பி.பி. வகை வைரஸ் பரவலை காரணம் என தெரியவந்துள்ளது.
எக்ஸ்.பி.பி. வைரஸ் என்பது ஒமைக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸ்களாகும். அதாவது பி.ஏ.2.10.1, பி.ஏ.2.75, எக்ஸ்.பி.எப்., பி.ஏ.5.2.3 மற்றும் பி.ஏ.2.75.3 வகை வைரஸ்களில் மறு வடிவம் என கூறப்படுகிறது.
இந்த புதிய வகை வைரஸ்களின் மரபணு மாற்றத்துடன் எக்ஸ்.பி.பி.1.16 என்ற வைரசும் பரவி வருவதால் தான் இந்தியாவில் பரவி வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் மட்டுமல்லாது தெலுங்கானா, அரியானா, இமாச்சலபிரதேசம், ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ் பரவல் இருப்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.
இந்த வகை எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ் வேகமாக பரவ கூடியதாக உள்ளது. சாதாரணமாக தும்மல் போட்டாலே இது மிக எளிதாக மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என கூறப்படுகிறது.
மேலும் எக்ஸ்.பி.பி.1.16 வைரஸ் என்பது எக்ஸ்.பி.பி.1.15 வகை வைரசை விட அதிக வீரியத்துடன் உள்ளது. கடந்த மாதம் நிலவரப்படி இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரானின் மறுவடிவமாக கருதப்படும் இந்த வகை வைரஸ் வேகமாக பரவினாலும் கூட ஒமைக்ரானை போல பயப்படும் அளவிற்கு மோசமான நிலையை ஏற்படுத்தாது என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
உலகளவில் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 26-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு எக்ஸ்.பி.பி.1.16 வகை புதிய ஒமைக்ரான் மாறுபாடுதான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.
ஆனால் இந்த வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையோ அல்லது இந்த வகை தொற்றால் அதிக உயிரிழப்புகளோ இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வகை வைரஸ்கள் அதிக வீரியம் கொண்டதாக இல்லை. மேலும் இவ்வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு 3 நாளில் குணமாகி விடுகிறார்கள். அதே நேரம் சாதாரண தும்மல் மூலமாக கூட அடுத்தவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருப்பது அவசியம் எனவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.






