search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு அம்மை நோய்"

    தமிழக சுகாதாரத்துறை சென்னை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னை:

    தென்ஆப்பிரிக்காவில் உருவான குரங்கு அம்மை நோய் மேற்கத்திய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது.

    குவைத், சார்ஜா, டாக்கா ஆகிய நாடுகளிலும் தற்போது பரவத் தொடங்கியதால் இந்திய சுகாதாரத்துறை விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது.

    உலக அளவில் இதுவரையில் 500 பேருக்கு மேல் இந்நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவிலும் பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

    இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை சென்னை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் சோதனை செய்யப்படுகிறார்கள்.

    குறிப்பாக சார்ஜா, குவைத், டாக்கா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிரமாக காய்ச்சல், கொப்பளம் ஏதாவது உள்ளதா என்று சோதனை செய்கிறார்கள். மருத்துவ குழுவினர் பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. ஆனாலும் அதற்கான அறிகுறிகள் யாருக்காவது இருக்கிறதா? என்று சோதனை செய்யப்படுகிறது. காச்சல் இருந்தாலே சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு குரங்கு அம்மைக்கான பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பல்வேறு நாடுகள் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.
    லண்டன்:

    கொரோனாவைத் தொடர்ந்து இப்போது குரங்கு அம்மை நோய் மக்களை மிரட்டி  வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவத்துள்ளது. உலக அளவில் 555 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. 

    கொரோனா போன்று குரங்கு அம்மையும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும்போது மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. எனவே, குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அந்தந்த நாடுகள் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.

    அவ்வகையில், பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிநாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு அறிகுறி கொண்டவர்களும் உடலுறவு கொள்வதை தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

    குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புண்கள் குணமாகும் வரையிலோ அல்லது, உடலில் ஏற்பட்ட சிரங்குகள் காயும்வரையிலோ மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரசின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ள நிலையில் குரங்கு அம்மை நோய் தொடங்கி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது-

    குமரி மாவட்டத்தில் மருத்துவதுறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் கருவிகள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது குரங்கம்மை நோய் பரவி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ள நிலையில் குரங்கு அம்மை நோய் தொடங்கி உள்ளது. கொரோனா வைரசை பொறுத்த மட்டில் கொரோனா, ஆல்பா, டெல்டா பிளஸ், ஒமைக்கிரான் மற்றும் ஒமைக்கிரானில் 7 வகை வைரஸ்கள் அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது குரங்கம்மை என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது .

    பொதுவாக இது பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை. பதட்டப்பட தேவையில்லை என்ற அறிவுறுத்தலை நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகளில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த நாடுகளை பொறுத்த மட்டில் ஏற்கனவே இது போன்ற வைரஸ்கள், புதிய தொற்றுகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்துதான் பயமுறுத்தும். ஆனால் இது முற்றிலுமாக அந்த நாடுகளை தவிர்த்து புதிதாக இங்கிலாந்து,  அமெரிக்கா நாடுகளில் இருந்து தோன்றியுள்ளது. அந்த நாடுகளிலும் இந்த நோயால் எந்த உயிரிழப்பும் இல்லை. குறிப்பிட்ட இந்த நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம்.

    தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்து அவர்களது முகங்களில் உடல்களிலும் மாற்றம் தெரிந்தால் அவர்களை சோதனைக்கு உட்படுத்தி அதை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப துறையின் செயலாளர் மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.

    ×