search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monkey Measles"

    • பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
    • சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மையால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலையை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். நிரஜ் கூறியதாவது:-

    குரங்கு அம்மையால் பாதிக்ப்பட்ட 21 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்த குரங்கு அம்மை பரவுகிறது. எனவே வனப்பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். குரங்கு அம்மை ஏற்பட்டால் அடுத்த 3 முதல் 5 நாட்களில் அதிக காய்ச்சல் இருக்கும். 2 வது முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தப்போக்கு அறிகுறிகள் இருக்கும், உடல் வெப்பநிலையும் உயரக்கூடும் எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகா, தமிழகம் இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவில் குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. அத்தகைய அறிகுறிகளுடன் கூட யாரும் இல்லை. ஆனாலும் அண்டை மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளின் தொடர்ச்சியாக தற்போதும் தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும். அதே போன்று குரங்கு அம்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவிலேயே குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ள ஒரே மாநிலமாக கேரளா உள்ளது.
    • கேரளா சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் குறைந்தபட்ச சோதனை கூட நடத்தப்படாமல் அவர்கள் அனுமதிக்கப்படு வதால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு சீசன் முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களாக ெகாடை க்கானலில் தொடர் சாரல் மழையும், இதமான சீதோஷ்ணமும் நிலவி வருகிறது.

    இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறி ப்பாக கேரளாவில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கண க்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

    கொரோனா கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்ட காலத்தில் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே சோதனைச்சாவடி அமைக்க ப்பட்டு வெளி மாநில சுற்றுலா பயணிகள் கடுமை யான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்ட னர்.

    குறிப்பாக கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய தற்கான சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது எந்தவித சோதனையும் நடத்தப்படு வது இல்லை.

    இதனால் அனைத்து சுற்றுலா பயணிகளும் தடையின்றி பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்ட மாக சுற்றி வருகின்றனர். குறைந்தபட்சம் அவர்கள் முக கவசம் கூட அணியாமல் சுற்றி வருகின்றனர்.

    கேரளாவில் குரங்கு அம்மை நோயால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ள ஒரே மாநிலமாக கேரளா உள்ளது. இதனால் இரு மாநில எல்லைகளில் தீவிர பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. அதன்படி விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை க்கு பிறகே பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வரு கின்றனர்.

    ஏதேனும் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படு கிறது. ஆனால் கொடை க்கானலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கேரளா சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் குறைந்தபட்ச சோதனை கூட நடத்தப்படாமல் அவர்கள் அனுமதிக்கப்படு வதால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவியுடன் பயின்ற 40 மாணவிகளுக்கும், பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாக உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் குரங்கு அம்மை பீதியும் மக்களை வாட்டி வருகிறது.

    எனவே கடந்த கால ங்களில் மேற்கொள்ள ப்பட்டது போல வெளி மாநில சுற்றுலா பயணிகளை சோதனை செய்து கொடை க்கானல் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×