search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகரிக்கும் குரங்கு அம்மை கொடைக்கானலில் கேரள சுற்றுலா பயணிகள் வருகையால் உள்ளூர் மக்கள் அச்சம்
    X
    குரங்கு அம்மை (கோப்பு படம்)

    அதிகரிக்கும் குரங்கு அம்மை கொடைக்கானலில் கேரள சுற்றுலா பயணிகள் வருகையால் உள்ளூர் மக்கள் அச்சம்

    • இந்தியாவிலேயே குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ள ஒரே மாநிலமாக கேரளா உள்ளது.
    • கேரளா சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் குறைந்தபட்ச சோதனை கூட நடத்தப்படாமல் அவர்கள் அனுமதிக்கப்படு வதால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு சீசன் முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களாக ெகாடை க்கானலில் தொடர் சாரல் மழையும், இதமான சீதோஷ்ணமும் நிலவி வருகிறது.

    இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறி ப்பாக கேரளாவில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கண க்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

    கொரோனா கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்ட காலத்தில் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே சோதனைச்சாவடி அமைக்க ப்பட்டு வெளி மாநில சுற்றுலா பயணிகள் கடுமை யான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்ட னர்.

    குறிப்பாக கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய தற்கான சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது எந்தவித சோதனையும் நடத்தப்படு வது இல்லை.

    இதனால் அனைத்து சுற்றுலா பயணிகளும் தடையின்றி பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்ட மாக சுற்றி வருகின்றனர். குறைந்தபட்சம் அவர்கள் முக கவசம் கூட அணியாமல் சுற்றி வருகின்றனர்.

    கேரளாவில் குரங்கு அம்மை நோயால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ள ஒரே மாநிலமாக கேரளா உள்ளது. இதனால் இரு மாநில எல்லைகளில் தீவிர பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. அதன்படி விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை க்கு பிறகே பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வரு கின்றனர்.

    ஏதேனும் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படு கிறது. ஆனால் கொடை க்கானலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கேரளா சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் குறைந்தபட்ச சோதனை கூட நடத்தப்படாமல் அவர்கள் அனுமதிக்கப்படு வதால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவியுடன் பயின்ற 40 மாணவிகளுக்கும், பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாக உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் குரங்கு அம்மை பீதியும் மக்களை வாட்டி வருகிறது.

    எனவே கடந்த கால ங்களில் மேற்கொள்ள ப்பட்டது போல வெளி மாநில சுற்றுலா பயணிகளை சோதனை செய்து கொடை க்கானல் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×