search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Measles"

    • பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
    • சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மையால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலையை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். நிரஜ் கூறியதாவது:-

    குரங்கு அம்மையால் பாதிக்ப்பட்ட 21 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்த குரங்கு அம்மை பரவுகிறது. எனவே வனப்பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். குரங்கு அம்மை ஏற்பட்டால் அடுத்த 3 முதல் 5 நாட்களில் அதிக காய்ச்சல் இருக்கும். 2 வது முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தப்போக்கு அறிகுறிகள் இருக்கும், உடல் வெப்பநிலையும் உயரக்கூடும் எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகா, தமிழகம் இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவில் குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. அத்தகைய அறிகுறிகளுடன் கூட யாரும் இல்லை. ஆனாலும் அண்டை மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளின் தொடர்ச்சியாக தற்போதும் தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும். அதே போன்று குரங்கு அம்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை இவ்வாறு அவர் கூறினார்.

    • காட்டுப்பாளையத்தில் கலெக்டர் உமா தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
    • கோமாரி நோய் தடுப்பூசி பணி திட்டம் 4 வது சுற்று தடுப்பு பணி 26.11.2023 வரை 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகர் ஊராட்சி, காட்டுப்பாளையத்தில் கலெக்டர் உமா தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி திட்டம் 4 வது சுற்று தடுப்பு பணி 26.11.2023 வரை 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,67,796 மாட்டினங்களுக்கும் 63,328 எருமையினங்களுக்கு என மொத்தம் 3,31,124 கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக இத்தடுப்பூசி பணி 15 ஊராட்சி ஒன்றியங்களில் 105 குழுக்கள் ஏற்படுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் தடுப்பூசிப் பணியினை மேற்கொள்ள உள்ளது.

    இந்த வகையில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகர் கிராமம், காட்டுப்பாளையத்தில் இன்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இளநகர் ஊராட்சியில் நடைபெறும் முகாமில் 7 கிராமங்களை சேர்ந்த 348 பசுக்கள், 173 எருமைகள் என மொத்தம் 521 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.

    விவசாயிகள் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருமை ஆகிய கால்நடைகள் இன்று முதல் 21 நாட்களுக்கு அந்தந்த கிராமங்களில் நடைபெறும். பொதுமக்களுக்கு அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில் குறிப்பிட்ட இடங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் குறித்து தெரிவிக்கப்படும்.

    எனவே கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு தங்களது கால்நடைகளை அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசியினை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்தார்.

    இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு டாக்டர் நடராஜன், துணை இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி, உதவி இயக்குநர் டாக்டர் மருதுபாண்டி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் அதிகரித்து வரும் தட்டம்மை நோயால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 58 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கீழக்கரையில் 'ருபெல்லா வைரஸ்' என்றழைக்கப்படும் "தட்டம்மை நோய்" பரவி குழந்தைகளை தாக்குவதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கீழக்கரையில் சில நாட்க ளாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், தொண்டை வலி யுடன் ஆரம்பித்து 'ருபெல்லா வைரஸ்' என்ற ழைக்கப்படும் தட்டம்மை நோயாக உருவெடுத்து அதிகம் பரவி வருகிறது.

    இதுகுறித்து கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் கூறுகையில், எமது பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல் நிலைப்பள்ளிகளில் 3 ஆயி ரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது முதல் கட்ட பயிற்சி தேர்வு நடைபெற தொடங்கி விட்டன. இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளதாகவும் மாணவர்க ளின் பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்ற னர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கீழக்கரை நக ராட்சி பகுதியில் தனி கவ னம் செலுத்தி பரவி வரும் தட்டம்மை நோய் குறித்து சுகாதார துறை மற்றும் நகராட்சி துறையினர் இணைந்து கீழக்கரையில் உள்ள அனைத்து பகுதிகளி லும் சிறப்பு முகாம் அமைத்து சுகாதாரத்தை குறித்து பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    இதுகுறித்து கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் கூறுகையில், தற்போது கீழக்கரையில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. 2 மாதத்திற்குள் இதுவரை யிலும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்துள் ளது. தட்டம்மையை ஒழிப்ப தில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி 9 மாதம் முதல் 15 மாதம் வரை குழந்தைகளுக்கு அந்தந்த தெருக்களிலும் வீதிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து ருபெல்லா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி வந்தது.

    மேலும் 2 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு ஊசி மூலம் செலுத்தும் வழி முறைகளும் உள்ளது. இந்த தடுப்பு ஊசியினை இது வரையிலும் கீழக்கரையில் 48 சதவீத குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ருபெல்லா வைரஸ் என்பது குழந்தை உண்டாகும்போது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றார்.

    மேலும் சர்வதேச அள வில் ருபெல்லா வைரஸ் தட்டம்மை ஒழிப்பு 100 சதவீதம் என்று அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் கீழக்கரையில் ருபெல்லா வைரஸ் தட்டம்மை குழந்தை களை தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் கீழக்கரை முழு வதும் கணக்கெடுப்பு நடை பெற்று வருகிறது என்றார்.

    குழந்தை மருத்துவர் ஹாசிம் கூறியதாவது:-

    இதுவரையிலும் ருபெல்லா வைரஸ் தடடம்மை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 வயது வரை உள்ள குழந்தை களுக்கும் செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசி அரசு மருத்துவ மனையில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனையில் 600 முதல் 700 ரூபாய்க்கு செலுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம்.

    மேலும் ருபெல்லா வைரஸ் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிமோ னியா, மூலை காய்ச்சல், கண்பார்வை தாக்குதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த ருபெல்லா வைரஸ் தட்டம்மை 30 வருடத்திற்கு முன்பே முற்றிலும் ஒழிக்கப் பட்டுள்ளது. மீண்டும் கீழக்கரையில் உருவெடுத்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுகா தாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • 150 மாடு, கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் தாலுகாகீரனூர் கிராமத்தில் கால்நடைத்துறை மூலம் மாடுகள், கன்றுகளுக்கு கால்கானை, வாய்க்கானை எனப்படும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமுனியசாமி தலைமை தாங்கினார்.

    கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர்கள் வீரன், சமாதான ஜெபமாலை மேரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செந்தில்வேல் ஆகியோர் கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைத்தியனேந்தல், மேலப்பனைக்குளம், கீழப்பனைக்குளம் கிராமங்களில் 150 மாடு, கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • பசு மாடுகளுக்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • பெரியம்மையால் மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    குடிமங்கலம் :

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் பசு மாடுகளுக்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் நாட்டு மாடுகளை காட்டிலும் கலப்பின மாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடிக்கும் பூச்சிகள், உண்ணிகள், கொசுக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து மற்ற மாடுகளுக்கு பரவுகிறது.

    நோயுற்ற மாடுகளின் எச்சம், ரத்தம், கொப்புளங்கள் மற்றும் விந்தணுக்கள் மூலம் பரவுகிறது. நோயுற்ற தாய் பசுவிடம் இருந்து கன்றுக்கும் பரவுகிறது.இதற்கான சிகிச்சை முறை பற்றி, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பெரியம்மையால் மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.வெற்றிலை 10, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம், வெல்லம் ஆகியவற்றை அரைத்து, தேவையான அளவு நாக்கில் தடவி கொடுக்க வேண்டும்.

    குப்பை மேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை (ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி), மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பல் ஆகியவற்றை அரைத்து 500 மி.லி., நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து கொதிக்க வைத்து பின்னர் ஆற விட்டு காயங்களை சுத்தப்படுத்திய பின் மருந்தை மேலே தடவ வேண்டும்.காயத்தில் புழுக்கள் இருந்தால், சீத்தாப்பழ இலையை அரைத்து காயத்தில் தடவ வேண்டும். அல்லது பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து காயத்தில் விட்டு புழுக்களை அப்புறப்படுத்தி பின்னர் மருந்து போட வேண்டும்.முக்கியமாக நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். பண்ணையின் சுத்தம், சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கொட்டகையை சுத்தம் செய்ய வேண்டும். கொட்டகையை காற்றோட்டமாகவும், சூரிய ஒளிபடுமாறும் அமைக்க வேண்டும் என்றனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாடுகள், அதிக காய்ச்சல், பசியின்மை, சோர்வு மற்றும் உடல் எடை குறையும். கண்களில் வீக்கம் மற்றும் நீர் வடிதல் இருக்கும். அதிக உமிழ்நீர் சுரப்பும் இருக்கும். பால் உற்பத்தி குறையும். தலை, கழுத்து, கால்கள், மடி, இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றில் 2 முதல் 5 செ.மீ., அளவுக்கு கொப்புளங்கள் தென்படும். தோலின் மீது ஏற்படும் இந்த கொப்புளங்கள் உறுதியாக வட்டமாக நன்கு உப்பியிருக்கும். மிகப்பெரிய கொப்புளங்கள் சீழ் பிடித்து புண்ணாகி பின்னர் அதன் தழும்புகள் தோலில் இறுதி வரை மறையாமல் இருக்கும். கொப்புளங்களில் புழுக்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது என்றனர்.  

    பிலிப்பைன்சில் வேகமாக பரவி வரும் அம்மை நோய் குறித்து அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. #PhilippinesMeasles
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலா உட்பட  பல்வேறு இடங்களில் இந்த ஆண்டின் துவக்கம் முதலே அம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் அம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 26 அன்று அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 1813 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 26 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 74% அதிகமாகும். குறிப்பாக இந்த அம்மைநோய்க்கான வைரஸ், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை  வேகமாக தாக்கக்கூடியதாகும். அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகும். ஆனால் டெங்கு தடுப்பூசி போடப்பட்டபோது ஏற்பட்ட பக்கவிளைவுகளைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் 2.4 மில்லியன் குழந்தைகள் நோய்த்தடுப்பூசி போடாமல் உள்ளனர்.   

    இதையடுத்து தற்போது 95% நோய்தடுப்பு வீதம் குறைந்துள்ளது என பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் குண்டோ வெயிலர் கூறினார். மேலும் அம்மை நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குண்டோ கூறினார்.

    இந்த வைரஸினால் முதலில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பின்னர் கண்களில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, உடலின் அனைத்து இடங்களிலும் சிவப்பு நிறத்தில் தடித்து இருக்கும். இவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இந்த அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  # PhilippinesMeasles

    ×