search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Precautions"

    • பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
    • சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மையால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலையை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். நிரஜ் கூறியதாவது:-

    குரங்கு அம்மையால் பாதிக்ப்பட்ட 21 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்த குரங்கு அம்மை பரவுகிறது. எனவே வனப்பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். குரங்கு அம்மை ஏற்பட்டால் அடுத்த 3 முதல் 5 நாட்களில் அதிக காய்ச்சல் இருக்கும். 2 வது முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தப்போக்கு அறிகுறிகள் இருக்கும், உடல் வெப்பநிலையும் உயரக்கூடும் எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகா, தமிழகம் இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவில் குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. அத்தகைய அறிகுறிகளுடன் கூட யாரும் இல்லை. ஆனாலும் அண்டை மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளின் தொடர்ச்சியாக தற்போதும் தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும். அதே போன்று குரங்கு அம்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    உடுமலை:

    கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. இதனைத் தடுக்க கேரள அரசு நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளது.

    இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கால்நடை டாக்டர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய குழுவினர் கல்லாபுரம், மானுப்பட்டி, கோடந்தூர், தளிஞ்சி, ஜல்லிப்பட்டி, செல்லப்பம்பாளையம், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளைக் கண்காணிக்கின்றனர்.

    மேலும் இனிவரும் நாட்களில் ஏதேனும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற கால்நடை வளர்ப்போரிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-

    மாநில எல்லை கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு கிடையாது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் உள்ள கால்நடைகள் கண்காணிக்கப்படுகிறது.

    கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்தே கேரளாவுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கால்நடைகள் பெருமளவு கொண்டு வரப்படுவதில்லை. இருப்பினும் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 1.60 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஆபத்தை விளை விக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 1.60 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கிருஷ்ணராஜா சாகர் அணை, கபினி அணை

    களில் இருந்து அதிக அள விலான நீர் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. ஏற்கனவே சுமார் 1.60 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், தற்போது 2.10 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொது மக்க ளுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து அதிக அள வில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளை விக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணை யின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி கள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்க கிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

    குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டு வதையோ, புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்ப தையோ முற்றிலும்தவிர்த்திட வேண்டும். மீறினால் காவல்து றைமூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • டாக்டரை நாடி ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது
    • கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிடக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. இம்மாத துவக்கத்தில் 0.3 சதவீதமாக இருந்த தொற்று பரவல் மெல்ல அதிகரித்து, 2.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் தொற்று வேகமெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், தொற்று தடுப்பு பணிகளை முடுக்கி விட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.முதல் கட்டமாக மருத்துவ கல்லூரியில் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருவோர் தொடர் உடலக்குறைவு இருந்தால் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளதால், அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு, 50 படுக்கைகளுடன் துவங்கப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனைக்கான வசதிகள் தயாராக உள்ளது. சுகாதாரத்துறை அறிவுறுத்திய பின் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். அறிகுறி இருப்பவர்கள் சந்தேகம் இருந்தால் டாக்டரை நாடி ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது என்றார்.

    மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் கூட முதல்தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் ஒரு லட்சம் பேர் உள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி 3லட்சம் பேருக்கு செலுத்த வேண்டியுள்ளது.மருத்துவ கல்லூரி, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் முன்வந்து செலுத்தி கொள்ள வேண்டும். தற்போது தொற்று பாதித்தவரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தாதவர்களா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றார்.

    கடந்த5 மாதங்களாக திருப்பூர் பின்னலாடை தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் கொரோனா பயமின்றி பயணித்துவருகின்றனர். மேலும் தொற்று தடுப்பு வழிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை.மெல்லமெல்ல கொரோனா தலை தூக்கும்நிலையில்மீண்டும் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நான்காவது அலை உருவாகாமல் தடுப்பது அவசியமாகிறது.

    கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிடக்கூடாது.பின்னலாடை தொழிலாளர் பணிக்கு வரும்போதும், பணி முடித்து வீட்டுக்குச் செல்லும்போதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கவேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். நிறுவனங்களின் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.அனைவரும் தவறாமல் முக கவசம் அணியவேண்டும். தொழிலாளர்கள் கைகழுவுவதற்காக நிறுவன வளாகத்தில், சோப், தண்ணீர் வழங்கவேண்டும்.

    இதுவரை தடுப்பூசி செலுத்தாதோர், தாமதிக்காமல் உடனே தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.ஒவ்வொரு பின்னலாடை உற்பத்தி நிறுவனமும், உடனடியாக தொற்று தடுப்பு அம்சங்களை செயல்படுத்தவேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு, கொரோனாவின் கொடிய அலைகளிடமிருந்து பின்னலாடை தொழில் வளர்ச்சியை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

    • தியாகதுருகம் அருகே தேசிய பேரிடர் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் பாலு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தேசிய பேரிடர்மீட்பு படை உதவி ஆய்வாளர் சஞ்சீவதேஸ்வால் தலைமை யில் நிலநடுக்கம் ஏற்படும் போதும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மற்றும் பாது காப்பு குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் 15-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், ரூபா தேவி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×