search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Psychotherapy"

    • அம்மான் பச்சரிசி இலையை கீரையாக சாப்பிட்டு வர வேண்டும்.
    • தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி அல்லது லேகியம்

    புரொலெக்டின் ஹார்மோன் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன் சீராக இருந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

    பால் சுரப்பை அதிகரிக்க உதவும் சித்த மருந்துகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள்:

    1) தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி அல்லது லேகியம்: காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் வீதம் சாப்பிட வேண்டும்,

    2) சவுபாக்கியசுண்டி லேகியம்: காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் வீதம் சாப்பிடலாம்,

    3) வெந்தயத்தை பொடித்து, பனை வெல்லம், நல்லெண்ணெய் சேர்த்து களியாக கிண்டி காலை இரவு இருவேளை கொடுக்க வேண்டும். இது போன்று உளுந்தங்களி செய்து சாப்பிடலாம்.

    4) பூண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது பூண்டு குழம்பு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    5) அம்மான் பச்சரிசி இலையை கீரையாக சாப்பிட்டு வர வேண்டும்.

    6) பெருஞ்சீரகம் பால் சுரப்பை அதிகரிக்கும், பெருஞ்சீரக டீ அல்லது பெருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.

    7) பாதாம் பால் குடிக்கலாம். கருப்பட்டியில் செய்த கருப்பு எள்ளுருண்டை சாப்பிட வேண்டும்.

    8) பசலைக்கீரை, அரைக்கீரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 9) பப்பாளிக்காயை கூட்டு வைத்து சாப்பிட வேண்டும்.

    10) பால், தயிர், கேரட், கேழ்வரகு, முருங்கைக்காய், பாலாடைக்கட்டி, சுறா மீன், பாறை மீன், ஓட்ஸ் கஞ்சி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு.

    பூசணி சாறு, பூசணி விதை, ஆளி விதை. ப்ளாக் சீட்ஸ் எனப்படும் அலிசி விதை, பருத்திப் பால், பார்லி கஞ்சி, பாதாம் பருப்பு, செவ்விளநீர், கடல் பாசி இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    11) குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வேண்டும். பால் இல்லை என்றாலும் குழந்தையை அணைத்து பால் குடிக்க வைக்க வேண்டும்.

    தொடர்ச்சியாக இவ்வாறு செய்வதன் மூலமாக, புரொலெக்டின் மற்றும் அன்புக்குரிய ஹார்மோன் ஆக்சிடோசின் போன்றவை அதிகரித்து பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

    • சித்த மருந்துகளை பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்சினை தீரும்.
    • விந்தணுக்களின் எண்ணிக்கையையும், இயக்கத்தையும் அதிகப்படுத்த உதவும்.

    விந்தணுக்களின் எண்ணிக்கையையும், இயக்கத்தையும் அதிகப்படுத்த உதவும் உணவு வகைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சித்த மருந்துகளை பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்சினை தீரும்.

     உணவுகள்:

    நாட்டுக்கோழி முட்டை,இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்தி, சாளை மீன்கள், பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், செவ்வாழை, நேந்திரம், பேரீச்சை, திராட்சை பழம், பொரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளைப்பழம், சின்ன வெங்காயம், பூண்டு, கீரைகளில் பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, காய்கறிகளில் தக்காளி, புடலங்காய், அவரைப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, முருங்கைக் காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கிழங்குகளில், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு, இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இது உடல் சூட்டை தணிக்கும். கோடை காலத்தில் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அதை சிறிதளவு சாப்பிட்டு வர உடல் வெப்பம் குறையும்.

    இளநீர், மோர், முலாம் பழம், கிர்ணிப்பழம் இவைகளை எடுத்து வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். இந்த பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.

     கீழ்க்கண்ட மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

    1) அமுக்கரா சூரணம் ஒரு கிராம், பூனைக்காலி விதை சூரணம் ஒரு கிராம் வீதம் மூன்று வேளை பாலில் கலந்து குடிக்கலாம்.

    2) சாலாமிசிறி லேகியம் 5 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) பூரண சந்திரோதயச் செந்தூரம் 100 மி.கி. நாகப்பற்பம் 100 மி.கி. வெள்ளி பற்பம் 100 மி.கி. இவைகளை ஒரு கிராம் அமுக்கரா சூரணத்தில் கலந்து இருவேளை சாப்பிட வேண்டும்.

    ×