என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Security"
- ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை ரயில் நிலையத்தி லிருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்போது வழி நெடுகிலும் கூடியிருந்த பெண்கள் ஆர் எஸ் எஸ் கொடிக்கு மலர் தூவி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலமானது நாகை அவுரித்திடலில் நிறைவடைந்தது.
அதன் பின்னர் அவுரித்தி டலில் கொடியேற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியை செய்து காண்பித்தனர்.
நாகையில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
- இரவு முழுவதும் வியாபாரம் செய்ய போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
- வணிகர்களிடம் அரசு அதிகாரிகள் எனக்கூறி வசூல் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட, நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார், செயலாளர் ஆனந்த், பொருளாளர் சோலையம்மாள் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இரவு முழுவதும் வியாபாரம் செய்வதற்கு போலீசார் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறு வணிகர்களையும், சாலையோர வியாபாரிகளையும் கடையை அடைக்க சொல்லி வற்புறுத்தக் கூடாது.
வணிகர்களை அந்தந்த பகுதியில் உள்ள சமூக விரோதிகள் சட்ட விரோதமாக பணம் கேட்டு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
வணிகர்களிடம் அரசுத்துறை அதிகாரிகள் என கூறி கட்டாய வசூல் செய்தும், பொருட்கள் கேட்டு தொல்லை கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகின்ற 19ஆம் தேதி புதிதாக தலைமை கட்டிட திறப்பு விழாவிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தப்பட்டது.
இதில் பொறுப்பாளர்கள் வல்லம் கோவிந்தராஜ், திருக்காட்டுப்பள்ளி தியாக சுந்தரமூர்த்தி, பூதலூர் சண்முகராஜ், செங்கிப்பட்டி நந்தகுமார், ஒரத்தநாடு மணிசுரேஷ், பட்டுக்கோட்டை வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- கடையின் வெளியே வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
- கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
பேராவூரணி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த கடைகளுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர உரிமம் வழங்கப்படுகிறது. நிகழாண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் சில இடங்களில் வெடிவிபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.
எனவே, பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
இதனால் பெரும்பாலான கடை களுக்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பேராவூரணி பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்த கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும். தீ தடுப்பு கருவி இருக்க வேண்டும். மின் இணைப்புகள் பழுதின்றி இருக்க வேண்டும். கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும், அவசர கால வழி கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பேராவூரணி வட்டாட்சியர் ஆர். தெய்வானை, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயதுரை, முருகேசன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் கமலநாதன், கிராம நிர்வாக அலுவலர் சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- பெரிய ஜவுளிகடைகளில் புத்தா டைகள் வாங்குவதற்காக கார்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
- சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது.
நெல்லை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ஜவுளிகள் வாங்குவதற்காக கடை வீதிகளில் கூட்டம் அலை மோதிய வண்ணம் உள்ளது.
நெல்லை
நெல்லை மாநகரை பொருத்தவரை டவுன் ரதவீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டி உள்ளது. பெரிய ஜவுளிகடைகளில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
மேலும் டவுன் வடக்கு ரதவீதியில் தள்ளுவண்டி கடைகளிலும் புத்தாடைகள் வாங்குவதற்கு நடுத்தர மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் புதிதாகவும், ஏராளமான பிளாட்பாரம் ஜவுளிக்கடைகள் தோன்றி உள்ளன. அங்கு சலுகை விலைகளில் விற்கப்படும் ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அங்குள்ள பெரிய ஜவுளிகடைகளில் புத்தா டைகள் வாங்குவதற்காக கார்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது.
போக்குவரத்து நெருக்கடி
இதேபோல் வண்ணார்பேட்டையிலும் சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது.
இதுதவிர பலகாரங்கள் வாங்கும் கடைகள், பட்டாசு கடைகள் உள்ளிட்டவற்றி லும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
மாவட்டத்தில் வள்ளியூர், அம்பை, களக்காடு, திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் பஜார்களில் ஜவுளிகடைகள், நகை கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், திருட்டை தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநகரில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டவுனில் 4 ரதவீதிகளிலும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள காமிராக்கள் தவிர கூடுதலாக நவீன காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.
இதுதவிர வடக்கு ரதவீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து மாநகர போலீசார் கூட்ட நெரிசலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதற்கான பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் ஆதர்ஸ் பசேரா, அனிதா, சரவண குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் ஜவுளி கடைகளை நோக்கி பொதுமக்கள் படை யெடுத்து வருகின்றனர்.
சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதி களிலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. தென்காசி பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகர பகுதிகள் மற்றும் கோவில்பட்டி, திருச் செந்தூர், ஸ்ரீவை குண்டம், ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஜவுளி கடைகள் முன்பு திரளான மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.
இன்று விடுமுறையை யொட்டி காலை முதலே பொதுமக்கள் குடும்பத்தி னருடன் சென்று தங்களுக்கு பிடித்த புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- பொதுமக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வருகிற 10 -ந் தேதி மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து விழா மேடை அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் நாறவாக்கம் மற்றும் கைப்பணி குப்பம் இடை யில் உள்ள கடற்கரை ஓரமுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். இந்த இடத்தினை விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஈஸ்ரூதன் ஜெய் நாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
அப்போது விழா மேடை எப்படி அமைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும். முதல்- அமைச்சருடன் வரும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எந்தெந்த இடங்களில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய குடிநீர் உணவு இருக்கைகள் மின் வசதி போன்றவைகள் எவ்வாறு அமைத்து தர வேண்டும் போன்றவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், மாவட்ட கவுன்சிலர் புஷ்ப வல்லி குப்புராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.
- கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது.
- இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.
விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் சோதனை முதல் விமான பயணிகளின் உடைமைகள் வரை அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் பெட்டிகளும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
மேலும் விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர பயணிகள் எவரேனும் சந்தேகப்படும் வகையில் விமான நிலைய பகுதிக்குள் நுழைந்திருந்தால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது .
- 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.
- பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கொக்குபாளையம் மற்றும் நல்லூர் பாளையம், காடாம்புலியூர் பகுதியில் உள்ள மேலிருப்பு பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து குடோ ன்களில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை,காவல் துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை மேம்பாட்டு வாரியம் மேற்கண்ட 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் தொழிற்சாலைகளின் துணை இயக்குநர் மகேஷ்வரன், பண்ருட்டி சிறப்பு திட்ட தனி தாசில்தார் பிரகாஷ்,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தொழிலாளர் அலுவலர் ஆகியோர்உடனிருந்தனர்.ஆய்வின்போது விதிமீ றல்கள் ஏதாவது உள்ளதா? எனவும்,பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.
- குடிநீர், வாறுகால் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை சுற்றி இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.
- விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி:
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்தின் அருகே சாலையோரங்களில் குடிநீர் பைப் மற்றும் வாறுகால் பணிகள் மேற்கொள்வதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை சுற்றி இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பாவூர்சத்திரம் நான்கு முக்கு சாலையில் பணிகள் நடைபெற்று வருவதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே செல்லும் போது நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று பெரும் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி செல்லும் கனரக லாரிகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் அந்தச் சாலை வழியாக செல்வதால் வாகனங்கள் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழும் அபாய நிலையும் உள்ளது.
எனவே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க பாவூர்சத்திரம் நான்குமுக்கு சாலையில் வாகன நெருக்கடி ஏற்படாத வண்ணம் போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமண உறவானது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டும்.
- எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும்.
மனிதராக பிறந்த ஒவ்வொருக்குள்ளும் காதல் உணர்வு என்பது கண்டிப்பாக இருக்கும், ஆண் - பெண் என யாராக இருந்தாலும் சரி காதலிக்காமல் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும். ஆரோக்கியமான காதலில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஆறுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.
நம்முடைய திருமண உறவானது நமது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தொந்தரவாக இருக்கக்கூடாது. சிலர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில விஷயங்கள் அவர்களது துணைக்கு பெரும் தொல்லையாகவோ அல்லது அவர்களது வளர்ச்சியை தடுக்கக்கூடியதாகவோ இருந்துவிடக்கூடும்.
* கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை வருவது என்பது சகஜமான ஒன்றுதான், அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்றப்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வைப் பாதிக்கக்கூடும். மன மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும், மேலும் இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.
* கணவன்-மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது, அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன்-மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க, உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.
* உங்கள் கணவனை-மனைவியை ஒருபோதும் உங்கள் முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டு பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே தான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன்-மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.
* உங்கள் கணவன்-மனைவியின் தொலைபேசி அல்லது பிற சமூக வலைதள பக்கங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும், இது உங்கள் துணையின் தனி உரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும், இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் துணைக்கும் ஒரு வித மனசோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேக கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தி உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
* உங்கள் துணையின் சில பழக்கவழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் உங்கள் துணை யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. இப்படி அவர்களது விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது.
- பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
- முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 31-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.
இதற்கு பா.ஜனதா மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்குகிறார்.
இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.
அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாஷம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.
ஊர்வலமானது மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
5ஆளில்லா குட்டி விமானங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
100-க்கும் மேற்பட்ட இடத்தில் போலீசார் நிறுத்தி பைனாக்குலர் பயன்படுத்த உள்ளது.
மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.
ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன், திருச்சி டிஐஜி பலவன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், மயிலாடுதுறை எஸ்பி மீனா, தஞ்சை எஸ்.பி ஆஸிஷ் ராவத், எஸ்ஐயூ எஸ்பி பாண்டியராஜன், திருச்சி டிராபிக் எஸ்பி செல்வகுமார், சேலம் எஸ்பி மதிவாணன், கரூர் எஸ்பி சுந்தரவதனம், கடலோர காவல் படை எஸ்பி அதிவீரப்பாண்டியன், திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார், அரியலூர் எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உட்பட 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவலர் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும், கமோண்டோ போலீசாரும் வந்துள்ளனர்.
மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.