search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actions"

    • யாருடைய தலையீடு இருந்தாலும் அச்சமின்றி தங்கள் பணி களை மேற்கொள்ள வேண்டும்.
    • மருத்துவர்கள் முழுமையாக கண்காணித்து சிகிச்சை அளித்திட வேண்டும்.

    விழுப்புரம்:

    அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் டாக்டர் சி.பழனி தலைமை யில், விழுப்புரம் நாடாளு மன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்.எல்.ஏ. க்கள் நா.புகழேந்தி, டாக்டர் லட்சு மணன் ஆகியோர் முன்னி லையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில், கள்ளச் சாராயம் கட்டுப்படுத்து வது குறித்து மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, வருவாயத்துறை மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. அப்போது அமைச்சர் பொன்முடி தெரிவிக்கை யில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், கள்ளச்சாரா யத்தை கட்டுப் படுத்துவதில் எந்தவித சமரசமின்றி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் முற்றிலும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிடும் பொருட்டு தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தொடர் நடவடிக்கையாக நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் வருவாய்த்துறையினைச் சேர்ந்தவர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் தங்கள் பகுதி களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படு கின்றதா என்பது குறித்து கண்காணிப்பதோடு, கள்ளச்சாராயம் குறித்த தகவல் கிடைக்கப்பெ ற்றால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது காவல்துறைக்கு முதல் தகவல் அளிப்ப வர்களாக செயல்பட வேண்டும்.

    மேலும், காவல்துறை யினைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்டுப்பாட்டு பகுதி களுக்குள் எந்த சூழ்நிலையிலும் கள்ளச்சாராயத்தினை அனுமதி க்கக் கூடாது என்ற நிலைப்பாட் டினை எடுத்துக்கொண்டு உறுதியுடன் பணியாற்றிட வேண்டும். யாருடைய தலையீடு இருந்தாலும் அச்சமின்றி தங்கள் பணி களை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தி லுள்ள 9 சோதனை சாவடி களில் முழு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் பயன் பாட்டிலிருந்து பொது மக்களை விடுவித்து பாது காப்பது போலீசாரின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருப வர்கள் முழுமையாக குண மடைந்து அவரவர் வீடு களுக்கு திரும்பி சென்ற பின்பும் மருத்துவர்கள் முழுமையாக கண்காணித்து சிகிச்சை அளித்திட வேண்டும். சமய மேல்பாதி கிராம த்தில் உள்ள கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுபா ட்டின்கீழ் இயங்கி வருகிறது.

    இக்கோவிலில் அனைத்து சமூகத்தினரும் சமூக நீதியினை கடைப்பிடித்திடும் வகையில் அனை வரும் வழிபடு வதற்கான உரிமை தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்டுள்ளது. ஆகையால் அனைத்து தரப்பு மக்களும் கோவில் சென்று வழிபடு வதற்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள ப்படும். பொதுமக்களும் அரசால் மேற்கொள்ள ப்பட்டு வரும் நடவடிக்கை களுக்கு ஒத்து ழைப்பு வழங்கிட வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். ஆய்வுக்கூட்டத்தில் ஐ.ஜ. கண்ணன், டி.ஐ.ஜி. பகல வன், போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்ச ந்தி ரன், திண்டி வனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் கோட்டாட்சி யர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
    • கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயத்தை கலெக்டர் வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், பொது–மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 235 மனுக்களை அளித்தனர்.

    இந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்–திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.9050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் கூடிய கேடயத்தினையும் கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்–திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மண்டல தலைவர்களுக்கு என சிறப்பு நிதி
    • மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீடு

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம், பலவஞ்சிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இதற்கு 4-வது மண்டல தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ள நிலையில், மண்டல தலைவர்களுக்கு என சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

     அதன்படி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டுகளுக்கும் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வார்டு உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான நிதியை பெற்று, வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளலாம். முதல்முறையாக மண்டல தலைவர்களுக்கு என தனி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறி அதனை சரி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல தலைவர் பத்மநாபன் உறுதி அளித்தார்.

    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 1.60 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஆபத்தை விளை விக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 1.60 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கிருஷ்ணராஜா சாகர் அணை, கபினி அணை

    களில் இருந்து அதிக அள விலான நீர் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. ஏற்கனவே சுமார் 1.60 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், தற்போது 2.10 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொது மக்க ளுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து அதிக அள வில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளை விக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணை யின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி கள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்க கிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

    குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டு வதையோ, புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்ப தையோ முற்றிலும்தவிர்த்திட வேண்டும். மீறினால் காவல்து றைமூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற ஓராண்டில் தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் நிறைவேற்றப்பட வேண்டியவைகளை உடனுக்குடன் தனியே பிரித்து கலெக்டரிடம் வழங்கியிருந்தார்.
    • 1232 மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக முகமது ஷாநவாஸ் பொறுப்–பேற்றதில் இருந்து கடந்த மாதம் வரை ஓராண்டில் தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில், மாவட்ட நிர்வாகம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய மனுக்களை உடனுக்குடன் தனியே பிரித்து கலெக்டரிடம் வழங்கியிருந்தார். அப்படி வழங்கப்பட்ட 1232 மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் தாசில்தார், தனி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ×