search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demands"

    • கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை இயக்குனர், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குனர், மருத்துவம், ஊரக நல பணிகள் துறை இயக்குனர் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    • ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர்.
    • ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாதாரண ஆட்டோக்களை (அபே ஆட்டோ) இயக்குபவர்களும், ஷேர் ஆட்டோக்கள் செல்லும் வழித்தடங்களிலே தங்கள் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி செல்கி ன்றனர். இதனால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட ஷேர் ஆட்டோ டிரை வர்கள் இன்று தங்கள் ஆட்டோ க்களை இயக்காமல், பஸ் நிலையம் அருகில் சாலையோரம் ஆட்டோ க்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் மனு அளித்தனர். ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அரசு வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், மாற்றுத்தி றனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அரசு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்டத் துணைச் செயலா ளர்கள் ராஜன், சாமியப்பன், ராதிகா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இதில் மாற்றுத்திறனா ளிகள் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உளவுத்துறை கண்காணிப்பு குறைவால் இதுபோன்ற தாக்குதல் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது.
    • வருங்காலத்தில் பல இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லவும், ஆயுத கலாசாரம் பெருகவும், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாடு ஆயுதகாடாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.

    திருப்பூர்

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கம்பம் மலை தேயிலை தோட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகம் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதலை நடத்திவிட்டு எச்சரிக்கை செய்வது போல் கருத்தை பதிவிட்டு சென்றுள்ளனர். தமிழகத்தில் நக்சல் தீவிரவாதிகள் தலை தூக்குகின்றனர் என்றும், எல்லையில் உள்ள காடுகளில் பதுங்கி பயிற்சி எடுத்து வருகிறார்கள் என்றும், காவல்துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து நக்சலைட்டுகளை ஒடுக்க வேண்டும் என்றும் பலமுறை தமிழக அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    தற்போது தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதால் இந்த தாக்குதல் நீலகிரியில் நடந்துள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு குறைவால் இதுபோன்ற தாக்குதல் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் நக்சல் தடுப்பு போலீஸ் பிரிவு செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வருங்காலத்தில் பல இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லவும், ஆயுத கலாசாரம் பெருகவும், அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாடு ஆயுதகாடாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழக அரசு நக்சலைட்டுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
    • 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட மையம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மடியேந்தி போராட்டம் மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்தில் தமிழக முதல்வர் காலை சிற்றூண்டி உணவு திட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆகிய நாங்கள் வரவேற்கிறோம்.

    அதே சமயத்தில் அதனை சத்துணவு ஊழியர் ஆகிய எங்களிடமே வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான காலம் முறை ஊதி யத்தை வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    மாவட்ட செயலாளர் ராஜு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுச்செய லாளர் ராணி, மாவட்ட பொருளாளர் அந்துவ ன்சேரல், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி, நாகை வட்ட கிளையின் தலைவர் ரவிச்சந்திரன், சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பழகன் நிறைவுரை யாற்றினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். 

    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பஞ்சாலை ஓய்வூதியர்கள் உண்ணாவிர போராட்டம் நடத்தினர்.
    • உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பஞ்சாலை ஓய்வூதியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். சிவசாமி முன்னிலை வகித்தார்.சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி பேசினார். மின் ஊழியர் ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திர பாபு வாழ்த்தி பேசினார். ஓய்வு பெற்றோர் நல சங்க பஞ்சாலை மாவட்ட செயலாளர்.வெங்கடசுப்பிரமணியன் போராட்டத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில், குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 9 ஆயிரம் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வந்த ெரயில்வே கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி உயர் உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
    • விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில்  நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விவசாயிகள், திண்டிவனத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மரவள்ளி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுர் அணைக்கட்டை சுற்றி மண் அணைப்பு செய்திருக்கும் இடத்தில் மண் சரிவு வராமல் பாதுகாக்க பனைக்கன்றுகள் நட வேண்டும். விவசாயிகளின் பாரம்பரிய நெல் விதைகளை வேளாண் உற்பத்தியா ளர்கள் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள், அரசாங்க புறம்போக்கு இடங்கள், சுடுகாடு, வழிப்பாதை போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். மாதந்தோறும் விவசாயிகள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளும் உரிய அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது விவசாயிகள் வைத்த கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளின் கோரி க்கைகள் நிறைவேற்ற ப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் சண்முகம், மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம் லட்சுமி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கம் யசோதா தேவி, மேலாண்மை இயக்குநர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இளஞ்செல்வி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை ஷோபனா, வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இளங்கலை டாக்டர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    மருத்துவ தேசிய ஆணையம் கொண்டு வந்துள்ள இளங்கலை மருத்து வர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் தலைமை வகித்தார்.

    இளங்கலை மருத்துவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    மருத்துவ பாடத்திட்டங்களில் குழப்பத்தை ஏற்படு த்தும் நெக்ஸ்டை நடை முறைப்படுத்தக் கூடாது.

    இத்தேர்வை ரத்து செய்யக்கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் யோகா பயிற்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
    • தினமும் 30 நிமிடம் யோகா செய்வதை கட்டாயமாக்க பட வேண்டும்.

    கோவை,

    உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரியகுளம் அருகே, பா.ஜ.க சார்பில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, சுதாகர்ரெட்டி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உள்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். அப்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் யோகா பயிற்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்று உள்ளது. சர்வதேச நாடுகளும் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

    இதன் மூலம் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருகிறது. யோகா கலையின் மூலம் இந்தியா உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை வழங்கி உள்ளது

    .

    கோவை மாநகராட்சி நிர்வாகம் பூங்காக்களில் யோகா செய்ய தனி இடம் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும். இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. ஆரோக்கியம் தொடர்பானது.

    யோகா செய்வதால் மாணவர்களின் மன அழுத்தம் குறைந்து, வழி தவறி செல்வது போன்ற அம்சங்களில் இருந்து விடுபட முடியும். தினமும் 30 நிமிடம் யோகா செய்வதை கட்டாயமாக்க பட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி ஆபரேஷன் முடிந்து பூரண குணமாக வேண்டும். அதற்காக என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தார் சாலை தரமற்றதாக போடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர்.
    • மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்த எம்.எல்.ஏ., செல்வராஜ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 52 வது வார்டு வெள்ளியங்காடு பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் தண்ணீர் பிரச்சனை தற்போது ஓரளவு சீர்செய்யப்பட்டிருப்பதாகவும் அதே போல் சாக்கடையை அடிக்கடி தூர்வார வேண்டும் எனவும் தார் சாலை தரமற்றதாக போடப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

    உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்த எம்.எல்.ஏ., செல்வராஜ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். மேலும் முதியோர் உதவித் தொகை , மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என ஏராளமான பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கைகள் அனைத்தையும் பணிவுடன் கேட்டு அறிந்த எம்.எல்.ஏ., உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டு சென்று அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • தொகுதிக்குள் வருவதில்லை என தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பி உள்ளார்.
    • பொதுமக்கள் பட்டா கேட்டும், பேருந்து வசதி கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்., ஆனந்தன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகே ஆலூத்துபாளையம் பகுதியில் கடந்த 9 ந்தேதி புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான நான் தொகுதிக்குள் வருவதில்லை என தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பி உள்ளார். மேலும் பொதுமக்கள் பட்டா கேட்டும், பேருந்து வசதி கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே நான் சட்டமன்ற த்தில் பேசி உள்ளேன். பலமுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். பல்லடம் தொகுதியின் அடிப்படைத் தேவைகளான 10 முக்கிய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசிடம் சமர்ப்பித்தும் இன்னும் அவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் பல்வேறு குறைகளை என்னிடம் தெரிவித்து உள்ளனர். எனவே அவர் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதை விடுத்து திருப்பூர் தெற்கு தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்து தருமாறு கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

    பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் களத்தூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செய ற்குழு விஎஸ்.கலிய பெருமாள், என்.ராதா, எஸ்.இளங்கோவன், காமராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அரசு அதிகாரிகள் கோரி க்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததன் அடிப்படையில்எழுத்து ப்பூர்வமாக எழுதி வாங்க ப்பட்டு போராட்டம் தற்காலி கமாக ஒத்திவை க்கப்பட்டது.

    ×