search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councillors"

    • கவுன்சிலர்கள்,மண்டல தலைவர்களுக்கு சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர் உலகநாதன் பேசினார்.
    • கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு தபால் தலை

    தொடர்ந்து தீர்மான ங்களை வலியுறுத்தி மேயர் சரவணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் அதிகளவில் நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதோடு, முதல் தலை முறை பட்டதாரிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, தமிழக தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா மற்றும் நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக மாநகராட்சியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலைகளை மத்திய அரசு வெளியிட வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தி.மு.க. கவுன்சிலர் சங்கர் கூறும்போது, எங்களது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக சரிவர குடிநீர் வினியோ கிக்கப்படவில்லை. எனவே உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா பேசும்போது, 41-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசும்போது, பாதாள சாக்கடை 3-ம் கட்ட பணிகள் எப்போது தொடங்கும்? முறப்பநாடு குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகர விரிவாக்க பகுதி களுக்கு விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கவுன்சிலர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கு சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர் உலகநாதன் பேசினார்.

    கவுன்சிலர் சின்னத்தாய் பேசும்போது, ஒரு சமூகத்தின் மனவலியை மாமன்னன் திரைப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது. எங்கள் பகுதியில் அதிகளவு ஓடைகள் உள்ளது. ஆனால் அதனை சீரமைக்காமல் உள்ளது. அண்ணா நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. எனவே அங்கு தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தூய்மை பணியா ளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கூறும்போது, நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்ட சிந்துபூந்துறை- உடையார்பட்டி சாலையை சீரமைத்ததற்கு நன்றி, சிந்துபூந்துறை மின்தகன மேடையில் கூடுதலாக ஒரு அறை அமைக்க வேண்டும், 1 ஆண்டாக பணிக்குழு கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. அதனை நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் பேசும்போது, மாநகர பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் சாப்பாட்டின் அளவு குறைத்து வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 28-வது வார்டுக்குட்பட்ட பூங்கா பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    திடீர் போராட்டம்

    முன்னதாக, ரூ.32 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு மேயர் கையெழுத்திடாமல் உள்ளதால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டள்ளதாக கூறி கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் கூட்டத்திற்கு செல்லாமல் மாநகராட்சி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனே அங்கு சென்ற மேயர் சரவணன் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கூட்டத்திற்கு சென்றனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ேமட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காசி விஸ்வநாதர், ஆணையாளர் (பொறுப்பு) சுகவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டம் தொடங்கிய வுடன், அ.தி.மு.க.வை சேர்ந்த நகர்மன்ற உறுப்பி னர்கள் கிருஷ்ணன், லாவண்யா, கலா, செல்வ ராணி உட்பட 5 பேரும் மேட்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொத்து வரி வசூலிப்பு நடவடிக்கை யில் வரி மேல்முறையீட்டுக் குழுவினரின் நடவடிக் கையால் நகராட்சிக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
    • இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில், வி.சி.க கவுன்சிலர் சாமுராய்குரு பேசுகையில், தேர்தலுக்கு முன்பு தனி அதிகாரியாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு தற்போது பணம் எடுக்கப்படுகிறது.

    காடையாம்பட்டி மட்டுமல்ல ஓமலூர், மேச்சேரி என அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் போதுமான நிதி இல்லாத நிலையில், பொது நிதியிலிருந்து தேவையான பணிகளுக்கு தீர்மானங்கள் வைக்கப்படுகின்றன.

    பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படாத நிலையில், அ.தி.மு.க கவுன்சிலர் வெங்கடேசனும் இதே கேள்வியை எழுப்பினார். இதனை தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

    • திருச்சி மாநகராட்சி 28 பெண் கவுன்சிலர்கள் 3 நாட்கள் தெலுங்கானா மாநிலம் பயணம்
    • திடக்கழிவு மேலாண்மை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள செல்கின்றனர்

    திருச்சி,

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுரையின்படி திருச்சி மாநகராட்சி மற்றும் ஜிஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தியா நாமா "சர்குலேஷன் வேஸ்ட் சொல்யூஷன்" திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, துர்காதேவி, உட்பட பெண் மாமன்ற உறுப்பினர்கள் 28 பேர் தெலுங்கானா மாநிலம் சென்றனர்.அவர்கள் அங்குள்ள சித்தி பேட் நகராட்சியில் வரும் 12-ந்தேதி முதல் 3 நாள் களப்பயணம் மேற்கொண்டு அந்நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'திடக்கழிவு மேலாண்மை' பணிகளை பார்வையிட்டு, அது தொடர்பான திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள உள்ளனர்.இப்பயணம் மேற்கொள்ள உள்ள பெண் மாமன்ற உறுப்பினர்களை மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

    • பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்ததும் தாசில்தார் செல்வகுமார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.76 கோடி மதிப்பீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை பாதாள சாக்கடை பணிகள் முடிவடையவில்லை.

    மேலும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு மின்விளக்கு அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் இதுவரை மின்விளக்குகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இதனை கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் 9 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு துணை தலைவர் விஜயகுமார் தலைமையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் செல்வகுமார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நகராட்சி ஆணையர் கோபிநாத் மற்றும் பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகளிடம் பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து 45 நாட்களுக்குள் திட்டப் பணிகள் முடிப்பதாகவும் மின் விளக்கு பொருத்தும் பணி உடனடியாக தொடங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் தாசில்தார் செல்வக்குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

    • மாநகராட்சி 51 வார்டுகளிலும் தரமான முறையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
    • ஆட்டோக்களில் கியூ ஆர் கோடு மூலம் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும்

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் சண். ராமநாதன் பேசும்போது, மாநகராட்சி 51 வார்டுகளிலும் தரமான முறையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    இன்னும் மூன்று மாதத்தில் ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்படும். இந்த பணிகளும் விரைவில் முடிவடையும்.

    ஆட்டோக்களில் கியூ ஆர் கோடு மூலம் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும் என்றார்.

    ஆணையர் சரவணகுமார் பேசும்போது, பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வரும் 1-ந் தேதி நடைபெறுகிறது.

    சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் தேரோட்டத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த முறை தேரோட்டம் அனைவரும் போற்றும் வகையில் நடைபெறும்.

    தேரோட்டத்தை சிறப்பாக நடத்தஜ மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    கவுன்சிலர் கண்ணுக்கி னியாள் :

    தஞ்சை கீழ வாசலில் கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களில் பாலம் இடிந்து விழுந்தது. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. சரியான முறையில் பாலம் கட்டப்பட்டதா? என்றார்.

    இதே பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது மைக் ஆப் செய்யப்பட்டது.

    கோரிக்கை குறித்து பதில் அளித்த

    மேயர் சண். ராமநாதன் :

    கீழவாசல் பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதிக்காத நிலையில் தடையை மீறி லாரி டிரைவர் அதிக லோடு மணல் ஏற்றி சென்றதால் விபத்து ஏற்பட்டது. லாரி டிரைவர், உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கட்டுமான பணிக்கு தேவையான பணத்தை லாரி உரிமையாளர் தருவதாக கூறியுள்ளார். பாலம் தரமான முறையில் தான் கட்டப்பட்டது.

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட சாந்த பிள்ளை பாலம் தரமான முறையில் கட்டவில்லை என்றார்.

    அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் சாந்த பிள்ளை கேட் பாலம் சேதம் குறித்த புகைப்படத்துடன் கூடிய பேனரை காண்பித்து கோஷம் எழுப்பினர். இதனால் அ.தி.மு.க, அ.ம.மு.க. பா.ஜ.க. கவுன்சிலர்கள் பதிலுக்கு கோஷம் எழுப்பினர்.

    இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் அமளி ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி மாறி கடும் வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதையடுத்து அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மேயர் சண். ராமநாதன் கூறி சென்றார்.

    அப்போது கூட்ட அரங்கில் மைக், விளக்கு அமைக்கப்பட்டது.

    இதனை கண்டித்தும் கூட்டத்தில் தங்களது கருத்துகளை தெரிவிக்க சுதந்திரமான முறையில் பேச அனுமதிக்க வேண்டும், பேசும்போது மைக்கை ஆப் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க, அ.ம.மு.க, பா.ஜ.க. கவுன்சிலர்களான மணிகண்டன், கோபால், கேசவன், தட்சிணாமூர்த்தி, சரவணன், காந்திமதி ,கலை வாணி, கண்ணுக்கினியாள், ஜெய்சதீஷ் ஆகிய 9 பேரும் மாநகராட்சி கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பால பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் பேசும்போது மைக், லைட் ஆப் செய்ததை கண்டித்தும், கவுன்சிலர் கேசவனை தள்ளி விட்ட சம்பவத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    தகவல் அறிந்து ஆணையர் சரவணகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நீங்கள் கருத்துகளை கூற சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மேலும் கூட்ட அரங்கில் இருந்து போராட்டம் நடத்துவது முறையல்ல. எனது அறைக்கு வாருங்கள். அங்கு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.

    இதனை ஏற்றுக் கொண்டு போராட்டத்தில் ஏற்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி ஆணையர் அறைக்கு சென்று பேசினர்.

    இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது.
    • காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழக்கரை 

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் பி.டி.ஓ.க்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-

    கவுன்சிலர் பைரோஸ்கான்:- பெரியபட்டினம் சாலைகள் அனைத்தும் பழு தடைந்து உள்ளது. அதை புதுப்பித்து சாலை அமைக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நிழற்குடை அமைக்க இடத்தை சரி செய்து தர வேண்டும். பெரிய பட்டினம் சுடுகாட்டிற்கு பாதை இல்லை என பலமுறை நான் கோரிக்கை வைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் வடக்கு குடியிருப்பில் மயானம் அமைத்துத் தர வேண் டும்.

    கவுன்சிலர் கலாராணி:- தாதனேந்தல் பகுதியில் சம்பு கட்டி பயனின்றி உள்ளது. ஆனால் காவிரி கூட்டுக்குடிநீர் ஊர் மக்களுக்கு கிடைக்கவில்லை.

    பி.டி.ஓ:- காவிரி கூட்டு குடிநீர் திட்ட பொறியாளருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவுன்சிலர் காங்கிரஸ் திருமுருகன்:- ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரேஷன் கடை கட்ட ஆலங்குளம் பகுதியில் நீதி பெற்றும் அங்குள்ள சமுதாய கட்டிடம் பாழ டைந்து உள்ளது. அதன் அருகில் தான் கட்ட வேண்டும். எனவே சமுதாய கட்டிடத்தை இடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பி.டி.ஓ. ராஜேந்திரன்:- உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கவுன்சிலர் நாகநாதன்:- ரெகுநாதபுரத்தில் அரசு இடத்தில் தனியார் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுகிறார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களைத் திரட்டி பஸ் மறியல் போராட்டம் நடத்துவோம்.

    கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பி.டி.ஓக்கள் பதிலளித்தனர்.

    இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

    ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் சிவலிங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் இருப்பதாக கூறி கேள்வி கேட்டதால் கடந்த கூட்டத்தில் சேர்மன் ஒருமையில் பேசியதாக கூறி இந்த கூட்டத்தில் அவரது இருக்கையில் அமராமல் செய்தியாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்திருந்தார்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வாகித்தார்.ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கி மன்ற தீர்மானங்களை ஆணையாளர் வாசித்து கொண்டிருந்த போது குறுக்கிட்டு பேசிய பாமக கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தினசரி மார்க்கெட் சுங்க வசூல் கட்டணத்திற்கு சீல் வைக்கப்பட்ட முறையான ரசீது வழங்கவேண்டும். ஆனால் தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    பாமக உறுப்பினர்களை தொடர்ந்து சுயேட்சை உறுப்பினர் சுமதியும் இதே குற்றசாட்டை முன்வைத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கூட்டதில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டது.

    • மண்டல தலைவர்களுக்கு என சிறப்பு நிதி
    • மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீடு

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம், பலவஞ்சிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இதற்கு 4-வது மண்டல தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ள நிலையில், மண்டல தலைவர்களுக்கு என சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

     அதன்படி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டுகளுக்கும் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வார்டு உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான நிதியை பெற்று, வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளலாம். முதல்முறையாக மண்டல தலைவர்களுக்கு என தனி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறி அதனை சரி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல தலைவர் பத்மநாபன் உறுதி அளித்தார்.

    • நகர்மன்ற கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகர், நகர்மன்ற துணை தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

    தங்களது வார்டு பகுதியில் குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தாலும், மேலும் தங்களது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை தங்களிடம் கேட்டு தீர்மானத்தில் சேர்க்காத காரணத்தாலும் மாதாந்திர கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்ததாக கூறப்பட்டது. அவர்களை தவிர்த்து, கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மற்றும் சில தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களை கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற கூட்டத்தை தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்ததால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது."

    • சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியயாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிக நிதி ஒதுக்கியதே அதற்கு காரணம் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் ஆணயைாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார. கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது-

    சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு வி ருது வழங்க காரணமாக இருந்த அனைத்து மாநகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

    அ.தி.மு.க. எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியயாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி , கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிக நிதி ஒதுக்கியதே அதற்கு காரணம் என்றார். அதனால் அ.தி.மு.க.வுக்கும் பங்களிப்பு உள்ளது, மேலும் அனைத்து வார்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும், 'என்றார்.

    அப்போது குறுக்கிட்ட மேயர் அனைத்து வார்டுகளையும் சமமாகவே கருதுகிறோம் என்றார்.

    கவுன்சிலர் கே.சி. செல்வராஜ் பேசுகையில், பனமரத்துப்பட்டி ஏரி டென்டர் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றார்.

    வாக்கு வாதம்

    அதற்கு பதில் அளித்து பேசிய சாந்த மூர்த்தி, பாதாள சாக்கடை திட்டம் உள்பட பல்வேறு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் முடங்கி கிடந்தன. கடந்த 5 மாதத்தில் நடந்த பணிகளால் தான் சிறந்த மாநகராட்சி விருது கிடைத்தது என்றார். இதனால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கார சார மோதல் உருவானது. அதனால் மாநகராட்சி கூட்டத்தில் அமளி ஏற்பட்டது .

    இதற்கிடையே அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சி கவுன்சிலர் இமயவர்மன் மேயர் முன்பு தரையில் அமர்ந்த தர்ணாவில் ஈடுபட்டார். அவரை தி.மு.க. கவுன்சிலர்கள் சமரசம் செய்து இருக்கைக்கு அனுப்பி வைத்தனர்.

    தி.மு.க. மாநகராட்சி ஆளும்கட்சி தலைவர் ஜெயக்குமார் பேசியதாவது-

    திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்தது தான் இந்த விருது, அதனை திசை திருப்பி கொச்சை படுத்த முடிவு செய்துள்ளனர். இது தவறான செயல், இதற்கெல்லாம் தி.மு.க. அஞ்சாது, மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும், தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனைக்கு கிடைத்த விருது என்றார்.

    கவுன்சிலர் ஈசன் இளஙகோ பேசுகையில், 5 மாத கவுன்சிலர்களின் செயல்பாட்டிற்கு கிடைத்த விருது தான் இது என்றார். அப்போது அ.தி.மு.க. மற்றும் தி.முக. கவுன்சிலர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில், தனது வார்டில் மின் மயானம் அமைப்பதாக கூறி 6 ஆண்டு ஆகியும் நிறைவேற்றாமல் உள்ளது. மேலும் தாதாகப்பட்டி பகுதியில் மூடப்பட்ட மானா சில்லி கடையை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ராமச்சந்திரன் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • வேறு இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

    ஆணையாளர் விஜய் குமார் பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பல வாசகங்களுடன் கூடிய தட்டிகளுடன் கூட்ட அரங்கில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளே நுழைந்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் பழனிச்சாமி பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடை பழுதாகி உள்ளதால் கடை உரிமையாளர் கடையை காலி செய்ய சொல்கிறார்.

    வேறு இடம் பார்த்து ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் நகராட்சி தி.மு.க. உறுப்பினர் ஜேம்ஸ், ரேசன் கடைகளில் ரேகை வைக்கும் பிரச்சனை அனைத்து வார்டுகளில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கூறினார்.

    கூட்டத்தில் தொடர்ந்து துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், அம்பிகா, ரங்கநாதன், வேல்முருகன், பாலசுப்ரமணி, கதிரவன், கோவிந்தராஜ், பரிமளா, மகேஸ்வரி, கிருஷ்ணவேணி, புஷ்பா, தீபா, சுமதி, செல்வி, உள்ளிட்ட பலர் வடிகால் வசதி, வாட்டர் டேங்க் முன் உள்ளமுள்செடிகள் அகற்றுதல், சாலை வசதி, மின் விளக்கு வசதி, சாக்கடை அடைப்பை சரி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதனை தொடர்ந்து சேர்மன் விஜய்கண்ணன் உறுப்பினர்களின் கோரிக்ைக பரிசீலிக்கப்படும் என்றார்.

    முந்தைய கூட்டத்தில் உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக இந்த கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×