என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் கவுன்சிலர்கள் தெலுங்கானா பயணம்
- திருச்சி மாநகராட்சி 28 பெண் கவுன்சிலர்கள் 3 நாட்கள் தெலுங்கானா மாநிலம் பயணம்
- திடக்கழிவு மேலாண்மை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள செல்கின்றனர்
திருச்சி,
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுரையின்படி திருச்சி மாநகராட்சி மற்றும் ஜிஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தியா நாமா "சர்குலேஷன் வேஸ்ட் சொல்யூஷன்" திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, துர்காதேவி, உட்பட பெண் மாமன்ற உறுப்பினர்கள் 28 பேர் தெலுங்கானா மாநிலம் சென்றனர்.அவர்கள் அங்குள்ள சித்தி பேட் நகராட்சியில் வரும் 12-ந்தேதி முதல் 3 நாள் களப்பயணம் மேற்கொண்டு அந்நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'திடக்கழிவு மேலாண்மை' பணிகளை பார்வையிட்டு, அது தொடர்பான திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள உள்ளனர்.இப்பயணம் மேற்கொள்ள உள்ள பெண் மாமன்ற உறுப்பினர்களை மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.
Next Story






