search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேசுவதற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து அ.தி.மு.க, அ.ம.மு.க- பா.ஜ.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    பேசுவதற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து அ.தி.மு.க, அ.ம.மு.க- பா.ஜ.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    • மாநகராட்சி 51 வார்டுகளிலும் தரமான முறையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
    • ஆட்டோக்களில் கியூ ஆர் கோடு மூலம் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும்

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் சண். ராமநாதன் பேசும்போது, மாநகராட்சி 51 வார்டுகளிலும் தரமான முறையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    இன்னும் மூன்று மாதத்தில் ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்படும். இந்த பணிகளும் விரைவில் முடிவடையும்.

    ஆட்டோக்களில் கியூ ஆர் கோடு மூலம் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும் என்றார்.

    ஆணையர் சரவணகுமார் பேசும்போது, பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வரும் 1-ந் தேதி நடைபெறுகிறது.

    சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் தேரோட்டத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த முறை தேரோட்டம் அனைவரும் போற்றும் வகையில் நடைபெறும்.

    தேரோட்டத்தை சிறப்பாக நடத்தஜ மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    கவுன்சிலர் கண்ணுக்கி னியாள் :

    தஞ்சை கீழ வாசலில் கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களில் பாலம் இடிந்து விழுந்தது. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. சரியான முறையில் பாலம் கட்டப்பட்டதா? என்றார்.

    இதே பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது மைக் ஆப் செய்யப்பட்டது.

    கோரிக்கை குறித்து பதில் அளித்த

    மேயர் சண். ராமநாதன் :

    கீழவாசல் பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதிக்காத நிலையில் தடையை மீறி லாரி டிரைவர் அதிக லோடு மணல் ஏற்றி சென்றதால் விபத்து ஏற்பட்டது. லாரி டிரைவர், உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கட்டுமான பணிக்கு தேவையான பணத்தை லாரி உரிமையாளர் தருவதாக கூறியுள்ளார். பாலம் தரமான முறையில் தான் கட்டப்பட்டது.

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட சாந்த பிள்ளை பாலம் தரமான முறையில் கட்டவில்லை என்றார்.

    அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் சாந்த பிள்ளை கேட் பாலம் சேதம் குறித்த புகைப்படத்துடன் கூடிய பேனரை காண்பித்து கோஷம் எழுப்பினர். இதனால் அ.தி.மு.க, அ.ம.மு.க. பா.ஜ.க. கவுன்சிலர்கள் பதிலுக்கு கோஷம் எழுப்பினர்.

    இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் அமளி ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி மாறி கடும் வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதையடுத்து அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மேயர் சண். ராமநாதன் கூறி சென்றார்.

    அப்போது கூட்ட அரங்கில் மைக், விளக்கு அமைக்கப்பட்டது.

    இதனை கண்டித்தும் கூட்டத்தில் தங்களது கருத்துகளை தெரிவிக்க சுதந்திரமான முறையில் பேச அனுமதிக்க வேண்டும், பேசும்போது மைக்கை ஆப் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க, அ.ம.மு.க, பா.ஜ.க. கவுன்சிலர்களான மணிகண்டன், கோபால், கேசவன், தட்சிணாமூர்த்தி, சரவணன், காந்திமதி ,கலை வாணி, கண்ணுக்கினியாள், ஜெய்சதீஷ் ஆகிய 9 பேரும் மாநகராட்சி கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பால பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் பேசும்போது மைக், லைட் ஆப் செய்ததை கண்டித்தும், கவுன்சிலர் கேசவனை தள்ளி விட்ட சம்பவத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    தகவல் அறிந்து ஆணையர் சரவணகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நீங்கள் கருத்துகளை கூற சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மேலும் கூட்ட அரங்கில் இருந்து போராட்டம் நடத்துவது முறையல்ல. எனது அறைக்கு வாருங்கள். அங்கு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.

    இதனை ஏற்றுக் கொண்டு போராட்டத்தில் ஏற்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி ஆணையர் அறைக்கு சென்று பேசினர்.

    இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×