search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "walk out"

    • சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ேமட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காசி விஸ்வநாதர், ஆணையாளர் (பொறுப்பு) சுகவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டம் தொடங்கிய வுடன், அ.தி.மு.க.வை சேர்ந்த நகர்மன்ற உறுப்பி னர்கள் கிருஷ்ணன், லாவண்யா, கலா, செல்வ ராணி உட்பட 5 பேரும் மேட்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொத்து வரி வசூலிப்பு நடவடிக்கை யில் வரி மேல்முறையீட்டுக் குழுவினரின் நடவடிக் கையால் நகராட்சிக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.

    • தஞ்சாவூர் ஆம்னி பஸ் நிலையத்துக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆம்னி பஸ் நிலையம் என பெயர் சூட்டப்படும்.
    • தற்காலிக மீன் சந்தையை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் சண். ராமநாதன் பேசும்போது, தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையத்துக்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆம்னி பஸ் நிலையம் என பெயர் சூட்டப்படும் என்றார்.

    மண்டல குழு தலைவர் எஸ்.சி. மேத்தா : ஆற்றில் தண்ணீர் வந்துள்ளதால் அய்யங்குளம், சமந்தான்குளம், அகழி ஆகியவற்றில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் காந்திமதி : தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளப் பிள்ளையார் கோயில் அருகே செயல்பட்டு வரும் தற்காலிக மீன் சந்தையை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஆனந்த் : காமராஜர் சந்தையில் சரியான செயல்பாடு இல்லாததால் 100 கடைகளைத் திரும்ப ஒப்படைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    கோபால் : எனது வார்டில் 90 சந்துகள் உள்ளன. ஆனால் தூய்மை பணிக்கு 3 பணியாளர்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றனர். சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை தூர் வருவதற்கு 2 பணியாளர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் : மாநகராட்சியில் தூய்மைப்பணி ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவை ஒப்பந்ததாரர்தான் செலுத்த வேண்டும். ஆனால் விதிமுறையை மீறி தூய்மை பணியாளிடம் 30 சதவீதம் பிடித்தம் செய்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்ததாரருக்கு ரூ. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

    ஆணையர்: இத்திட்டத்தில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளலாம்.

    மேயர்: இது தொடர்பாக 7 நாட்களுக்குள் தங்களுக்கு முழு விவரங்கள் அளிக்கப்படும் என்றார்.இருந்தாலும் இதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதால் வெளிநடப்பு செய்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் கூறினார். இதையடுத்து மணிகண்டன் தலைமையில் அ.தி.மு.க, பா.ஜ.க உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்களே வஞ்சிக்காதே என முழக்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் நிருபர்களுக்கு மேயர் சண்.ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தூய்மை பணியை ஒப்பந்த அடிப்படையில் விடுவது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விடப்பட்டுள்ளது. இப்பணி ஒரு மாதம் நிறைவடைந்து, இரண்டாவது மாதம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே வேலையே தொடங்கவில்லை எனக் கூறுவது தவறு. முறைகேடு எதுவும் நடைபெறவில்லை .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
    • இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில், வி.சி.க கவுன்சிலர் சாமுராய்குரு பேசுகையில், தேர்தலுக்கு முன்பு தனி அதிகாரியாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு தற்போது பணம் எடுக்கப்படுகிறது.

    காடையாம்பட்டி மட்டுமல்ல ஓமலூர், மேச்சேரி என அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் போதுமான நிதி இல்லாத நிலையில், பொது நிதியிலிருந்து தேவையான பணிகளுக்கு தீர்மானங்கள் வைக்கப்படுகின்றன.

    பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படாத நிலையில், அ.தி.மு.க கவுன்சிலர் வெங்கடேசனும் இதே கேள்வியை எழுப்பினார். இதனை தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

    • கல்குறிச்சி ஊராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • தீர்மானங்களை ஊராட்சி செயலர் வாசித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி மன்ற கூட்டம் தலைவி யாஸ்மின் தலைமை யில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவி பானு வனிதா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை ஊராட்சி செயலர் வாசித் தார்.

    கூட்டத்தில் துணைத்தலைவி பானுவனிதா, வார்டு உறுப்பினர்கள் மகாலட்சுமி, மலைச்சாமி ஆகியோர் பேசியதாவது:-

    கல்குறிச்சி ஊராட்சியில் வள ர்ச்சி திட்டப்ப ணிகள் நடைபெற வில்லை. எங்கள் பகுதியில் அடிப்படைவசதி இல்லை. குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே நடை பெற்ற கூட்டங்களில் நிறை வேற்றிய தீர்மானங்களின் படி வளர்ச்சி திட்டப்பணி கள் மேற்கொள்ள உறுப்பி னர்கள் ஒப்புதல் தெரி வித்தும் எந்தப்பணியும் நடைபெறாமல் உள்ளது.

    கல்குறிச்சி ஊராட்சியில் நிதி முறைகேடு நடத் துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம். முறைகேடு ெதாடர்பாக தலைவி யாஸ்மின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர். இதற்கு ஊராட்சிச் செயலர் மறுத்து விட்டார். இதையடுத்து துணைத்தலைவர் பானுசித்ரா, வார்டு உறுப்பினர்கள் சத்திய வாணிமுத்து, மலைச்சாமி, மகாலட்சுமி, பூமா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவி யாஸ்மின் கூறுகையில், சிலரது தூண்டுதலின் பேரில், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்கின்றனர். கல்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்களுக்கான அனைத்து திட்டப்பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.

    • மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • வார்டில் இது நாள்வரையிலும் எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ஒரே பணி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

    அவினாசி:

    அவினாசி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன் , செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருமுருகநாதன் (11-வது வார்டு):-

    11- வது வார்டு ஈ.வெ.ரா.வீதியில் வடிகால் வசதி கேட்டு 6 மாதம் ஆகியும் பணி நடைபெற எந்த நடவடிக்கையுமில்லை. பேரூராட்சி ஊழியர் யாராவது இறந்துவிட்டால் அதற்கு இரங்கல் தீர்மானம் போட வேண்டும்.

    ஸ்ரீதேவி (18- வது வார்டு):-

    ஒவ்வொரு முறையும் மன்ற கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றுவதுடன் சரி, எந்த வேலையும் நடைபெறுவதில்லை. வார்டில் இது நாள்வரையிலும் எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ஒரே பணி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது என்று சரமாரியாக குற்றம் சாட்டினார்.

    இதேபோல் சித்ரா ( வார்டு 14), பத்மாவதி (9), சாந்தி (12), எஸ்.தேவி (10) கவிதா (2) ஆகியோரும் எங்கள் வார்டுபகுதியில் எந்த வேலையும் நடைபெறவில்லை. எதை சொன்னாலும் பிறகு பார்க்கலாம் பிறகு பார்க்கலாம் என்று தள்ளி போடுகிறார்கள் .இதனால் பொதுமக்களிடம் நாங்கள் பதில் சொல்ல முடியவில்லை .எனவே மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க.வை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்களும் மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
    • 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை பேரூராட்சி யில் மொத்தம் 15 கவுன்சி லர்கள் உள்ளனர். இதில் 10 தி.மு.க. கவுன்சிலர்கள், 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 1 காங்கிரஸ் கவுன்சிலர் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 35 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இதை நிறை வேற்றி தரும்படி பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி.ராஜேந்திரன் கூறினார்.

    கடந்த 15 மாதங்களாக பேரூராட்சி பகுதியில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதர கோரியும், சென்னிமலை ரோட்டில் அமைந்துள்ள விக்னேஸ் நகர், கவின் நகர், காந்தி நகர் பகுதியில் மொத்தம் 600 வீடுகள் உள்ள நிலையில் 600 வீடுகளின் கழிவு நீரானது தார் சாலைக்கு வருவ தாகவும், அதற்கு சாக்கடை கால்வாய் அமைக்க கூறியும், போதிய வாகன வசதி இல்லாததை சுட்டிகாட்டிய கவுன்சி லர்கள் தீர்மா னங்களை புறக்கணித்தனர்.

    இதனையடுத்து தி.மு.க.வை சார்ந்த சுப்பிர மணியன், நந்தகோபால், சித்திக் அலி, புஸ்பா, பிரபாவதி, சரண்யா ஆகிய 6 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம், வளர்மதி கே.செல்வ ராஜ், கோமதி, புனிதமதி ஆகிய 4 பேர் என மொத்தம் 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

    பேரூராட்சி தலைவர் உள்பட 5 பேர் மட்டுமே தீர்மானங்களை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தனர். இதனால் கவுன்சிலர் கூட்டத்தில் எந்தவொரு தீர்மானவும் நிறைவே ற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    • சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவர் அவையில் இருந்து வெளியேறியவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

    வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை சாலிகிராமத்தில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்பில் ஈடுபட்ட பெண் காவலரிடம் தி.மு.க.வினர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர். தவறு செய்த கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். 2 நாட்கள் கழித்துதான் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

    தவறு செய்தவர்கள் கையும் களவுமாக பிடிபட்ட போதிலும் அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தியபிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. கூறியுள்ளார்.

    தமிழகத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. சாமான்ய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு, வெளிநாட்டில் இருந்து கடல் வழியாக போதைப்பொருள் வருகிறது.

    கஞ்சா, கோகைன், பவுடர் உள்ளிட்ட பல்வேறு வடிவத்தில் போதை பொருள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். எங்கள் கருத்தை சட்டசபையில் வேண்டும் என்றே பதிவு செய்ய மறுக்கிறார்கள்.

    சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதாக கூறுகிறார். ஆனால் அவ்வாறு செயல்படாதது வருத்தம் அளிக்கிறது.

    தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் என தினமும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தோம்.

    இளைஞர்களின் எதிர்காலம் சீரழியக்கூடாது என்பதற்காகத்தான் எங்கள் கருத்தை பதிவு செய்ய வந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பு தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தஞ்சை மாநகராட்சி சாதாரண மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி சாதாரண மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது, கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் வியாபாரிகள் 46 கடைகளை திருப்பி கொடுத்து உள்ளார்கள் என தீர்மானம் போடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மேயர் சண் ராமநாதனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது மேயர் சண் ராமநாதன், தீர்மானத்திற்கு நான் கையெழுத்து போட்டுள்ளேன். ஜெயலலிதாவை போல் போலி கையெழுத்து இட வில்லை. அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளது என்றதும், நீங்கள் எப்படி ஜெயலலிதா பற்றி பேசலாம். அவர் முன்னாள் முதலமைச்சர். ஏன் கருணாநிதி மீது கூட வழக்கு இருந்தது என மணிகண்டன் பேசினார்.

    இதனால் கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டம் முடிவடையும் நேரத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சீன அத்துமீறல் பிரச்சினை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
    • அவை நடவடிக்கையை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி நோட்டீஸ்

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் சார்பில் வழங்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ்கள் அவைத் தலைவரின் பரிசீலனையில் இருந்தன. 

    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் சீன பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது 267 விதியின் கீழ் எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ்கள் சரியான முறையில் இல்லை என்று கூறிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவற்றை நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வாகித்தார்.ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கி மன்ற தீர்மானங்களை ஆணையாளர் வாசித்து கொண்டிருந்த போது குறுக்கிட்டு பேசிய பாமக கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தினசரி மார்க்கெட் சுங்க வசூல் கட்டணத்திற்கு சீல் வைக்கப்பட்ட முறையான ரசீது வழங்கவேண்டும். ஆனால் தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    பாமக உறுப்பினர்களை தொடர்ந்து சுயேட்சை உறுப்பினர் சுமதியும் இதே குற்றசாட்டை முன்வைத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கூட்டதில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டது.

    • செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் புதிய சொத்துவரி உயர்வு தொடர்பான அவரசக் கூட்டம் நடந்தது
    • அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கூட்டத்திற்கான அஜன்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் புதிய சொத்துவரி உயர்வு தொடர்பான அவரசக் கூட்டம் நடந்தது.

    நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, என்ஜினீயர் ஜெயப்ரியா, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கூட்டத்திற்கான அஜன்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.

    அதனைதொடர்ந்து தி.மு.க. உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை சரிவர தீர்க்காமலும், பாரபட்சமாக நடப்பதாகவும் கூறி ரஹீம் தலைமையில் இசக்கித்துரை பாண்டியன், மேரிஅந்தோணிராஜ், பினாஷா, சரவண கார்த்திகை, பேபிரெசவுபாத்திமா ஆகியோர் வெளிநடப்பு செய்தனா்.

    பின்னா் தமிழக அரசின் புதிய சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. உறுப்பினா்கள் பொன்னுலிங்கம் என்ற சுதன், வேம்புராஜ், செண்பகராஜன், ராஜ்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனா். அதனைதொடா்ந்து புதிய சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் சுடர்ஒளி ராமதாஸ், ராதா, சரஸ்வதி, சுகந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • திருச்சி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது.
    • அவசரக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதல் நான்கு தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    திருச்சி

    திருச்சி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் திவ்யா, கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்ககா தேவி, ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், ஜெயநிர்மலா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அவசரக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதல் நான்கு தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    சுரேஷ் (சி.பி.ஐ.):-

    மாமன்றத்தில் கவுன்சிலர்களை தலைவர்களாகக் கொண்ட வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபாக்கள் உருவாக்கிடவும், இதர உறுப்பினர்களை மாமன்றம் நியமனம் செய்திடவும், வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபாக்கள் கூட்டங்கள் நடத்திடவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். அரசு இதனைமறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இதே கருத்தை வலியுறுத்தி கவுன்சிலர்கள் முத்து செல்வம், காஜாமலை விஜய் ஆகியோரும் பேசினர்.

    மேயர் அன்பழகன்: உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். கடிதம் எழுதி கவுன்சிலர்களின் கையெழுத்துக்கள் மூலம் மறுபரிசலனை செய்யுமாறு அரசை வலியுறுத்துவோம்.

    இந்த தீர்மானத்திற்கு தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பிரபாகரன் (வி.சி.க): மாநகராட்சிகளில் துப்புரவு பணிகள், பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கப்பட உள்ளது. ஊழியர்கள் தனியார் மயமாக்கபட்டால் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகளாக உள்ள தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். தமிழக அரசு இதற்கு செவி சாய்க்கக் கூடாது. சமூக நீதி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசின் அவுட்சோர்சிங் தனியார் மய முறைக்கு ஒத்துக் கொள்ளக் கூடாது.

    மேயர் அன்பழகன்: திருச்சி மாநகரில் தினமும் 470 டன் குப்பைகள் சேருகின்றன. அந்த குப்பைகள் தரம் பிரித்து கொடுத்தால் தான் விவசாயிகள் வாங்கிச் செல்வார்கள். சென்னையில் இந்த பணி சரியாக திட்டமிட்டு செய்யப்படுகிறது. திருச்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற வேண்டும், குப்பைகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக பரீட்சார்த்த முறையில் முதல் கட்டமாக இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. இது நமக்கு சரிவரவில்லை என்றால் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு பரிசீலனை செய்ய வலியுறுத்துவோம் என்றார்.

    ஆனால் இதற்கும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கொட்டப்பட்டு தர்மராஜ்: கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் எனது வார்டு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்திய போது தாங்கள் (மேயர்) டேப் எடுத்துக்கொண்டு அளந்து விட்டு சொல்லுங்கள் என கூறினீர்கள். நீங்கள் வந்த காலகட்டத்தில் நானும் தி.மு.க.வுக்கு வந்து விட்டேன். இந்தப் பதில் எனக்கு நக்கலாக தெரிகிறது. இதனை மாமன்றத்தில் தெரியப்படுத்தவே இங்கு பேசினேன்.

    மேயர் அன்பழகன்: தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வேலையை செய்வதற்காகத் தான் அதை சொன்னேன். கட்சிக் கூட்டத்தில் பேசியதை மன்றத்தில் பேசியது தவறான அணுகுமுறை எனக் கூறினார். இதைத்தொடர்ந்து கொட்டப்பட்டு தர்மராஜ், மேயர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து வெளிநடப்பு செய்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×