search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corporation meeting"

    • கூட்டத்தில் பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
    • பாளை மண்டலத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    கூட்டத்தில் பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கடந்த சில கூட்டங்களாக மேயர்- கவுன்சிலர்களிடையே பிரச்சி னைகள் நடந்து வந்த நிலையில், கட்சி தலைமை அறிவுறுத்தல்படி அமைதி யான முறையில் கூட்டம் நடக்க ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்தது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மேயர் சரவணன் திருக்குறள் வாசித்து கூட்ட த்தை தொடங்கினார். மகளி ருக்கு மாதாந்திர உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கி யதற்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல்களை அரசு மரியா தையுடன் தகனம் செய்ய வேண்டும் என்று அறிவித்த மைக்கும் நன்றி தெரிவி க்கப்பட்டது. சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் கவுன்சிலர் காந்திமதி என்ப வருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தீர்மானங்கள் நிறைவேற்றம்

    கூட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறை வேற்றப்பட்டது. தொடர்ந்து மேயர் சரவணன் பேசும் போது, தசரா விழா நெருங்கு வதை யொட்டி எந்தெந்த கோவில் களில் தசரா விழா க்கள் கொண்டா டப்படுகி றதோ, அந்தந்த பகுதி களில் உள்ள சிறு பாலங்கள், சாலைகள், வாறு கால்களை சீரமைக்க வேண்டும்.

    மேலும் தசரா விழா கொண்டாடப்பட உள்ள கோவில்களை சுற்றிலும் சுத்தம் செய்வதற்கு மாநக ராட்சி பணியா ளர்களுக்கு அறிவுறுத்த உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.

    உதவி கமிஷனர் நியமிக்க கோரிக்கை

    மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதிஜா இக்லாம் பாசிலா பேசுகை யில், கடந்த 2 மாதமாக கூட்டம் நடக்கவில்லை.அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடக்க வேண்டும் என கவுன்சிலர்கள் எதிர் பார்க்கின்றனர். ஆனால் சில வார்டுகளுக்கு பணிகள் ஒதுக்கப்படவில்லை. எனவே அனைவருக்கும் பணிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த வாரம் மீலாடி நபிக்கு மாநகராட்சி சார்பில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு கூடுதல் தண்ணீர் வழங்கப்பட்டு மீலாடி நபியை கொண்டாடு வதற்கு வழிவகை செய்த மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலப்பாளையம் மண்டலத்துக்கு நிரந்தரமாக ஒரு உதவி கமிஷனர் மற்றும் உதவி பொறியாளர்களை நியமிக்க வேண்டும்.43-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை கலந்து குடிநீர் வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும். புதிய குடிநீர் தொட்டி, கழிவு நீர் ஓடை உள்ளிட்ட பிரச்சி னைகளை தீர்க்க வேண்டும் என்றார்.

    2 உதவி கமிஷனர்கள் புதிதாக நியமனம்

    அதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி, தேங்கி கிடக்கும் பணிகளை துரிதமாக முடிக்க 2 உதவி கமிஷனர்கள் மாநக ராட்சிக்கு நியமனம் செய்ய ப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் பொறுப் பேற்பார்கள். இதே போல் பொறி யாளர்களுக்கும் காலி பணியிடம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணியிட மும் நிரப்பப்படும் என்றார்.

    பாளை மண்ட லத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. முறப்பநாடு பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? அது குறித்து தெரிவிக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று பாளை மண்டல சேர்மன் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பாதாள சாக்கடை திட்ட பணிகள் சுமார் ரூ.1600 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது.

    இதில் முதல் கட்ட பணிகள் டெண்டர் விட ப்பட்டு பாளை, மேலப்பா ளையம் மண்ட லங்களில் பணி தொடங்கிவிட்டது. அடுத்த 2 கட்டங்களுக்கான டெண்டரும் விரைவில் விடப்படுகிறது. முறப்பநாடு திட்டத்துக்கும் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆர்டர் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் பேசி வருகிறோம். ஒரு மாதத்தில் அந்த பணிகள் தொடங்கி விடும் என்றார்.

    வழிகாட்டி பலகை

    நெல்லை மண்டல சேர்மன் மகேஸ்வரி பேசுகையில், வார்டு பகுதி முழுவதும் கழிவு நீர் ஓடை பிரச்சினை கடுமையாக உள்ளது. தெரு நாய் பிரச்சி னையால் மக்கள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகி உள்ளனர். பம்பன் குளம் சீரமைப்பு செய்யப்ப ட்டுள்ளது.ஆனால் அங்கு பாதுகாப்பு வசதி இல்லாமல் உள்ளது.

    பேட்டை பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதர நிலையம் எங்குள்ளது என்றே தெரியவில்லை. அதற்கு வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். காலையில் கொசு மருந்து அடித்தால் கொசு சாவதில்லை. மயக்கம் மட்டுமே அடை கிறது.மாலை ஒரு வேளை கூடுதலாக கொசு மருந்து அடிக்கவேண்டும் என்றார்.

    தொடர்ந்து 55-வது வார்டு கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் கூறுகையில், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநகர பகுதியில் அம்ருத் திட்ட த்தின் கீழ் அமைக்கப்ப ட்டுள்ள பூங்காக்களில் விளக்குகள் சரிவர எரியவில்லை. அதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    கவுன்சிலர் சந்திரசேகர் பேசுகையில், டவுன் போஸ் மார்க்கெட் இடிக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு அங்கு நூலக கட்டிடம் இருந்தது. தற்போது அங்கு நூல கத்திற்கு கட்டிடம் கிடை யாது என்று தகவல்கள் வந்துள்ளது. எனவே அந்த பகுதியில் மீண்டும் நூல கத்தை அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    கவுன்சிலர் அமுதா கூறுகையில், எனது வார்டு 7 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 14,000 மக்கள் வசித்து வரு கின்றனர். இங்கு அனைத்து சாலைகளும் மோசமாக இருந்து வருகிறது. ராசாத்தி காலனி பகுதியில் ஓடை மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், உலகநாதன், கிட்டு, ரவீந்தர், முத்துலட்சுமி, வரிவிதிப்பு திட்டக்குழு தலைவர் சுதா மூர்த்தி, கோகுல வாணி, ஜெகநாதன், சந்திரசேகர், பவுல்ராஜ், கருப்பசாமி கோட்டையப்பன், அனு ராதா சங்கர பாண்டி யன், வில்சன் மணித்துரை, நித்திய பாலையா, சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன் என அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பேசினார்.
    • மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து மனமாட்சியத்திற்கு இடமில்லாமல் செயல்பட வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் வகாப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரம்பரியமிக்க இந்த நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். எனது அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது இந்த மாநகராட்சி தான். கடந்த 2006 -ம் ஆண்டு மாநகராட்சி கவுன்சிலராக பொறுப்பேற்றேன். இங்கு மிகவும் திறமையான அதிகாரிகள் உள்ளனர். அவர்களை எல்லாம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    எனது சட்டமன்ற தொகுதிக்கு தேவையான சிறிய அளவிலான கோரிக்கைகளை கமிஷனரிடம் செல்போனில் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுத்தேன். பெரிய அளவிலான கோரிக்கைகளை நேரில் சந்தித்து மனுவாக கொடுத்து வருகிறேன். அதற்கான நடவடிக்கை களும் நிறைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இங்குள்ள மாமன்ற உறுப்பினர்கள் எனக்கு பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து வருகின்றனர். மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து மனமாட்சியத்திற்கு இடமில்லாமல் செயல்பட வேண்டும். மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் மக்கள் பணிகளுக்கு வெற்றியை பெற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
    • மாநகராட்சி 4 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கும் நிர்வாக பணிகள், பொது சுகாதார பிரிவின் மூலம் பள்ளிகள்,மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்று வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது பரிசுக்கு தேர்வாகி மாநகராட்சிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து, தேசிய விருதினை நானும், கமிஷனரும் இணைந்து பெற்றுக்கொண்டோம். அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கி வாழ்த்து பெற்றோம். அதுபோல அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் , பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஆகியோரிடமும் வாழ்த்துக்கள் பெற்றோம். இதற்கு காரணமான அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த விருது பெறப்பட்டுள்ளதால் வருகிற காலங்களில் மாநகராட்சியை சுகாதாரமாகவும், பசுமை நிறைந்த நகரமாகவும், மாசற்ற சுற்று சூழல் மேம்பாடு அடைந்த நகரமாகவும் இருக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள், மேயர் ஜெகன் பெரியசாமிக்கும், கமிஷனருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் மற்றும் காற்று மாசுபடுவதை தவிர்த்தல், சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் பொருட்டு மியாவாகி முறையில் அமைக்கப்பட்ட அடர் காடுகளை தொடர்ந்து பராமரிக்க நடவடிக்கை எடுப்பது, மாநகராட்சி பொது நிதியின் கீழ்மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாநகராட்சி 4 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கும் நிர்வாக பணிகள், பொது சுகாதார பிரிவின் மூலம் பள்ளிகள் மருத்துவமனைகள் உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சுகாதாரச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணம் திருத்தம் செய்து வசூலிக்க தீர்மானிப்பது உட்பட பல்வேறு தீர்மா னங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி,கோட்டுராஜா, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழு தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், கமிஷனரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், ஹரிகணேஷ், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடை பெறவில்லை.
    • ரகுமத் நகர் பகுதியில் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர். ராஜூ கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மனு

    55-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடை பெறவில்லை. இந்த மாதமும் இதுவரை நடைபெற வில்லை. இதனால் மக்கள் குறைகளை மன்ற கூட்டங்களில் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத காரணத்தால் ஏராளமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    அடிப்படை தேவையான குடிநீர் சரிவர கிடைக்காததற்கு காரணம் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததே காரணம். எனவே உடனடியாக மாநகராட்சி கூட்டத்தை நடத்தி, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திராவிடர் தமிழர் கட்சி

    திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருகுமரன் கொடுத்த மனுவில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் தச்சை மண்டலம் வண்ணார்பேட்டை பகுதியில் தூய்மை பணியில் வடிவேல் முருகன் என்பவரை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி உள்ளனர்.

    இதனால் அவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரை கட்டாயப்படுத்திய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    சீரான குடிநீர்

    5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் கொடுத்த மனுவில், எங்கள் வார்டு பகுதியில் சீரான குடிநீர் வழங்கி 1 மாதத்திற்கும் மேலாகிறது. ரகுமத் நகர் பகுதியில் தண்ணீர் திறப்பாளராக பணியாற்றியவர் மாற்றப்பட்டு வேறொருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனால் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகராட்சியின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.
    • கவுன்சிலர்கள் ரவீந்தர், உலகநாதன் உள்ளிட்டோர் நெல்லை கண்ணன் சாலை என பெயரிட்டதற்கு வாழ்த்தி பேசுவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை கண்ணன் பெயர்

    கூட்டத்தை திருக்குறள் வாசித்து மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு தமிழ் அறிஞர் நெல்லை கண்ணனின் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கூட்டம் இந்த தீர்மானத்துடன் முடிவடைவதாக மேயர் சரவணன் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது கவுன்சிலர்கள் ரவீந்தர், உலகநாதன் உள்ளிட்டோர் நெல்லை கண்ணன் சாலை என பெயரிட்டதற்கு வாழ்த்தி பேசுவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அதற்குள் கூட்டம் முடிக்கப்பட்டது.

    ஏற்கனவே கடந்த 27-ந்தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அனைத்து மாமன்ற உறுப்பினர்களிடமும் விவாதம் நடத்தி கருத்து கேட்டு தீர்மானத்தை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்களின் ஒட்டுமொத்த ஆதரவின் கீழ் சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயர் சூட்டப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் உலகநாதன், ரவீந்தர், கிட்டு, கோகுல வாணி, பவுல்ராஜ், அனுராதா சங்கரபாண்டியன், முத்துலட்சுமி சண்முகையா பாண்டியன், சந்திரசேகர், முத்து சுப்பிரமணியன், சுந்தர், நித்திய பாலையா, வில்சன் மணித்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • முன்னதாக மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி கூட்டரங்கில் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு தேர்தல்

    முன்னதாக மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி கூட்டரங்கில் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

    இதற்காக மாநகராட்சி கவுன்சிலர்கள் 55 பேரும் கலந்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷன ரும், தேர்தல் அதிகாரியுமான சிவகிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு மேல்முறை யீட்டு குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மனு தாக்கல் நடைபெற்றது.

    வேட்பாளர்கள் அறிவிப்பு

    ஏற்கனவே நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பா ளர் தி.மு.க மைதீன்கான், வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்தார்.

    அதன்படி தச்சை மண்ட லத்துக்கு துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கந்தன், கீதா ஆகியோரும், நெல்லை மண்டலத்தில் கவுன்சிலர்கள் உலகநாதன், ராஜேஸ்வரி ஆகியோரும், பாளை மண்டலத்தில் கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, பாலம்மாள், மேலப்பாளையம் மண்டலத்தில் கவுன்சிலர்கள் முகைதீன் அப்துல் காதர், ஆமீனா பீவி ஆகியோர் என 9 பேர் வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டிருந்தனர்.

    இதனால் போட்டி இருக்காது, அனைத்து கவுன்சிலர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படு வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    3 பேர் சுயேட்சையாக போட்டி

    இந்நிலையில் திடீர் திருப்பமாக தி.மு.க.வை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் ஜெகநாதன், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர், 42-வது வார்டு உறுப்பினர் பொன் மாணிக்கம் ஆகிய 3 பேரும் சுயேட்சையாக போட்டி யிடுவதாக கூறி மனு தாக்கல் செய்தனர். இதனால் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி யில் 55 கவுன்சிலர்களும் கலந்து கொண்டு தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

    அவர்களுக்காக வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்கு சீட்டிலும் 12 கவுன்சிலர்களின் பெயர்கள் இருந்தது. அதில் 9 கவுன்சிலர்களை அவர்கள் தேர்வு செய்து ஓட்டு போட்டியில் போட்டனர்.

    தொடர்ந்து வாக்கு என்னும் பணி நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்பட 6 பேர் வெற்றி பெற்றனர். அதே நேரம் மத்திய மாவட்ட தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, பாலம்மாள், ஆமீனாள் பீவி ஆகிய 3 பேரும் தோல்வி அடைந்தனர்.

    அவர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட ஜெகநாதன், ரவீந்தர், பொன் மாணிக்கம் ஆகிய 3 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    கூட்டம்

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி மைய மண்டபத்தில் கூட்டம் நடந்தது. மேயர் சரவணன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து அவர் டவுன் ஆர்ச்சில் இருந்து குறுக்குத் துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என பெயர் வைக்கப்படு வதாக தீர்மானத்தை வாசித்தார்.

    அப்போது கவுன்சிலர் சங்கர் எழுந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மேலும் பல கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் சரவணன் அறிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் பேச தொடங்கினர்.

    பெண் கவுன்சிலர்கள் போராட்டம்

    அப்போது நெல்லை மண்டல சேர்மன் மகேஸ்வரி பேசும் போது, தனக்கு கொலை மிரட்டல்கள் விடுத்து வருவதாக தெரி வித்தார். அவருக்கு ஆதர வாக கோகுல வாணி உள்ளிட்ட பெண் கவுன்சி லர்கள் கோஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி மைய மண்ட பத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அப்போது கவுன்சிலர்கள் ரவீந்தர், மாரியப்பன் உள்ளிட்ட வர்கள் பேசும் போது, மேயரின் செயல் பாட்டால் தான் தற்போது வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தலில் போட்டி ஏற்பட்டது. இல்லையென்றால் 9 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப் போம் என கூறி கோஷம் எழுப்பினர்.

    இதனால் அங்கு கூச்சல்- குழப்பம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப் படுவதாக தெரிவித்து மேயர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதை கேட்ட கவுன்சி லர்கள் மேயர் கூட்டத்திற்கு வரவேண்டும், அவரிடம் எங்களது வார்டு பகுதிகளின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற வேண்டும் என கூறினர். அதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    • கவுன்சிலர்கள்,மண்டல தலைவர்களுக்கு சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர் உலகநாதன் பேசினார்.
    • கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு தபால் தலை

    தொடர்ந்து தீர்மான ங்களை வலியுறுத்தி மேயர் சரவணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் அதிகளவில் நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதோடு, முதல் தலை முறை பட்டதாரிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, தமிழக தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா மற்றும் நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக மாநகராட்சியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலைகளை மத்திய அரசு வெளியிட வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தி.மு.க. கவுன்சிலர் சங்கர் கூறும்போது, எங்களது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக சரிவர குடிநீர் வினியோ கிக்கப்படவில்லை. எனவே உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா பேசும்போது, 41-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசும்போது, பாதாள சாக்கடை 3-ம் கட்ட பணிகள் எப்போது தொடங்கும்? முறப்பநாடு குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகர விரிவாக்க பகுதி களுக்கு விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கவுன்சிலர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கு சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர் உலகநாதன் பேசினார்.

    கவுன்சிலர் சின்னத்தாய் பேசும்போது, ஒரு சமூகத்தின் மனவலியை மாமன்னன் திரைப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது. எங்கள் பகுதியில் அதிகளவு ஓடைகள் உள்ளது. ஆனால் அதனை சீரமைக்காமல் உள்ளது. அண்ணா நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. எனவே அங்கு தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தூய்மை பணியா ளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கூறும்போது, நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்ட சிந்துபூந்துறை- உடையார்பட்டி சாலையை சீரமைத்ததற்கு நன்றி, சிந்துபூந்துறை மின்தகன மேடையில் கூடுதலாக ஒரு அறை அமைக்க வேண்டும், 1 ஆண்டாக பணிக்குழு கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. அதனை நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் பேசும்போது, மாநகர பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் சாப்பாட்டின் அளவு குறைத்து வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 28-வது வார்டுக்குட்பட்ட பூங்கா பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    திடீர் போராட்டம்

    முன்னதாக, ரூ.32 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு மேயர் கையெழுத்திடாமல் உள்ளதால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டள்ளதாக கூறி கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் கூட்டத்திற்கு செல்லாமல் மாநகராட்சி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனே அங்கு சென்ற மேயர் சரவணன் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கூட்டத்திற்கு சென்றனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாளை விருந்தினர் மாளிகைக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி ராஜாஜி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக அரசுக்கு நன்றி

    கூட்டத்தில் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்ததற்கும், நெல்லை மாநகர பகுதியில் பொருநை அருங்காட்சியகம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேருவுக்கும் நன்றி தெரிவிப்பது, பாளை விருந்தினர் மாளிகைக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது.

    தொடர்ந்து தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட கவுன்சிலர்கள் தச்சை சுப்பிர மணியன், கோகுலவாணி, சங்கர் உள்ளிட்டோர் பேசும்போது, நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் உந்துதல் மையத்தில் இருந்து நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவு நீர் உந்துதல் மையத்திற்கு செல்லும் குழாயை உடைத்துள்ளதால் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை 3-வது கட்ட பணிகளை உடனடியாக நிறைவேற்றி அதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோர வேண்டும் என வலியுறுத்தினர்.

    காரசார விவாதம்

    அதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடை பெற்றது. இதேபோல் மேலப்பாளையம் மண்டலத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் ரம்ஜான் அலி, ரசூல்மைதீன் உள்ளிட்டோர் பேசும்போது, பாளையங்கால்வாயில் நேரடியாக கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றனர்.

    பாளை பகுதி கவுன்சி லர்கள் சிலர் பேசுகை யில், கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் நீராதாரமாக விளங்கும் அடிக்குழாய்கள் பல்வேறு பகுதிகளில் சிதலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து கேட்டால் அதற்கான உபகரணங்கள் வரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சியில் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படுவது போல் மண்டல அலுவலங்களிலும் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றனர்.

    சிறப்புக்குழு

    கவுன்சிலர் உலகநாதன் பேசும்போது, டவுன் வ.உ.சி. தெருவில் அமைக்க ப்பட்டுள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் பழுதடைந்து உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் பதிலளித்து பேசிய மேயர் சரவணன் கூறியதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு உருவாக்கி கண்காணிக்கப்படும். மண்டல அளவில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை களில் மாலை நேரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுதாமூர்த்தி, கருப்பசாமி கோட்டை யப்பன், பவுல்ராஜ், கிட்டு என்ற ராம கிருஷ்ணன், ரவீந்தர், நித்திய பாலையா, சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.
    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்மின் கோபுரங்களை மாற்றி அமைக்க வேண்டியது இருப்பதால், அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் வகையில் நகர்புற சாலைகள் மேம்பாட்டு நிதியில் (2022 -2023) ரூ.9 கோடியே 26 லட்சம் மதிப்பில் 25.21 கிலோ மீட்டர் நீளத்திற்கு 91 சாலைகள் அமைக்க அரசாணை எண் 192-ன் படி முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மழைநீர் வடிகால் கட்டும் (தொகுப்பு 1) பனியினை உலக வங்கி நிதி ஆதாரத்துடன் கடன் மான்யம் மற்றும் உள்ளாட்சி பங்கு தொகையுடன் 6 சிப்பந்திகளாக 96.2 கோடியில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    மேற்கொள்ளப்பட்ட 6 பணிகள் முடிவு பெற்றுள்ளது.

    முடிவுற்ற பணிகளுக்கு ரூ.10.51 கோடி மான்யம் வரவேண்டி உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்மின் கோபுரங்களை மாற்றி அமைக்க வேண்டியது இருப்பதால், அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு கடன் தொகை முழுமையாக பெறாமல் இருப்பதால்

    நிலுவைத் தொகையை வசூலிக்க தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் முலம் கால நீட்டிப்பு செய்து தரக்கோரி முன்மொழிவு செய்ய மாமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து அனுமதி அற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்ட மணி,கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி,ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், ஹரிகணேஷ், ராஜபாண்டி உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாமன்ற உறுப்பினர் நிதியை உயர்த்தக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள், மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பான விவாதம் நடந்தது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் துணைமேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. மாமன்ற குழு தலைவர் ஜெயராமன் பேசும்போது, எங்களுக்கு உரிய இருக்கை வசதி செய்துதர வேண்டும் என்றார்.

    அவரை தொடர்ந்து மாமன்ற குழு துணைத் தலைவர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் இருக்கை கேட்டு பிரச்சினை செய்தனர். 92-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கருப்புசாமி பேசும்போது, இது உள்கட்சி பிரச்சினை. இங்கு மக்கள் பிரச்சினையை மட்டும் தான் பேச வேண்டும் என்றார். இதனால் தி.மு.க. மாவட்ட உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் விவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.

    காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, மக்கள் பிரச்சினையை மாமன்ற கூட்டத்தில் பேசுங்கள். வேறு பிரச்சி னையை தனியாக மேயரிடம் சென்று கூறுங்கள் என தெரிவித்தார். உடனே அவரை எதிர்த்து ஒரு தி.மு.க. கவுன்சிலர், "நீங்கள் மட்டும் மாமன்ற கூட்டத்திற்குள் ராகுல்காந்தி படத்தை கொண்டு வந்து பேசியது எந்த வகையில் நியாயம்? என ஒருமையில் பேசியதால் சலசலப்பு அதிகமானது.

    இரு தரப்பையும் சமாதானம் செய்ய மேயர் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் அருகில் வந்து வாக்குவாதம் செய்தனர்.

    முடிவில் மேயர் பேசும்போது, உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் காவலர்களை வைத்து வெளியேற்ற செய்ய வேண்டியது இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் அனைவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர்.

    பின்னர் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடந்தது.

    67-வது வார்டு உறுப்பினர் நாகநாதன் பேசும்போது, விராட்டிபத்து பகுதியில் சாலை வசதி சரியில்லை. அந்த பகுதியில் பாலம் கட்டும் பணியை செய்த தனியார் நிறுவனம் சாலைகளை சேதப்படுத்தி விட்டது. மேலும் எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் பாதாள சக்கரை வசதி போன்றவை செய்து தர வேண்டும்.

    அவரை தொடர்ந்து பேசிய 64-வது வார்டு உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சோலை ராஜா பேசும்போது, மதுைரயைவிட குறைந்த வருவாய் ஈட்டக்கூடிய கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை குறைவாக உள்ளதால் அதனை தலா ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார். 

    • தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    மாநகராட்சியில் முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் ஆசிய மேம்பாட்டு வங்கிநிதி உதவியுடன், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ. 87.7 கோடி மதிப்பீட்டில் 4 சிப்பந்திகளாக 36.36 கிலோ மீட்டர் நீளம் மேற்கொள்ள தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம், ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி, மாநகராட்சி பங்குத் தொகையுடன் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாழும் இளைஞர்கள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புல் தோட்டம் ெரயில்வே நிலைய ரோடு, சுந்தரவேல்புரம் மற்றும் அசோக்நகர் ஆகிய பகுதிகளில் நவீன முறையில் உள் இறகுபந்து விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

    எனவே விளையாட்டு அரங்கினை பொதுமக்கள், இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள சந்தை கட்டணங்க ளின்படி மாநகராட்சியை நேரடியாக தொடர்பு கொண்டு பயன் பெற நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.

    மாநகரின் 4 ன்கு மண்டலங்களளிலும் நடைபெற்று வரும் சீர்மிகு நகர அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடைபெறும் நிலையில் தொழில்நுட்ப உதவியாக பணி நியமனம் பெற்றவர்களின் பனிக்காலத்தை மேலும் நீடிப்பது,

    தனி நபர் ஆக்கிரமிப்பை தடுக்கவும், மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கவும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மீனவ மகளிர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை மூலம் சுய தொழில் பயிற்சி வழங்குதல், ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, முத்துவேல், விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, வெற்றிச ்செல்வன்,ஜெயலட்சுமி சுடலைமணி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், சேகர், ஹரிகணேஷ் ராஜபாண்டி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் வருகிற 28-ந் தேதி மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது.
    • துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்திற்கு துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்த மான காலி இடங்களில் வேளாண்மை விற்பனை குழு மூலமாக நடைபெற்று வரும் உழவர் சந்தைக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரால் ஆண்டு வாடகையாக ரூ.25 ஆயிரம் மட்டும் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    மேலும் பாளை மண்டலம் 8-வது வார்டு சக்தி நகரில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் பொது கழிப்பிடம் அமைக்கும் பணியினை ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டதில் போதுமான இடவசதி இல்லாததினால் இந்த பொது கழிப்பிடத்தை அதே வார்டில் உள்ள மாற்று இடமான கனநாத நாயனார் தெருவில் உபயோகமற்ற நிலையில் உள்ள மிகவும் பழுதடைந்த பழைய பொது கழிப்பிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் கட்டுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    ×