search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor saravanan"

    • தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாளையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாளையில் உள்ள கலைஞர் கூட்டமைப்பு அரங்கத்தில் நடைபெற்றது.

    இதில் மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மண்டல தலை வர்கள் பிரான்சிஸ், கதீஜா இக்லாம் பாசில்லா, கவுன்சி லர்கள் பவுல்ராஜ், இந்திரா மணி, சின்னத்தாய், ஆமீனா, சுப்பு லெட்சுமி, பேச்சி யம்மாள் மற்றும் மருத்து வர்கள், செவிலியர்கள் டெங்கு தடுப்பு களப் பணியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் திடீரென மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கலுசலிங்கத்தின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க போலியாக சிலர் வாரிசு சான்று தயார் செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்கு துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென அவர்கள் அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து அவர்கள் மேயர் சரவணணிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை தாலுகா பேட்டை வி.வி.கே. தெருவில் வசிக்கும் சிதம்பரம் என்பவரது மகன் கலுசலிங்கம் என்பவர் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அவரின் மனைவி சாந்திக்கு சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். சாந்தி கடந்த 2012-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

    இந்நிலையில் கலுசலிங்கத்தின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க போலியாக சிலர் வாரிசு சான்று தயார் செய்துள்ளனர். ரூ.25 லட்சம் வரை செலவு செய்து போலியான ஆவணங்களை கொடுத்து வாரிசு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • டவுன் குறுக்குத்துறை செல்லும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டும் விழா மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • பின்னர் அந்த சாலையில் மேயர், நெல்லை கண்ணன் குடும்பத்தினர் நடந்து சென்றனர்.

    நெல்லை:

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் நினைவாக நெல்லை டவுன் ஆர்ச் அருகில் உள்ள வளைவு முதல் குறுக்குத் துறை சாலையில் இணையும் தென் வடல் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என நெல்லை மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு நிறை வேற்றப்பட்டது .

    இதனைத் தொடர்ந்து இன்று நெல்லை கண்ணன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டவுன் குறுக்குத்துறை செல்லும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டும் விழா மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு நெல்லை கண்ணன் மகனும், எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமான சுகா முன்னிலையில் நெல்லை கண்ணன் சாலை பெயர் சூட்டி, பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் அந்த சாலையில் மேயர், நெல்லை கண்ணன் குடும்பத்தினர் நடந்து சென்றனர். பொதுமக்கள் அந்த சாலையில் நடந்து சென்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் சந்திரசேகர், அருணா கார்டியா கேர் டாக்டர் அருணாசலம், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய வாதிகள், பொது மக்கள் என ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.

    • மாதம் தோறும் 3-வது சனிக்கிழமையில் பொது மக்களிடையே மட்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • சாலைகளில் தூய்மை பணியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    விழிப்புணர்வு

    மேலும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் மாதம் தோறும் 3-வது சனிக்கிழமையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களுக்கான தூய்மை இயக்கம் என்ற தலைப்பில் பொது மக்களிடையே மட்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த நாளில் நெல்லை மாநகராட்சியில் மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்து தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று மேயர் சரவணன் தலை மையில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மேயர் சரவணன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சாலைகளில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜூ, கவுன்சிலர்கள் சந்திரசேகர், ரசூல் மைதீன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, நெல்லை மண்டல சுகாதார அலு வலர் இளங்கோ மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சப்பாணிமாடன் கோவில் பகுதியில் ஒருவாரமாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
    • கரையிருப்பு பகுதியில் புதிய வாறுகால் அமைக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் கே.ஆர். ராஜூ, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தச்சநல்லூர் ஆனந்தபுரத்தை சேர்ந்த நயினார்குளம் நீர்ப்பாசன உதவி செயலாளர் முருகன் தலைமையில் கொடுத்த மனுவில், நயினார் குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய டவுன் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அருகில் குடியிருப்போர் அங்கு குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அதனை தடுக்கும் விதமாக அங்கு டைமண்ட் கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    1-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், சப்பாணிமாடன் கோவில் பகுதியில் ஒருவாரமாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையிருப்பு பகுதியில் புதிய வாறுகால் அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர். கொக்கிரகுளம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் இளங்கோவடிகள் தெரு, 14 வார்டு அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வாறுகால்களை தூர்வார வேண்டும் என கூறியிருந்தனர்.

    • வரவு-செலவு அறிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.24 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது.
    • பட்ஜெட் கூட்டத்தின் போது மக்களை தேடி மேயர் திட்டம் என பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    நிதி நிலை அறிக்கை

    மேயர் சரவணன் பதவி ஏற்ற பின்னர் முதல் நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்து பேசியதாவது:-

    நெல்லை மாநக ராட்சியில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. வருவாய் மூலதன நிதியின் கீழ் 93 கட்டிடங்கள் ரூ.843.91 லட்சம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டு 39 கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு, 31 பணிகள் நடந்து வருகிறது.

    ஒப்பந்த புள்ளிக்காக 23 பணிகள் நடவடிக்கையில் உள்ளது. மாநகராட்சியில் 44 சிறுபாலங்கள் கட்ட ரூ.153.15 லட்சம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டு 14 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. ரூ.464.82 லட்சத்தில் 59 மழைநீர் வடிகால் பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு 12 பணிகள் முடிக்கப்பட்டு, 26 பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநக ராட்சியில் 2023-2024 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் வருவாய், குடிநீர், ஆரம்ப கல்விக்கான நிதி வருவாயாக ரூ.312.56 கோடியாக திட்டமிடப்பட்டு வருவாய், குடிநீர், ஆரம்ப கல்விக்காக ரூ.312.80 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த வரவு-செலவு அறிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.24 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது.

    மாநகராட்சி கட்டுப் பாட்டில் உள்ள 32 பள்ளி களில் அனைத்து வகுப்பு களுக்கும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப் பட்டு அதனை தலைமை ஆசிரியர் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க கூடுதலாக 2 கருத்தடை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் தாமிரபரணியை அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தீர்மானங்கள்

    தொடர்ந்து, பாளை மனக்காவலம் பிள்ளை மருத்துவ மனை அருகே பல்நோக்கு மையம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும், கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை மாநகர எல்லை பகுதியில் மாநக ராட்சி சார்பில் கலைஞர் நுற்றாண்டு வளைவு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது.

    மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 29 தி.மு.க. கவுன்சிலர்களும், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். மேயர் சரவணனுக்கு எதிராக 30-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.

    இன்றைய கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறை வேற்ற திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் 11 தீர்மானங்களுக்கு மட்டும் கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். மற்ற 19 தீர்மானங்களை நிராகரிக்க தி.மு.க. கவுன்சிலர்கள் கூறினர்.

    இது தொடர்பாக மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் 19 தீர்மானங்களை நிராகரிக்க வலியுறுத்தினர். இதனால் அந்த தீர்மா னங்களை உடனடியாக ஒத்தி வைப்பதாக கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவித்தார்.

    ஆனால் 33 கவுன் சிலர்கள் தீர்மானத்திற்கு எதிராக கையெழுத்திட்டு உள்ளதால் அதனை நிராகரிக்க வேண்டும் என தி.மு.க. மூத்த கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். ஏற்கனவே மக்களை தேடி மேயர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.

    அப்போது மக்களை தேடி மேயர் என்பதற்கு பதிலாக மக்களை தேடி மாநகராட்சி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி அந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது.

    இந்நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தின் போது மக்களை தேடி மேயர் திட்டம் என பட்ஜெட் உரையில் இடம் பெற்றி ருந்தது. இதற்கு கவுன்சிலர்கள் ஆட்சே பனை தெரிவித்ததால் உடனடியாக அவை திருத்தம் செய்யப் படும் என மேயர் அறிவித்தார்.

    கூட்டத்தில் கவுன் சிலர்கள் தச்சை சுப்பிர மணியன், சுதா மூர்த்தி, கோகுலவாணி, கிட்டு, ரவீந்தர், உலகநாதன், அனு ராதா, பவுல்ராஜ், கோட்டையப்பன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெக நாதன், முத்துலட்சுமி, சந்திர சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் வருகிற 28-ந் தேதி மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது.
    • துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்திற்கு துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்த மான காலி இடங்களில் வேளாண்மை விற்பனை குழு மூலமாக நடைபெற்று வரும் உழவர் சந்தைக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரால் ஆண்டு வாடகையாக ரூ.25 ஆயிரம் மட்டும் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    மேலும் பாளை மண்டலம் 8-வது வார்டு சக்தி நகரில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் பொது கழிப்பிடம் அமைக்கும் பணியினை ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டதில் போதுமான இடவசதி இல்லாததினால் இந்த பொது கழிப்பிடத்தை அதே வார்டில் உள்ள மாற்று இடமான கனநாத நாயனார் தெருவில் உபயோகமற்ற நிலையில் உள்ள மிகவும் பழுதடைந்த பழைய பொது கழிப்பிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் கட்டுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு பரவலை தடுக்க கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவில் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு பரவலை தடுக்க கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவில் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    இதுதவிர வாறுகால்கள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை விரைவுபடுத்தி அதனை அவ்வப்போது மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டெங்கு உள்ளிட்ட எந்த காய்ச்சல்களும் பொதுமக்களுக்கு ஏற்படாமல் இருக்க அனைத்துவித முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைளும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.

    விழிப்புணர்வு பேரணி

    இந்நிலையில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனை மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    பேரணி 4 ரதவீதிகள் வழியாக சென்றது. இதில் கலந்த கொண்டவர்கள் டெங்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

    உறுதிமொழி

    முன்னதாக மேயர் சரவணன் தலைமையில் டெங்கு ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மாமன்ற உறுப்பினர் உலகநாதன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் டெங்கு களப்பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சியில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • மல்லிகா காலனியில் இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தியாகராஜ நகர் மல்லிகா காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் குமாரவேல் தலைமையில் செயலாளர் பழனிச்செல்வி, பொருளாளர் பெரியநாயகம் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான மல்லிகா காலனி உருவாகி 40 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த அடிப்படை வசதியும் எங்களுக்கு செய்து தரப்படவில்லை. புறவழிச் சாலைக்கு அருகே இருப்பதால் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சாலை வசதி கேட்டால் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின்னரே பணிகள் நடைபெறும் என்று கூறிவிட்டனர்.

    எங்களது தெருக்கள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. எங்களது பகுதியில் 19 மின்கம்பங்கள் உள்ளன. இதில் எந்த கம்பத்திலும் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    எனவே உடனடியாக அந்த பகுதியை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தந்து எங்கள் பகுதி மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்

    • டவுன் பாட்டப்பத்து பகுதியில் சாலை அமைக்க ஜல்லி தளம் போடும் பணி நடைபெற்று வருகிறது.
    • பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளிடம் மேயர் சரவணன் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன் பாட்டப்பத்து பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளுக்காக ஜல்லி தளம் போடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனை நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வடிகால் ஓடை அமைக்கும் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

    அப்போது பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்கவும், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மேயர் சரவ ணன் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது கவுன்சிலர் நித்தியபாலையா, உதவி செயற்பொறியாளர் பைஜூ ஆகியோர் உடனி ருந்தனர்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • உடையார்பட்டி ஆற்றிற்கு செல்லும் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் லெனின், உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் கொடுத்த மனுவில், பாளை பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த பெருந்தலைவர் காமராஜர் கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும். இல்லையென்றால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசு கொடுத்த மனுவில்,பாளை காமராஜர் காலனியில் 36-வது வார்டு ரேசன் கடை மேற்கூரை இடிந்துள்ளது. எனவே அங்கு புதிய கட்டிடம் தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    12-வது வார்டு கவுன்சிலர் கோகிலவாணி கொடுத்த மனுவில், உடையார்பட்டி பள்ளியின் மேற்கூரையை சரிசெய்து தரவேண்டும். உடையார்பட்டி ஆற்றிற்கு செல்லும் நடைபாதையை சீரமைத்து தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது வார்டான டவுன் 16-வது வார்டில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது வார்டான டவுன் 16-வது வார்டில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வார்டுக்கு ட்பட்ட அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

    அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது நெல்லை மண்டல உதவிகமிஷனர் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் பட்டுராஜன், சுதாகர் அலுவலகர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×