search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சியில் குடிநீர், ஆரம்ப கல்விக்காக ரூ.312.80 கோடி ஒதுக்கீடு-பட்ஜெட் கூட்டத்தில் மேயர் அறிவிப்பு

    • வரவு-செலவு அறிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.24 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது.
    • பட்ஜெட் கூட்டத்தின் போது மக்களை தேடி மேயர் திட்டம் என பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    நிதி நிலை அறிக்கை

    மேயர் சரவணன் பதவி ஏற்ற பின்னர் முதல் நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்து பேசியதாவது:-

    நெல்லை மாநக ராட்சியில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. வருவாய் மூலதன நிதியின் கீழ் 93 கட்டிடங்கள் ரூ.843.91 லட்சம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டு 39 கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு, 31 பணிகள் நடந்து வருகிறது.

    ஒப்பந்த புள்ளிக்காக 23 பணிகள் நடவடிக்கையில் உள்ளது. மாநகராட்சியில் 44 சிறுபாலங்கள் கட்ட ரூ.153.15 லட்சம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டு 14 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. ரூ.464.82 லட்சத்தில் 59 மழைநீர் வடிகால் பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு 12 பணிகள் முடிக்கப்பட்டு, 26 பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநக ராட்சியில் 2023-2024 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் வருவாய், குடிநீர், ஆரம்ப கல்விக்கான நிதி வருவாயாக ரூ.312.56 கோடியாக திட்டமிடப்பட்டு வருவாய், குடிநீர், ஆரம்ப கல்விக்காக ரூ.312.80 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த வரவு-செலவு அறிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.24 லட்சம் பற்றாக்குறையாக உள்ளது.

    மாநகராட்சி கட்டுப் பாட்டில் உள்ள 32 பள்ளி களில் அனைத்து வகுப்பு களுக்கும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப் பட்டு அதனை தலைமை ஆசிரியர் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க கூடுதலாக 2 கருத்தடை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் தாமிரபரணியை அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தீர்மானங்கள்

    தொடர்ந்து, பாளை மனக்காவலம் பிள்ளை மருத்துவ மனை அருகே பல்நோக்கு மையம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும், கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை மாநகர எல்லை பகுதியில் மாநக ராட்சி சார்பில் கலைஞர் நுற்றாண்டு வளைவு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது.

    மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 29 தி.மு.க. கவுன்சிலர்களும், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். மேயர் சரவணனுக்கு எதிராக 30-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.

    இன்றைய கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறை வேற்ற திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் 11 தீர்மானங்களுக்கு மட்டும் கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். மற்ற 19 தீர்மானங்களை நிராகரிக்க தி.மு.க. கவுன்சிலர்கள் கூறினர்.

    இது தொடர்பாக மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் 19 தீர்மானங்களை நிராகரிக்க வலியுறுத்தினர். இதனால் அந்த தீர்மா னங்களை உடனடியாக ஒத்தி வைப்பதாக கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவித்தார்.

    ஆனால் 33 கவுன் சிலர்கள் தீர்மானத்திற்கு எதிராக கையெழுத்திட்டு உள்ளதால் அதனை நிராகரிக்க வேண்டும் என தி.மு.க. மூத்த கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். ஏற்கனவே மக்களை தேடி மேயர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.

    அப்போது மக்களை தேடி மேயர் என்பதற்கு பதிலாக மக்களை தேடி மாநகராட்சி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி அந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது.

    இந்நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தின் போது மக்களை தேடி மேயர் திட்டம் என பட்ஜெட் உரையில் இடம் பெற்றி ருந்தது. இதற்கு கவுன்சிலர்கள் ஆட்சே பனை தெரிவித்ததால் உடனடியாக அவை திருத்தம் செய்யப் படும் என மேயர் அறிவித்தார்.

    கூட்டத்தில் கவுன் சிலர்கள் தச்சை சுப்பிர மணியன், சுதா மூர்த்தி, கோகுலவாணி, கிட்டு, ரவீந்தர், உலகநாதன், அனு ராதா, பவுல்ராஜ், கோட்டையப்பன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெக நாதன், முத்துலட்சுமி, சந்திர சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×