search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People's Grievance Meeting"

    • கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவ லர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டும னைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, மாற்றுத்திற னாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகர ணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடுகள் குறித்தும், மாற்றுத்திற னாளிகளிடமிருந்து உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 332 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் தூய்மையாக இருப்பதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்வதுடன் தங்கள் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்கள் வரப்பெற்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு 7,800 ரூபாய் மதிப்பில் நடைபயிற்சி சாதனம், ஒருவருக்கு 2,500 ரூபாய் மதிப்பில் ஊன்று கோல் என மொத்தம் 5 பேருக்கு 10 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அவற்றை, கலெக்டர் உமா, பள்ளி மாணவ, மாணவியர் பார்வை யிட்டனர். தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இதில் தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலாகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது
    • பொதுமக்களை முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளியது.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்தனர்.

    இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால் கலெக்டரை தவிர பிற துறை அதிகாரிகள், பொதுமக்களின் குறைகளை கவனிக்காமல் செல்போனில் மூழ்கினர்.

    குறிப்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தனது செல்போனில், சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருந்தது பொதுமக்களை முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளியது.

    அதே போல பல அதிகாரிகள் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் பொது மக்களிடையே உள்ள நிலையில், அதில் பங்கேற்க வரும் அரசு அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கவனிக்காமல் செல்போனில் மூழ்குவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கரீம் நகர் பகுதியில் கழிவு நீரோடை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
    • 47-வது வார்டு முழுவதும் சாலை பழுதடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிரமமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் நிர்வாகிகள் மேயரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:-

    மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட 52- வது வார்டில் இருக்கும் கரீம் நகர் பகுதியில் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையான கரீம் நகர் கழிவு நீரோடை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. சில ஆக்கிரமிப்பாளர்களின் குறுக்கீடுகளினால் கழிவு நீரோடை அமைக்கும் பணியானது முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பணியை விரைந்து முடித்துத் தர வேண்டும். கரீம் நகர் மஸ்ஜிதுல் ஹீதா பள்ளிவாசல் அருகே அமைந்திருக்கும் கழிவு நீரோடை முறையான அமைப்பில் இல்லாமல் கழிவுநீர் சீராக செல்லாமல் பள்ளிவாசல் அருகே தேங்கி நிற்கும் நிலை உள்ளது. அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதனை விரைந்து சரி செய்ய வேண்டும்.

    மேலும் 47-வது வார்டு முழுவதும் தெருப்புறங்களில் இருக்கும் சாலை பழுதடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மிக சிரமமாக உள்ளது. எனவே அந்த வார்டு முழுவதும் புதிதாக தார் சாலை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் புகாரி சேட், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் காதர் மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நெல்லை மாநகராட்சியில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • மல்லிகா காலனியில் இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தியாகராஜ நகர் மல்லிகா காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் குமாரவேல் தலைமையில் செயலாளர் பழனிச்செல்வி, பொருளாளர் பெரியநாயகம் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான மல்லிகா காலனி உருவாகி 40 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த அடிப்படை வசதியும் எங்களுக்கு செய்து தரப்படவில்லை. புறவழிச் சாலைக்கு அருகே இருப்பதால் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சாலை வசதி கேட்டால் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின்னரே பணிகள் நடைபெறும் என்று கூறிவிட்டனர்.

    எங்களது தெருக்கள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. எங்களது பகுதியில் 19 மின்கம்பங்கள் உள்ளன. இதில் எந்த கம்பத்திலும் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    எனவே உடனடியாக அந்த பகுதியை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தந்து எங்கள் பகுதி மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்

    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
    • கலெக்டர் தலைமையில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குறைகளை கேட்டறிந்தார்.

    மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 180 மனுக்களை கலெக்டர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டார்.

    தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் துறை தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானைமை யினர் நல அலுவலர் முரளி, உதவி ஆணையாளர் கலால் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) மணிமேகலை, மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 99 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
    • முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 99 மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோரின் பிறந்த நாளன்று, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 27 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரத்துக்கான காசோலைகள், வருவாய்த்துறை சார்பில் 2 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 5 பேருக்கு விதவை ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணை, 4 பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் அம்ரித் வழங்கினார். கூட்டத்தில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சம்சுதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) மணிகண்டன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் புகார்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். காட்பாடி அருகே உள்ள கொடுக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் புகார் மனு ஒன்று அளித்தார்.

    அதில் ஊராட்சி செயலாளர் மீது நான் ஊழல் தொடர்பான புகார் அளித்தேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று என்னை புகாரை வாபஸ் பெற கோரி மிரட்டி கும்பல் ஒன்று அடித்து தாக்கினர். என்னையும் என் குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கின்றனர். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த சீத்தம்மாள் (76) என்பவர் காட்டுப்புத்தூர் கிராமத்தில் தனது பெயரில் உள்ள சொத்தை பாகப்பிரிவினை செய்யவிடாமல் மறுக்கும் மகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    ×