search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் மனு"

    • அனைத்து சமத்துவ புரங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.
    • எங்கள் பகுதியில் ரேஷன் கடை, சுற்றுச் சுவர், சாக்கடை கால்வாயும் இல்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பம் சாலையில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் 2006-ம் ஆண்டு அப்போதைய துணை முதல் அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், சமத்துவபுரத்தை திறந்து வைத்து 100 பேருக்கு வீட்டின் சாவியை வழங்கினார். ஆனால் 18 ஆண்டுகள் முடிந்தும் பட்டா வழங்கவில்லை.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சமத்துவ புரங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.

    வீட்டில் புதிய அறைகள் அமைக்கவும், பாகங்கள் பிரிக்கவும், பட்டா தேவைப்படுகிறது. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் மரணமடைந்துள்ளனர். அவர்களின் வாரிகளுக்கு வாரிசு சான்றுடன் பட்டா தேவைப்படுகிறது. எங்கள் பகுதியில் ரேஷன் கடை, சுற்றுச் சுவர், சாக்கடை கால்வாயும் இல்லை. எனவே பட்டா வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மது பாட்டில்களாலும், சந்து கடை விற்பனை, நாள்தோறும் அடிதடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.
    • டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆர்.பூசாரிப்பட்டி பகுதி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர். பூசாரிப்பட்டி-தானம்பட்டி ரோட்டில் சுமார், 350 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு கடந்த காலங்களில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இருவர் இறந்துள்ளனர்.

    மேலும் டாஸ்மாக் கடைக்கு அருகில் தனியார் பள்ளி, மசூதி, தேவாலயம் உள்ளிட்டவைகளும் உள்ளன. இந்த டாஸ்மாக் கடை வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

    சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மது பாட்டில்களாலும், சந்து கடை விற்பனை, நாள்தோறும் அடிதடி பிரச்னைகள் உள்ளிட்டவைகளாலும் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    இது குறித்து பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

    இது குறித்து விசாரித்து டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அவினாசியிலிருந்து 7 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் உள்ளது.
    • தெக்கலூரில் ஒரு சில பஸ் தவிர அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை.

    அவினாசி:

    அவினாசி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., தனபால் தொகுதி மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். அப்போதுஅவினாசி ஒன்றியம் கருவலூரில் உள்ள அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும். வளர்ந்து வரும் கருவலூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.வஞ்சிபாளையம்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். வஞ்சிபாளையத்திலிருந்து முருகம்பாளையம் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.சின்ன ஒலப்பாளையம் கானாங்குளம், குப்பான்டம்பாளையம், வடுகபாளையம்,பிச்சான்டம்பாளையம், ஆலாம்பாளையும் ஆகிய பகுதி எ.டி.காலனி மக்கள் மயானத்திற்கு சாலைவசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும்.

    அவினாசியிலிருந்து 7 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் உள்ளது. இப்பகுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் அவினாசி. திருப்பூர், நியூ திருப்பூர் ஆகிய பகுதியில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கும், விசைத்தறி கூடங்களுக்கும் தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். பள்ளி மாவை, மாணவியர் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் தெக்கலூரில் ஒரு சில பஸ் தவிர அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா.எனவே தெக்கலூரில் அனைத்து பஸ்களும் நின்று பயனிகளை ஏற்றி இறக்கி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ.தனபாலிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிகூறினார்.

    ×