பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்க தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் பொது புகார்களை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் உதவி மையத்தை தொடங்கி உள்ளது.உதவி மையம் மூலம் உரிய துறைக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.
பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்க தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் தொடக்கம்
Published on

தென்காசி:

தென்காசி கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தென்காசி மாவட்டத்தில் அரசாங்க சேவைகளில் உள்ள குறைகளையும், பொது புகார்களையும் கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் கலெக்டர் உதவி மையத்தை தொடங்கி உள்ளது.

எனவே வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு தங்கள் மனுக்களை தக்க விபரங்களோடு சமர்ப்பிக்கலாம்.உதவி மையம் மூலம் உரிய துறைக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.

இந்த உதவி மையம் மூலம் மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான இடைவெளி குறைக்கப்படுவதோடு மக்களின் கோரிக்கைகளையும்,குறைகளையும் கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சரி செய்யும்.

பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மாவட்ட கலெக்டரின் சேவை மையத்தின் கட்டணமில்லா எண் :1800 599 3599 மற்றும் வாட்ஸ்அப் எண் :7790019008 ஆகிய எண்களில் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com