search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
    X

    பட்டா கேட்டு பொதுமக்கள் மனு

    • அனைத்து சமத்துவ புரங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.
    • எங்கள் பகுதியில் ரேஷன் கடை, சுற்றுச் சுவர், சாக்கடை கால்வாயும் இல்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பம் சாலையில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் 2006-ம் ஆண்டு அப்போதைய துணை முதல் அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், சமத்துவபுரத்தை திறந்து வைத்து 100 பேருக்கு வீட்டின் சாவியை வழங்கினார். ஆனால் 18 ஆண்டுகள் முடிந்தும் பட்டா வழங்கவில்லை.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சமத்துவ புரங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.

    வீட்டில் புதிய அறைகள் அமைக்கவும், பாகங்கள் பிரிக்கவும், பட்டா தேவைப்படுகிறது. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் மரணமடைந்துள்ளனர். அவர்களின் வாரிகளுக்கு வாரிசு சான்றுடன் பட்டா தேவைப்படுகிறது. எங்கள் பகுதியில் ரேஷன் கடை, சுற்றுச் சுவர், சாக்கடை கால்வாயும் இல்லை. எனவே பட்டா வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×