என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர்"
- வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
- லின் பங்கேற்று இளைஞர் அணி யினருக்கு பல்வேறு ஆலோச னைகளை வழங்கு கிறார்.
மேலூர்
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு மேலூரில் கலை ஞர் திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற் றாண்டு விழா நடைபெறு கிறது. விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலா ளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின் பங்கேற்று, தி.மு.க. மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கி கவுரவிக்கிறார். அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு வண்டியூர் அருகே உள்ள மஸ்தான் பட்டியில் கருணாநிதியின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் 100 அடி உயர கொடிக்கம்பத் தில் தி.மு.க. கொடியேற்றுகிறார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இதே போல் கொடியேற்ற நிகழ்ச்சியினை தொடர்ந்து மதுரை விரகனூர் சுற்றுச்சா லையில் அமைந்துள்ள கலைஞர் திடலில் ஒருங்கி ணைந்த மதுரை மாவட்டத் தின் இளைஞர் அணியினர் பங்கேற்கும் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி யினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கு கிறார். விழாவிற்கான ஏற்பா டுகளை அமைச்சர் பி. மூர்த்தி, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் மற்றும் மாவட்ட கழகத்தினர், இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.
- வங்கி மோசடி, குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
- அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிகழ்ச்சி யில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை அட்டையை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 71 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப் பங்கள் அனைத்தும், அரசி டம் உள்ள பல்வேறு தகவல் தரவுத் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிகளைப் பூர்த்தி செய்த மகளிர் பய னாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.
அரசாணையில் குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப் பங்களில் முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்டம்பர் 18 முதல் அனுப்பப்படும்.
இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதார்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சி யருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
தற்போது தொலைபேசி வாயிலாக போலியான நபர்கள் தங்களின் வங்கி கணக்கு தொடர்பாகவும், ஓ.டி.பி. குறுஞ்செய்தி குறித்தும் பொது மக்களி டையே கேட்கப்பட்டு மோசடி நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி என்ன அறிவிப்பார்? என அனைத்து மாநில முதல்வர் களும் பயத்தில் உள்ளனர்.
- முடிவில் மாவட்ட டேரவை துணை தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜ பாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநாட் டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மான்ராஜ் எம்.எல்.ஏ. , முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த போது ராஜபாளை யத்திற்கு ெரயில்வே மேம்பாலம் பாதாள சாக்கடை தாமிர பரணி திட்டங்களை கொண்டு வந்தோம்.
அரசு பஸ்களில் விளம்ப ரங்களை வைத்து விளம்பர பேருந்தாக மாற்றியுள்ளனர். விளம்பரம் நிரந்தரமாகாது. தமிழக அரசு விரைவில் முடிவுக்கு வரும். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி என்ன அறிவிப்பார்? என அனைத்து மாநில முதல்வர் களும் பயத்தில் உள்ளனர். என்ன அறிவிப்பார் என்பது மோடிக்கு தான் தெரியும். நீட்டை ஒழிக்க முடியாதென தெரிந்தும் நீட்டை ஒழிப்போம் என பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.
தி.மு.க. தற்போது சனா தானம் என்ற வார்த்தையை கூறி மக்களை திசை திருப்ப தி.மு.க. அரசு முயற்சி செய்து வருகிறது. வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் துரை முருகேசன், பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வனராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, செட்டியார்பட்டி அங்கு துரைபாண்டியன், சேத்தூர் பொன்ராஜ்பாண்டியன்,போக்குவரத்துபிரிவு குருசாமி, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபுமுருகேசன், தலைமை கழக பேச்சாளர் இள முருகன் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட டேரவை துணை தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. உருவப்படங்கள் எரிக்கப்பட்டன.
- சனாதனம் குறித்து பேசிய சம்பவத்தில்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜ் தலைமையில், அக்கட்சியை சேர்ந்த சிலர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், சனாதனம் குறித்து தவறாக பேசியதாக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் உருவபொம்மையையும், உருவப்படத்தையும் மற்றும் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யின் உருவப்படத்தையும் கொண்டு வந்து, தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- அ.தி.மு.க. கவுன்சிலர் இல்ல திருமண விழா நடைபெற உள்ளது.
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தி வைக்கிறார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மேற்கு 1-ம் பகுதி 83-வது வார்டு செயலாளரும், 83-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு உறுப்பினருமான எஸ்.எம்.டி. ரவி-வேணி தம்பதி யின் மகன் மனோஜ் பாண்டியனுக்கும், தல்லாகுளம் ம.தி.மு.க. பகுதி செயலாளர் வேல். புகழ்முருகன்- பாண்டி யம்மாள் தம்பதியின் மகள் கார்த்தி காவுக்கும் பெரி யோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம் நாளை (10-ந் தேதி) மதுரை காமராஜர் சாலை நிர்மலா மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ ஆகியோர் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். திருமண விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பல் வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதி பர்கள், உற்றார், உறவி னர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
திருமண ஏற்பாடுகளை எஸ். எம். டி. ரவி- வேணி, திவ்யதர்ஷினி -பாண்டி குமார், முருகன், தெற்கு 2-ம் பகுதி பேரவை செயலாளர் முத்துப் பாண்டி-முத்துமீனா மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- பரமக்குடிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி
பரமக்குடியில் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்று தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இமானு வேல்சேகரன் நினை விடத்தில் அஞ்சலி செலுத்து கின்றனர்.
அஞ்சலி செலுத்த வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான செயற்குழு ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் வரவேற்று பேசினார். இதில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மரிச்சிகட்டியில் இருந்து பரமக்குடி வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். இதில் பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் செய்ய வேண்டும். அதே போல் இளைஞரணி மாநில மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, பரமக்குடி நகர் மன்றத் தலைவர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, வக்கீல் பூமிநாதன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் வாசு தேவன், ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, அண்ணா மலை, மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் வக்கீல் கருணாநிதி, வக்கீல் கள் கதிரவன், குணசேகரன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, துணை அமைப்பாளர்கள் குமரகுரு, சண்.சம்பத்குமார், சத்தி யேந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், பகுத்தறிவு பாசறை பிரிவு அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், விவசாய அணி அமைப்பாளர் அய்ய னார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன், கவுன்சிலர் நதியா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை மாநாட்டிற்கு பிறகு அ.தி.மு.க.வில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.
- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
சிவகாசி
சிவகாசியில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடை–பெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.–வேலுமணி, தமிழக சட்ட மன்ற எதிர்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
மதுரை மாநாட்டில் விரு துநகர் இரண்டு மாவட்ட கழகம் சார்பாக ஆயிரக்க ணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு எடப்பாடியார் நன்மதிப்பை பெற்றுள் ளோம். தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த காலம் தி.மு.க.வுக்கு இறங்கு முகம், அ.தி.மு.க.வுக்கு ஏறு முகம். ஆகவே நாளை ஆட்சி நமதே, எடப்பாடியார் முதலமைச்சராக போவது உறுதி.
தி.மு.க.வுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உள்ளது. வருகின்ற தேர்தல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வின் பொற்கால ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் உருவாக்கக்கூடிய தேர்த லாக அமையும். ஒரே நாடு, ஒரே தேர்தல் கண்டு தி.மு.க. வினர் மற்றும் தமிழக முதலமைச்சர் அலறு கின்றனர். ஒட்டு மொத்த தமிழகமும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சரா வதை எதிர்நோக்கி காத்தி ருக்கிறது என்றார்.
தலைமை நிலைய செய லாளர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
தி.மு.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசக்கூடியவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. செய் யாத குற்றத்திற்காக அவரை தி.மு.க. அரசு பழி வாங்கியது. கொலை குற்ற வாளி போன்று போலீசார் தேடி னர். பொய் வழக்கு போடுவ தையே தி.மு.க. தொழிலாக கொண்டுள்ளது. கழக நிர்வாகிகள் யார் மீது பொய் வழக்கு போட்டாலும் அவர் களுக்கு கழகப் பொதுச்செய லாளர் எடப்பாடியார் உறு துணையாக இருப்பார்.
விரைவில் நாடாளு மன் றத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. எந்தத் தேர்தல் வந்தாலும் விருது நகர் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி வாகைசூடும். முன் னாள் முதலமைச்சர் எடப் பாடியார் மீண்டும் முதல மைச்சர் ஆக வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பு கின்றனர். மதுரை மாநாட்டிற்கு பிறகு மிகப்பெ ரிய எழுச்சியை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எப்போது எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது என்றார்.
கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், சந்திர பிரபா முத்தையா, சிவசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன் பத்தமிழன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் சேதுராமானு ஜம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், மாவட்ட மகளி ரணி செயலாளர் சுபாஷினி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், விருதுநகர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கலாநிதி,
சிவகாசி ஒன்றிய முன் னாள் பெருந்தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரம ணியம், மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், கழக சிறுபாண்மை பிரிவு துணைத் தலைவர் சித்திக், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட கழக இணைச்செயலாளர் அழகுராணி, விருதுநகர் நகர செயலாளர் முகமது நயினார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்ப சாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.
- கரட்டுப்பட்டி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
சோழவந்தான்
கிருஷ்ணன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சோழவந்தான் கரட்டுப் பட்டி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தி.மு.க. மாநில பொது குழு உறுப்பினர் பூமிநாதன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க. மாவட்ட விவசாய அணி நிர்வாகி பாஸ்கரன், இரட்டை மாடு பந்தயக்குழு முன்னால் மாநில தலைவர் மோகன்சாமிகுமார், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பந்தயத்தில் பெரிய மாடு 7 மைல் வரை, நடுமாடு 6மைல் வரை, பூஞ்சிட்டு மாடு 5 மைல் வரை பந்தயங்கள் நடந்தது. விழாவில் ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன் வாடிப்பட்டி பிரகாஷ் பிரபு மதுரை கண்ணன் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் பால் கண்ணன் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமராஜபுரம் யாதவ மகாசபை மற்றும் யாதவர் இளைஞர் அணி, கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.
நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் சர்மிளா, அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் குமரேசன், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- மானாசாலை-தேளி இடையே புதிய சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
- முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை மணி மற்றும் அரசு அலு வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மானாசாலை - தேளி இடையிலான சுமார் 3.8 கிலோ மீட்டர் தொலை விற்கு நெடுஞ்சாலைத்துறை மூலமாக நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.6.21 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு பணியை தொடங்கி வைத்தார்.
மானாசாலை-தேளி இடையிலான தரம் உயர்த்தும் வகையில் போடப்படவுள்ள இந்த புதிய சாலைப்பணியால் வீரசோழன், மானாசாலை, தேளி, கொட்டகாட்சி யேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் பயன்பெறுவார். பொதுமக்கள் வீரசோழன் பகுதிக்கும், வீரசோழன் பகுதியிலுள்ள பொது மக்கள் மானாமதுரை பகுதிக்கும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருஞ்சிறை ெரயில்வே கேட் வழியாக சுற்றி சென்று மானாமதுரைக்கு செல்வது தடுக்கப்பட்டு எளிதாக சென்று சேரும் வகையில் இந்த புதிய சாலை அமைய உள்ளது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்ப தோடு பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பொதுமக்கள் தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் காளீஸ்வரி சமயவேலு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சிங்கராசு, டி.வேலங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை மணி மற்றும் அரசு அலு வலர்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
- மின்சாரம் தாக்கி மாடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
- செயலாளர் முத்துப் பாண்டி, அலுவலக உதவி யாளர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பறையங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கருமலையான், வெள்ளைச்சாமி, முனியசாமி ஆகியோரின் 5 பசு மாடுகள் கடந்த 27-ந் தேதி மேய்ச்சலுக்கு போகும்போது மின்சாரம் தாக்கி இறந்தன. இதனை அறிந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் உயிரிழந்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து அமைச்சர் சார்பில் கமுதி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மாடுகளின் உரிமையா ளர்களிடம் நிதியுதவி வழங்கினார். அப்போது மாவட்ட கவுன்சிலர் சசிகுமார் போஸ், ஒன்றிய கவுன்சிலர் முருகன்,கிளைச் செயலாளர் வீரபத்திரன், செயலாளர் முத்துப் பாண்டி, அலுவலக உதவி யாளர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.