என் மலர்

    நீங்கள் தேடியது "கூட்டம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது
    • உரங்களின் சேமிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தகவல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அருணா பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வேளாண்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவை யான மரநாற்றுகள் குறித்து விவசாயிகள் கோரிக்கைக்கு இணங்க கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும்.

    அங்கக வேளாண்மை மூலம் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நீலகிரி கூட்டுறவு வணிக சங்கம் மூலம் உரங்களை சிறியளவில் சில்லரை விற்பனை மூலம் சிறு,குறு விவசாயிகளுக்கு 5 முதல் 10 கிலோ வரையிலான உரங்களை வழங்குமாறு கோரிய விவசாயிகளின் கோரிக்ைக குறித்து ஆய்வு செய்யப்படும்.

    மேலும் என்.சி.எம்.எஸ் மூலம் உரங்களிடம் சேமிப்பிடம் அமைப்பதற் கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. உழவர் கடன் அட்டைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப் பட்டு வருகிறது.

    விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்க லைத்துறை இணை இயக்கு நர் ஷிபிலாமேரி, இணை இயக்குநர் (மருத்துவபணி கள்) பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் நகர்மன்ற கூட்டத்தில் முதல்-அமைச்சரின் பெயருக்கு அதிகாரிகள் கலங்கம் ஏற்படுத்துவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்
    • கவுன்சிலர்கள் குற்றச்சாட்டினால் நகராட்சி கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர்மன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் சாந்திகலைவாணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் அரியலூர் நகராட்சியில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. மழைக்காலங்களில் தெருக்களில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் சில பகுதிகளில் சாக்கடை நீர் தெருக்களில் வழிந்து ஓடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.இதுபோல் எந்த ஒரு பணியினையும் நகராட்சி நிர்வாகம் செய்வதில்லை. மேலும் நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் மறுப்பதாகவும் கூறி தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் குற்றம் சாட்டி கூச்சலிட்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகள் செயல்படுவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    கூட்டத்தின்போது பேசிய தி.மு.க. கவுன்சிலர் ராஜேஷ், தேவையான உபகரணங் களை கொடுங்கள் அரியலூர் தி.மு.க. கவுன்சிலரான நான், என் மனைவி, என் அப்பா எல்லோரும் சென்று குப்பை, சாக்கடையை அள்றோம் என தெரிவித்தார். தொடர்ந்து அவர் நகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை என குற்றம் சாட்டினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிதொகுதி சபா கூட்டம்
    • கவுன்சிலர் ராதிகா கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

    கரூர். 

    கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 4-வது வார்டு தொகுதி சபா கூட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகில் பேரூராட்சி தலைவர் சேதுமணி, தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு 4-வது வார்டு கவுன்சிலர் ராதிகா, பகுதி சபா செயலாளர் வரி தண்டலர் சவரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினம், தமிழ் ஆசிரியர் மணிகண்டன் ஆய்வக உதவியாளர் கனகராஜ் பகுதி சபா உறுப்பினர்கள் மஞ்சுளா சாந்தி ராமச்சந்திரன், பேரூராட்சி எழுத்தர் சரவணன், மஞ்சுளா, புனிதா, முன்னாள் கவுன்சிலர் கதிர்வேல் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கலைஞர் மகளிர் உரிமை தொகை 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அணுகு சாலை அமைத்திட வேண்டும் என்று தி.மு.க பெண் கவுன்சிலர் ராதிகா கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

    இதே போல 4-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடை மீது தரமான கான்கிரீட் மூடிகள் அமைக்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உரிய மின்விளக்கு வசதி ஏற்படுத்திய தர வேண்டும் என்றும் கழிவுநீர் சாக்கடையில் பொதுமக்கள் வர்த்தகர்கள் தங்கள் குப்பைகளை அதில் கொட்டாமல் இருப்பதற்கு, பேரூராட்சி சார்பில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் பேருந்துகளை நடுரோட்டில் நிறுத்திச் செல்லாமல் அரைவட்ட வடிவிலான பஸ் நிறுத்தம் அமைத்துத் தர வேண்டும் என்றும் சாக்கடையை நீர் குடிநீரில் கலந்து வராமல் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.அந்த கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் தலைமையில் நடைபெற்றது.
    • குடிநீர் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    தென்காசி:

    கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மாணிக்க ராஜ், துணைத்தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ. 1,000 வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கீழப்பாவூர் பேரூராட்சி பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொது சுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வது, மேலும் நடப்பு ஆண்டு அரசின் திட்ட நிதி மற்றும் பொதுநிதியின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலை, வடிகால், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வரப்பெற்றுள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் வார்டு உறுப்பி னர்களின் ஆதரவோடு நிறை வேற்றப்பட்டு வேலை உத்தரவு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயங்கொண்டம் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் முகவர்கள் பணிக்குழு ஆலோசனை கூட்டம்
    • 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

    ஜெயங்கொண்டம்,

    சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024 தேர்தல் முகவர்கள் பணி குழு கூட்டம் அரியலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் நடைபெற்றது

    இக்கூட்டத்திற்கு முதன்மைச் செயலாளர் பாவரசு சிதம்பரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் விடுதலைச் செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வருகின்ற தேர்தலில் பணியாற்றும் முறையினையும் எழுச்சித் தமிழரை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது குறித்தும் பொறுப்பாளர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கிய தாசன் முன்னிலை வகித்தார்,

    அரியலூர் பெரம்பலூர் மண்டல பொறுப்பாளர்கள் அன்பானந்தம், துணை செயலாளர் மாறன், கண் கொளஞ்சி, நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார் மற்றும் சுந்தர் சின்ன ராஜா சி மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயங்கொண்டம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், கிளார்க் உள்ளிட்ட அனைவருக்கும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அவர் பேசும்போது,ஊராட்சிகளில் தண்ணீர் தேங்க விடாமல் பாதுகாப்பது மருந்து தெளிப்பது அந்தந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் எடுத்துக் கூறி டெங்கு காய்ச்சல் வராமல் எப்படி ஊராட்சிகளை வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுகள் எடுத்துக் கூறினார். இந்த கூட்டத்திற்கு மருத்துவர் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரித்த பொருட்களை காட்சிபடுத்தினர்.
    • வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர், தமிழ்நாடு மாநில வாழ்வாதார குழு இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் செய்வோர் மற்றும் விற்பனையாளர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய துணை வட்டாட்சியர் அண்ணா துரை தலைமை தாங்கினார். முன்னதாக மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்றுனர் பாலகணேஷ் சுகந்தி, தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்தி, துணை வட்டார அலுவலர் பக்கிரிசாமி, வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், வட்டார மகளிர் சுயஉதவி குழுஒருங்கிணை ப்பாள ர்கள் மேனகா, அருள்மேரி, ஜெயமாலினி சுமித்ரா, மணிபாரதி உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தாங்கள் தயாரித்த பொருட்களை காட்சிபடு த்தினர்.

    இதுகுறித்து மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி கூறுகையில்:-

    வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன. அவற்றில் 1400 குழுக்களுக்கு சுமார் ரூ.3 கோடி நிதி வழங்கப்பட்டு சிறுதானிய பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன்தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர், அணிச்செயலாளர்கள் மாணவரணி சங்கர்,இளைஞரணி சிவசங்கர்,மகளிரணி ஜீவா,சிறுபான்மைபிரிவு அக்பர்ஷெரிப், வக்கில் பிரிவு வெங்கடாஜலபதி, ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் செல்வராஜ், பாலு, திருமானூர் வடிவழகன், அன்பழகன், ஆண்டிமடம் மருதமுத்து, ராமச்சந்திரன், ஜெயங்கொண்டம் கல்யாணசந்தரம், விக்கிரம பாண்டியன்,தா.பழர் அசோகன், வைத்தியநாதன், நகரசெயலாளர்கள் அரியலூர் செந்தில், ஜெயங்கொண்டம் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வைகோசிவ பெருமாள், செல்லையா, நகராட்சி கவுன்சிலர்கள் இஸ்மாயில், யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி, வக்கில் சிவஞானம், பாஸ்கர், மகளிரணி பாப்பாத்தி, சினுக்கா, செல்வாம்பாள் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும்கலந்துகொண்டனர். மாவட்டசெ யலாளரும், முன்னாள் அரசுதலைமை கொறடாவுமான தாமரை. எஸ்ராஜேந்திரன்ேபபேசும்போது,விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரஇருக்கின்றது. சட்டமன்ற தேர்தலும் வரவாய்ப்பு இருக்கின்றது. பூத் கமிட்டி அமைக்கும் பணியினை மிகவிரைவாக முடிக்கவேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40ம் நமதே என்ற லட்சியத்தோடு பணியாற்ற வேண்டும். மதுரையில் அதிமுக வெற்றிவிழா எழுச்சி மாநாட்டை இந்தியாவே திரும்பி பார்த்தது. மற்ற அரசியல் கட்சிகளைவிட அதிக தொண்டர்களை கொண்ட இயக்கம் அதிமுக. வெற்றி ஒன்றே நமது இலக்காக அமையவேண்டும் என பேசினார். கூட்ட முடிவில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கோரி அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் கொண்டாவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஆங்காங்கே அமைக்கப்படும் விநாயகர் சிலை தொடர்பாக விழா குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக பாபநாசம் துர்கா மஹாலில் சிறப்பு கூட்டம் பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் போது விநாயகர் சிலை நிறுவுதல், ஊர்வலமாக கொண்டு செல்லுதல், பின்னர் நீர் நிலைகளில் கரைத்தல் போன்ற நிகழ்வுகள் தொடர்பாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கோரியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி , சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சிலை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் விழாக் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வார்டு குழு சபை கூட்டம் நடந்தது.
    • பணியாளர் பூவலிங்கம் வரவேற்றார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் ேசாழ வந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் வார்டு குழு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டம் ஆறு மையங்களில் நடந்தது.1மற்றும்2 ஆகிய வார்டுக்கு பேட்டை குடிநீர் மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் நடந்தது.

    வார்டு கவுன்சிலர் ஈஸ்வரிஸ்டாலின் தலைமை தாங்கினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணம்மா, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் முத்துச்செல்விசதீஷ்குமார் வரவேற்றார்.

    சுகாதாரப்பணி ஆய்வாளர் முருகானந்தம் கூட்டத்தின் நோக்கம பற்றி பேசினார். இதைத் தொடர்ந்து உறுதி மொழி வாசித்தார்.முன்னதாக பணியாளர் செல்வம் வரவேற்றார். அருண் நன்றி கூறினார்.

    இதே போல் 8-வது வார்டு பகுதியில் வார்டு குழு கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலரும் அரிமா சங்க தலைவருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    13-வது வார்டு சிவன்கோவில்தெருவில் வார்டு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையா தலைமை தாங்கினார். குழுஉறுப்பினர்கள் சசிகலா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணதாசன் வரவேற்றார்.பேரூராட்சி பணியாளர்கள் சோனை, வெங்கடேசன், பாலமுருகன் பூவவலிங்கம்ஆகியோர் வார்டு குழு மக்கள் பயன்பாடு பற்றி பேசினார்கள். பணியாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    இதே போல் மந்தைக்களம், பேரூராட்சி சமுதாயக்கூடம், ஆர்சி தெரு காளியம்மன் கோவில் தெரு, ஆர்எம்எஸ் காலனி நூலகம் ஆகிய இடங்களில் வார்டு குழு கூட்டம் நடந்தது. ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்ற கூட்டத்திற்கு அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் பணியாளர் பூவலிங்கம் வரவேற்றார்.

    முடிவில் அசோக்குமார் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo