search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டம்"

    • கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டடோர் வசித்து வருகிறார்.
    • அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சீர்காழி: சீர்காழி அருகே கீழ மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரக்குடி கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் செய்து தர வில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஒவ்வொரு முறையும் தங்களது பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்தில் உள்ள அடிப்படை வசதி களை நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து செல்கின்றனர்.

    ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றனர்.

    இந்நிலையில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வரக்கூடாது என போஸ்ட ர்கள் மற்றும் பேனர்கள் அடித்து கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளனர்.

    இந்நிலையில் குமாரகுடி கிராமத்தில் கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அதில் தங்களது கிராமத்திற்கு இது வரையில் எந்த ஒரு அடி ப்படை வசதிகளும் செய்து தராத அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனவும், இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை எனில் வருகிற 14-ம் தேதி தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சி யரிடம் ஒப்படைக்க போவதாகவும் கிராம மக்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

    • விவேகானந்தர் மண்டபம் செல்ல படகுத்துறையில் 2 மணி நேரம் காத்திருந்தனர்.
    • குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    சபரிமலை சீசன் முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது. இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுகிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிமாக இருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியில் நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகுபோக்குவரத்து தொடங்கியது.

    சுமார் 2மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் உள்ளனர்.
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்புகிறார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சபரிமலை ஐயப்பன் கோவில். பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடுமையான வனப்பகுதிக்கு நடுவே, கடல் மட்டத்தை ஒப்பிடுகையில் 914 மீட்டர் உயரத்தில் மலைக்கு உச்சியில் இருக்கிறது சபரி மலை ஐயப்பன் கோவில்.

    இந்த கோவிலுக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து 48 அல்லது 60 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கிறார்கள்.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதேபோல் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக பல நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதனால் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.

    சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் கன்னி சாமியாக (முதன்முறை) ஏராளமானோர் வருகிறார்கள். அது மட்டுமின்றி ஒரு முறை இங்கு வருவார்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடியே உள்ளது. இதன் காரணமாக மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்புவார்கள். இருந்த போதிலும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தபோதிலும் அந்த காத்திருப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பக்தர்களுக்கு பெரிய சிரமமாக தெரிந்ததில்லை.


    ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு நடந்து வரும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜை நடக்கக்கூடிய நேரத்திலும் இந்த ஆன்லைன் முன்பதிவு முறையே கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    ஆன்லைன் முன்பதிவின்படி ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வசதிக்காக உடனடி முன்பதிவு முறையும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் விருப்பமாக இருக்கும். இதனால் அய்யப்ப பக்தர்கள் எந்த கட்டுப்பாட்டுக்கும் அஞ்சுவதும் இல்லை, அதனை கடைபிடிக்க தவறுவதும் இல்லை. அதன்படியே ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இந்நிலையில் தான் நடப்பு ஆண்டு மண்டல பூஜை சீசனில் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். ஆன்லைன் முன்பதிவில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்திருந்த நிலையில், உடனடி முன்பதிவு முறையிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்து சபரிமலைக்கு வந்தனர். இதனால் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பம்பையிலேயே பக்தர்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தி சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அதுமட்டுமின்றி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதையிலும் கூட பக்தர்கள் ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். இதன் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 15 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. இந்த காலதாமதம் சபரிமலைக்கு வந்த அனைத்து பக்தர்களையும் சிரமம் அடையச் செய்தது. அதிலும் வயதான பக்தர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் கஷ்டப்பட்டனர்.

    இதனை கண்ட கேரள ஐகோர்ட்டு நேரடியாக தலையிட்டு சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர உத்தரவிட்டது. மேலும் நெரிசலை தவிர்க்க பல்வேறு வழிமுறைகளையும் ஐகோர்ட் கூறியது. அதனை தேவசம்போர்டு மற்றும் காவல்துறை கடைபிடித்த போதிலும் சபரிமலையில் கூட்ட நெரிசலை தடுக்க முடியவில்லை. மண்டல பூஜை காலத்தில் ஏற்பட்டது போன்று மகர விளக்கு பூஜை காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அரசு தெரிவித்தது. ஆனால் மகர விளக்கு பூஜை காலத்திலும் அதே நிலை தான் நிலவி வருகிறது.

    தங்களது கஷ்டங்களை போக்கி அருள் புரிய வேண்டும் என்று ஐயப்பனை வேண்டுவதற்காக வரக்கூடிய பக்தர்கள், சாமியை தரிசிக்கவே கடுமையான கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பம்பை, சன்னிதானம் மற்றும் பதினெட்டாம்படி என அனைத்து இடங்களிலும் நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமியை தரிசிக்க முடிகிறது. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்த ஐயப்ப பக்தர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

    பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் உள்ளனர். இதன் காரணமாக பதினெட்டாம் படி மற்றும் சன்னிதானத்தில் பக்தர்களை வேகவேகமாக இழுத்து அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் சில பக்தரக்ள் கீழே விழுந்து காயமடைகிறார்கள். அந்த நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்த ஐயப்ப பக்தர்கள் சிலரை போலீசார் தாக்கிய சம்பவங்களும் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பக்தர்கள் சிலர் பதினெட்டாம்படி பகுதியில் போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில், பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் நேற்று தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


    பக்தர்கள் என்று கூட சிந்திக்காமல் போலீசார் அத்துமீறி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பை வரை வந்துவிட்டு, சபரிமலைக்கு செல்லாமல் தங்களது ஊருக்கே திரும்பி செல்கிறார்கள்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்புகிறார்கள். அவர்கள் பம்பையில் இரு ந்தே மன துக்குள் ஐயப்பனை நினைத்து வணங்கி விட்டு, தங்களது ஊருக்கு கண்ணீருடன் திரும்புவதை காண முடிகிறது. அவ்வாறு சபரிமலைக்கு செல்லாமல் திரும்பக்கூடிய தமிழக பக்தர்கள், வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு சென்று நெய்யபிஷேகம் செய்கிறார்கள்.

    48 மற்றும் 60 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை காண வந்தால், அது அது நடக்கவில்லை என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தேனி மாவட்டம் போடியில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர் ஒருவர் கூறும்போது, நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு வருகிறேன். ஆனால் இதுவரை இதுபோன்ற சிரமத்தை நான் சந்திக்கவில்லை. எந்த ஒரு ஐயப்ப பக்தனும் இதுபோன்ற சிரமத்தை சந்திக்கக் கூடாது என்று கூறிவிட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

    சபரிமலையில் சந்தித்த சிரமங்கள் குறித்து தமிழகத்தை சேர்ந்த சில ஐயப்ப பக்தர்கள் கூறியதாவது:- ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. குழந்தைகளுடன் வருபவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவதை பார்த்தால் கண்ணீர் வருகிறது. போலீசாரிடம் அத்துமீறல் குறித்து கேட்டால் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று கேட்டு தாக்குகிறார்கள். சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க மத்திய அரசு நேரடியாக தலையிட வேண்டும். வரும் காலங்களில் இது போன்று நடப்பதை தடுக்க கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்தும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை கேரள அரசு, தேவசம்போர்டு மற்றும் போலீசார் எடுக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சீசன் தொடங்குவதற்கு முன்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தியும், அதனை நிறை வேற்ற முடியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் பக்தர்கள் வருகை மூலம் கேரளா அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. ஆனால் பக்தர்கள் சிரமப்படாமல் வந்து செல்லவும், கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதை சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

    • கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
    • மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே, சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தில் இருந்ததைப்போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    இருந்தபோதிலும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் சாமி தரிசனத்துக்கு 10மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது. பம்பை, மரக்கூட்டம், பதினெட்டாம்படி, நடைப்பந்தல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

    இதனால் வயதான பக்தர்களும், சிறுவர்-சிறுமிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.

    பூஜைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதாலும், 10-ந்தேதிக்கு பிறகு உடனடி முன்பதிவு நிறுத்தம் மற்றும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருப்பதால் சபரிமலைக்கு தற்போது அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.


    இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்கள் பல இடங்களில் வெகுநேரம் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது. பம்பையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு நடைபயணத்தை மேற்கொள்ளும் நிலையில், பெருவழிப்பாதை வழியாகவும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அதிகளவில் மலையிறங்கிய போதிலும், சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருக்கிறது.

    சன்னிதான பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. அரவணை உள்ளிட்ட பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் எப்போது பார்த்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கிச் செல்கிறார்கள். எங்கும் கூட்ட நெரிசல ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மண்டல பூஜை காலத்தின் போது நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதுகூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வருவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மகரவிளக்கு பூஜைக்காக மாநிலம் முழுவதும் 800 பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட இடங்களுககு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டம் நடக்கும்போது அரங்கத்தில் இருந்து தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பானுமதி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஸ்வரன், வாசுதேவ பிரபு முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. உட்பட 10 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடக்கும்போது அரங்கத்தில் இருந்து தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு தலைவர் பானுமதி பாலசுப்பி ரமணியன் மன்ற பொருள் தன்னை ஆலோசிக்காமல் அதிகாரிகளே தயார் செய்து எடுத்து வருகின்றனர்.

    தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளான சூரப்பள்ளி மற்றும் ஆவடத்தூர் பகுதிக்கு அதிகாரிகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற வார்டுகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது. அனைத்து வார்டுகளுக்கும் பொது நிதியை சமமாக பிரித்து வழங்க வேண்டும்.

    மேலும் பொது நிதி மூலம் செய்யப்படும் வரவு, செலவு கணக்குகளை முறையாக அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து அவர் உள்பட 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழகத்தின் அரசியல் எதிர் காலத்தை தமிழ்த்தேசிய கூட்டணி முடிவு செய்யும் என்று திருமுருகன் காந்தி பேசி உள்ளார்
    • திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பேச்சு

    திருச்சி, 

    திருச்சி மரக்கடையில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள், பெரியார் சாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவை எரித்த நாள், அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் வகுத்த நாள் போன்ற முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முகமது தாஹா, மே பதினேழு இயக்கம் சுந்தரமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-சாதியை ஒழித்தால்தான் வல்லான்மை பொருந்தியனவாக தமிழன் வருவான் என்று கூறிய பெரியாரின் முழக்கம் தான் தமிழகத்தில் பெரிய முழக்கமாக கடந்த நூற்றா ண்டில் ஒலித்தது. திராவி டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கி ணை ப்பாளர் சீமான் கூறு வது ஏற்புடை யது அல்ல. இதன் மூலம் அவர் கூறுவது இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்.சாதியை காப்பாற்ற வேண்டும், சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது தவறு இல்லை, ஆரிய பண்டிகை யை கொண்டாட வேண்டும் என்று சொல்கி றார். இதை அனைத்தையும் ஆதரிக்கி றார் என்றுதான் அர்த்தம். தமிழ்த்தேசிய கூட்டணியில் பல்லாயிரயிக்கணக்கான இளைஞர்கள் சேர வேண்டும் இந்த அரசியலில் வலிமையாக மாற்றி தமிழகத்தின் அரசியல் எதிர் காலத்தை நாம் முடிவு செய்வோம் என்றார்.

    இந்த கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ரொஹையா ஆகியோர் சிறப்புறையாற்றினர். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேர வை, விடுதலைச் சிறுத்தை கள் கட்சி,தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழர் விடியல் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கை கள், அகில இந்திய பார்வா ர்ட் ப்ளாக், தேவேந்தி ரகுல மக்கள் முன்னேற்றப் பேர வை உள்ளிட்ட கட்சி நிர்வா கிகள் பலர் சிறப்பு ரையாற்றினர்.இந்த விழாவின் ஒரு பகுதியாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு அவர் தலைமையில் மேடையில் ஒரு தம்பதிக்கு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்தார். இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தொழிற்சங்க மாவ ட்ட செயலாளர் டேவிட் ஆரோக்யராஜ் நன்றி கூறினார்.

    • 17 ஒன்றியங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    • திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் நடந்தது

    முசிறி,

    திருச்சி வடக்கு மா வட்டம் சார்பில் 17 ஒன்றிய ங்களில் 4 நாட்களாக சுற்று ப்பயணம் மேற்கொண்டு வெல்லும் ஜனநாயகம் மாநாடு சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல் திருச்சி சிறுகனூரில் நடைபெ றுகிறது.அதன் தொடர்பான நிர்வாக ஆலோசனைக் கூட்டம் திருச்சி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட முசிறி, தொட்டியம் ,துறை யூர், உப்பிலியாபுரம் ஒன்றிய ங்கள் மற்றும் தொட்டியம், காட்டுப்புத்தூர், மேட்டுப்பாளையம், தாப்பேட்டை, உப்பிலிபுரம்,

    பாலகிருஷ்ணம்பட்டி, பேரூராட்சிகளிலும் மற்றும் முசிறி துறையூர் நகராட்சி களிலும் நிர்வாக ஆலோச னைக் கூட்டம் தொடர்ந்து 4 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு 23-ந் தேதி உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தொடங்கப்பட்டு 26-ந் தேதி முசிறி நகராட்சியில் பகுதியில் முடிக்கப்பட்டது.இந்த சிறப்பு கூட்டத்தில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கலைச்செ ல்வன், மாவட்ட பொரு ளாளர் கனியரசன் ,துறையூர் தொகுதி செயலாளர் துரைசங்கர் ,முசிறி தொகுதி துணை செயலாளர் உலக முதல்வன் ,ஒன்றிய பேரூர் செயலாளர்கள் தங்கதுரை, பாலசுப்பிரமணியன், மணிவளவன், அழகுமணி, வெற்றி அழகன், சந்திரசே கரன், உதயசூரியன், சங்கர், கோபி, மதியழகன், கமல குமார், சரவணன், இளைய ராஜா, பானுமதி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பொறு ப்பாளர்கள் கலந்து கொ ண்டனர்.மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி நடை பெறும் சிறுகனூர் மாநாட்டி ற்கு திருச்சி வடக்கு மாவட்ட பகுதியில் இருந்து நிர்வாகிக ள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    • அரியலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • பள்ளிகளில் இலக்கிய மன்ற விழா நடத்திட தீர்மானம்

    அரியலூர்,

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பின் செயலாளராக இருந்த செம்மொழி ராமசாமி அமைப்பாளராகவும், துணைத் தலைவராக இருந்த கதிர்கணேசன் செயலாளராகவும் செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுதோறும் தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு சார்பாக இலக்கிய மன்ற விழா நடத்தி மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அமைப்புச் செயலாளர் நல்லப்பன், புலவர் இளங்கோவன், பொருளாளர் புகழேந்தி, திருவள்ளுவர் ஞானமன்ற நிறுவனர் பன்னீர் செல்வம், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு நிர்வாகிகள் அஞ்சை ராவணன், ஓவிய கவிஞர் அன்பு சித்திரன், ஜோதிராமலிங்கம், செல்லப்பண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் செய்தி தொடர்பாளர் தமிழ்க்களம் இளவரசன் நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் மெர்சி ரம்யா விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்து கூறினர். கூட்ட முடிவில் கலெக்டர் பேசும்போது, விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதபிரியா, வேளாண் இணை இயக்குனநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செய ல்படுத்தப்படும் திட்ட ங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
    • வளர்ச்சித் திட்டங்களை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செய ல்படுத்தப்படும் திட்ட ங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் கிராமப்பு றங்களில் அடிப்ப டை கட்ட மைப்பு வசதிகளை மேம்ப டுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை யின் சார்பில், செயல்படு த்தப்படும் திட்ட ங்கள் குறித்த ஆய்வுக் கூட்ட ம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் திட்டம், பாரத பிரதமரின் கிஸான் சம்மான் நிதித் திட்டம், ஜல் ஜீவன் மிசன், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பா டுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடி க்கையாக ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், அரசு கட்டிட ங்கள் உள்ளிட்ட வைகளை கண்கா ணித்து சேதமடை ந்துள்ள கட்டிடங்களை பாதுகா ப்பாக இடித்து அப்புறப்ப டுத்திட உரிய நடவ டிக்கை கள் மேற்கொ ள்ளுமாறு தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டது.

    மேற்கண்ட வளர்ச்சித் திட்டங்களை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டது என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பி ரியா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் மற்றும் அரசு அலுவ லர்கள் பலர் கலந்துகொ ண்டனர்.

    • தேவகோட்டை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் நடந்தது.
    • டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய தலைவர் உறுதியளித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் அதன் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன். ஆணையாளர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மேலாளர் புவனேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன.

    கூட்டத்தில் தலைவர் பிர்லா கணேசன் பேசியதாவது:-

    தேவகோட்டை ஒன்றியத்தில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு கணக்கெடுப்பில் குறைபாடுகள் உள்ளது அவற்றை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். பயிர் காப்பீடு, இழப்பீடு அனைத்து கிராமங்களுக்கும் சரியான முறையில் கிடைத்திட வேண்டும்.

    தேவகோட்டை ஒன்றி யத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அனைத்து கிரா மங்களின் உள்ள நீர் தேக்க தொட்டிகள் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் டெங்கு தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஒன்றிய கூட்டங்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தபால் அனுப்பியும் அதிகாரிகள் கூட்டத்திற்கு வராமல் உள்ளனர். இதனால் அந்தந்த துறை சார்ந்த குறைகளை எடுத்துக் கூற முடியாமல் உள்ளது. இதனால் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் துறை சார்ந்த குறைகளை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. மாவட்ட கலெக்டர் கிராம ஊராட்சிகளில் முதல் அனைத்து கூட்டங்களுக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தும் தற்பொழுது நடைபெற்ற கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    12 வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஜான்சிராணி : கொடுங்காவயல் கிராமத்தில் தற்பொழுது புதிதாக போடப்பட்ட பாலம் சேதமடைந்து உள்ளது. அதனை உடனே சரி செய்ய வேண்டும். மருதவயல் கிராமத்தில் சாலைகள் பாதி அளவு மட்டுமே போடப் பட்டுள்ளது.

    தலைவர்: சம்பந்தப்பட்ட பாலத்தினை ஆய்வு செய்து உடனே அதனை சரி செய்ய வேண்டும். மேலும் மருத வயல் சாலை குறித்து ஆணையாளர் பொறியாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • கரூர் அரசு மகளிர் கல்லூரியில் பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
    • இயற்பியல் துறை சார்பில் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சா லையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்பியல் துறையில், பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக்குழு உறுப்பினரும், அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கி விழா வினை தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் கள். மேலும் இயற்பியல் துறையின் சாதனைகளை ஃப்ளக்ஸ்-ல் புகைப்படமாக அச்சிட்டு பெற்றோர்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட து. இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தினை இயற்பி யல் துறைத் தலைவர் ராஜ லிங்கம் மற்றும் பேராசிரி யர்கள் கமளீஸ்வரி, சங்கீதா, திவ்யா, பவித்ரா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×