என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவியும் மக்கள் கூட்டம்
    X

    கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவியும் மக்கள் கூட்டம்

    • கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.
    • மழை இல்லாததால் வியாபாரிகள் உற்சாகம்

    புதுக்கோட்டை

    தீபாவளி பண்டியை புதுக்கோட்டை மக்கள் நாளை சிறப்பாக கொண்டாட தயார் ஆகி வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் கொரேனா தொற்று காரணமாக தீபாவளி கொண்டாட்டங்கள் மந்தகதியில் இருந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட முன்வந்துள்ளனர்.

    துணிகடைகள் மற்றும் இனிப்பு கடைகள் மட்டுமின்றி நகைகடைகளிலும் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக கீழராஜவீதி, நகை கடை வீதி, வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, பழைய பேரூந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம், அண்ணாசிலை போன்ற பகுதிகளில் மக்களின் படையெடுப்பால் எங்கும் பார்த்தாலும் மக்களின் தலைகள்தான் தெரிகிறது. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சாரல் மற்றும் பலத்த மழை காரணமாக வியாபாரம் மந்தமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முழுவதும் மழை பெய்யாத காரணத்தினால் மக்கள் தீவிரமாக பொருட்கள் வாங்கிவருகின்றனர். இதனால் வியாபாரிகளும் நம் போட்ட முதலீட்டை நல்ல லாபத்துடன் எடுத்துவிடலாம் என்று உற்சாகத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    மக்கள் கூட்டம் அலை மோதுவதால் காவல் துறையினர் கீழராஜவீதியில் பிரத்தியோமாக கண்காணிப்பு நிலையம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக பொருட்கள் வாங்க வேண்டும். அறிமுகம் தெரியாத நபர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம் என்று அவ்வப்போது எச்சரிக்கை செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் சார்பாகவும், தனியார் தொண்டு நிறுவனம் சார்பாகவும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை நகர் முழுவதும் கொடுத்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த வருடம் தீபாவளி வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமில்லை.

    Next Story
    ×