தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடி யவர் அம்பேத்கர். இவர் தன்னுடைய தனித்திற மையால் உயர்ந்தவர்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.
Published on

நீடாமங்கலம்,ஜூன்.16-

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் சுமார் ஆயிரம் உறுப்பினர்கள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னி லையில் தங்களை இணை த்துக் கொண்டனர். கப்பலு டையான் சதா. சதீஷ் அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பா.ஜ.கவில் இணைந்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடி யவர் அம்பேத்கர். இவர் தன்னுடைய தனித்திற மையால் உயர்ந்தவர். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார் . பட்டியலின மக்களுக்கு பா.ஜ.க என்ன செய்துள்ளது என்பதை பிற கட்சிகள் நேரில் வந்தால் விவாதிக்கலாம் என கூறிேனன். இதுவரை யாரும் வரவில்லை.

அரசியலமைப்பு சட்டம் இயற்ற இந்திய அரசியல் சாசன தலைவராக அம்பேத்கரை பரிந்துரைத்தது ஜனா சங்கத்தின் தலைவர் சாம் பிரசாத் முகர்ஜி தான்.

சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கு 1989-ம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்குவதற்கு ஜனசங்கமே காரணமாக அமைந்தது.

மத்திய பிரதேச மாநி லத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.ஆனால் பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் பொய் பேசி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com