search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுக்கட்சியினர்"

    • ஊட்டி நகர கழகச் செயலாளர் க.சண்முகம் ஏற்பாடு
    • மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார் உள்பட பலர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள், மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கப்பச்சிவினோத் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஊட்டி நகர கழகச் செயலாளர் க.சண்முகம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாவட்ட இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளர் ஜெயராமன், நகர அவை தலைவர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார்,இணைந்தார்.
    • அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் இணைந்தனர்.

    திருப்பூர்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆலோசனையின் படி திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் இன்று வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார், மக்கள் நீதி மய்யம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரைட் முத்துக்குமார், தி.மு.க., ஐ.டி., விங் வாலிபாளையம் பகுதி துணை செயலாளர் அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நல்லூர் பகுதி செயலாளர் வி.பி.என். குமார், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதரன், சுரேஷ், ரமேஷ் குமார் மற்றும் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடி யவர் அம்பேத்கர். இவர் தன்னுடைய தனித்திற மையால் உயர்ந்தவர்.

    நீடாமங்கலம்,ஜூன்.16-

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் சுமார் ஆயிரம் உறுப்பினர்கள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னி லையில் தங்களை இணை த்துக் கொண்டனர். கப்பலு டையான் சதா. சதீஷ் அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பா.ஜ.கவில் இணைந்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடி யவர் அம்பேத்கர். இவர் தன்னுடைய தனித்திற மையால் உயர்ந்தவர். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார் . பட்டியலின மக்களுக்கு பா.ஜ.க என்ன செய்துள்ளது என்பதை பிற கட்சிகள் நேரில் வந்தால் விவாதிக்கலாம் என கூறிேனன். இதுவரை யாரும் வரவில்லை.

    அரசியலமைப்பு சட்டம் இயற்ற இந்திய அரசியல் சாசன தலைவராக அம்பேத்கரை பரிந்துரைத்தது ஜனா சங்கத்தின் தலைவர் சாம் பிரசாத் முகர்ஜி தான்.

    சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கு 1989-ம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்குவதற்கு ஜனசங்கமே காரணமாக அமைந்தது.

    மத்திய பிரதேச மாநி லத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.ஆனால் பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் பொய் பேசி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

    ×