search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alternative parties"

    • ஊட்டி நகர கழகச் செயலாளர் க.சண்முகம் ஏற்பாடு
    • மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார் உள்பட பலர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள், மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கப்பச்சிவினோத் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஊட்டி நகர கழகச் செயலாளர் க.சண்முகம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாவட்ட இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளர் ஜெயராமன், நகர அவை தலைவர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார்,இணைந்தார்.
    • அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் இணைந்தனர்.

    திருப்பூர்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆலோசனையின் படி திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் இன்று வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார், மக்கள் நீதி மய்யம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரைட் முத்துக்குமார், தி.மு.க., ஐ.டி., விங் வாலிபாளையம் பகுதி துணை செயலாளர் அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நல்லூர் பகுதி செயலாளர் வி.பி.என். குமார், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதரன், சுரேஷ், ரமேஷ் குமார் மற்றும் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    ஆளும் தி.மு.க. எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை, உணவு பொருட்களின் விலை உயர்வடைந்து உள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்தான் நாட்டை ஆள வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலங்க ளில் மக்களை பாதிக்காத வகையில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மக்கள் கஷ்டப்படும் நிலைமையை மாற்ற நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆளும் இயக்கமாக இருக்க வேண்டிய நாம் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஆட்சியை இழந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றி தரு வோம். மாற்று கட்சியினரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்பதால் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அனைவரையும் வர வேற்போம். மதிப்பளிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி மாநகராட்சி பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமி நாராயணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணைந்தனர்.
    • கருப்பர் கோவிலில் திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேலங்குடி சாம்பிராணி கருப்பர் கோவிலில் திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

    அதனை தொடர்ந்து மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதே போன்று சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் புலவர் செவந்தியப்பனின் மகன் துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், திருப்பத்தூர்வடக்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் தென்னவன், கல்லல் ஒன்றிய செயலாளர் அண்ணா மலை, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் குண சேகரன் உள்ளிட்ட 26 பேர் ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளரும், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவருமான சண்முக வடிவேல், நெற்குப்பை பேரூராட்சி மன்ற தலைவர் புசலான், ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், நெடுமரம் ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்க வாசகம், திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற தலை வர் கோகிலாராணி நாராயணன், மாவட்ட பிரதிநிதி சோமசுந்தரம், மாவட்ட விவசாய அணி சாமிகண்ணு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய மாண வரணி அமைப்பாளர் சோமசுந்தரம், சீமான் சுப்பையா, எம்.புதூர் கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    ×