search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price hikes"

    • தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி, நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பாளை தாலுகா கமிட்டி மற்றும் பாளை கிளை சார்பில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள எல்.ஐ.சி. மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித் தார். தொடர்ந்து கட்சியினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பாளை பஸ் நிலையம் பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாளை பஸ் நிலையம் சிக்னல் பகுதியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் சிறிது நேரம் மாற்று பாதையில் இயக்கப பட்டது.

    தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை பாளை உதவி கமிஷனர் பிரதீப் தலைமையிலான போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர்.

    போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் கோபாலன், மாவட்டத் தலைவர் மதுபால், இடை கமிட்டி செயலாளர்கள் நாராயணன், குழந்தைவேலு, கவுன்சிலர் முத்து சுப்பிர மணியன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் அம்பை, வி.கே புரம், வள்ளியூர், களக்காடு, முக்கூடல், வீரவநல்லூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது. 

    • சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    ஆளும் தி.மு.க. எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை, உணவு பொருட்களின் விலை உயர்வடைந்து உள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்தான் நாட்டை ஆள வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலங்க ளில் மக்களை பாதிக்காத வகையில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மக்கள் கஷ்டப்படும் நிலைமையை மாற்ற நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆளும் இயக்கமாக இருக்க வேண்டிய நாம் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஆட்சியை இழந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றி தரு வோம். மாற்று கட்சியினரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்பதால் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அனைவரையும் வர வேற்போம். மதிப்பளிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி மாநகராட்சி பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமி நாராயணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • கனவா வகை மீன் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    வங்கக்கடலில் உரு வாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நாட்டுப்படகு மற்றும் சிறிய வகை பைபர் படகுகளில் சென்று மீன் பிடித்து வந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குறைந்த அளவிலான மீன்கள் வரத்து இருந்தது. இதன் காரணமாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதில் ஒரு கிலோ ரூ.300 முதல் 350 வரை விற்பனை செய்த அதலை மீன் 450 ரூபாய்க்கும்,ரூ. 200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படும் பாறை மீன் 350 ரூபாய்க்கும், வஞ்சிரம் மீன் 600 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 300 ரூபாய்க்கும், பெரிய வகை இறால் 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றதை காண முடிந்தது.

    ×