என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "protests"
- தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் தீவுகள் போல மாறியுள்ளன.
சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத் தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
இதனால் நேற்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.
இதே போன்று தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதி களிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
ஆவடி மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு வசித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500-க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கீழ்தளத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் மழை தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த பகுதியில் தேங்கிய மழைநீரை குழாய்கள் மூலமாக வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்று மழை பாதிப்பு வரும் காலங்களில் ஏற்படாத வகையில் அதிகா ரிகள் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மழை வெள்ளத்தில் நாய், பூனை போன்ற விலங்குகளும் செத்து கிடப்பதால் துர்நாற்றம் வீசு கிறது. அந்த பகுதியில் மின் கம்பிகளும் பொது மக்களை அச்சுறுத்தம் வகையில் இருப்பதாகவும் அதையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பத்தூர் ஆவின் பகுதியில் உள்ள பட்டரவாக்கம் காந்திநகர், ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு மின் வாரிய காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் வெள்ளம் போல தேங்கியது.
இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு சென்றவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது.
செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேற்று புழல் பகுதியில் மட்டும் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.
இதனால் நேற்று வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இன்று காலை 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு கடலை சென்று அடைகிறது.
இதனால் தண்ணீர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள சாமியார் மடம், வட பெரும் பாக்கம், வடகரை ஆகிய பகுதிகளில் மழைநீர் குடியி ருப்புகளில் புகுந்து பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் விளாங்காடுபாக்கத்தில் உள்ள மல்லிகாநகர் நியூ ஸ்டார் சிட்டி விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் மற்றும் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் உள்ள சன் சிட்டி, விவேக் நகர் ஆகிய நகரங்களில் வெள்ள நீர்புகுந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புழல் விளாங்காடுபாக்கம் ஊரை ஒட்டியுள்ள மல்லிகா கார்டன், தாய் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.
குறிப்பாக நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் இருந்து வெளியேறும் மழை வெள்ளம் அந்த பகுதி யில் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. அந்த பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகளும் அப்பகுதி மக்களை அச்சு றுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மழைக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் இந்த பாதிப்பில் இருந்து விடிவு காலம் பிறக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு மழை காலத்திற்குள்ளாவது தங்களது பகுதியில் நீடிக்கும் வெள்ள பாதிப்புகளை மாதவரம் எம்.எல்.ஏ. சுதர் சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகி யோர் தீர்த்து வைப்பார் களா? என்றும் அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
விளாங்காடுபாக்கம் ஊருக்குள்ளும் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழைக்காலங்களில் நீடிக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பு களை அதிகாரிகள் சரி செய்துதர வேண்டும் என்பதே அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.
- மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலை குண்டு குழியுமாக உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடலூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கிழக்கு ராமாபுரத்தில் குண்டு குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் திடீரென்று குட்டை போல் நின்றிருந்த மழை நீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளை உடனடியாக சீரமைக்கா விட்டால் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தனர் . பின்னர் சிறிது நேரத்தில் சிறைபிடித்த அரசு பஸ்ைசை விடுவித்து நாற்று நடும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- நாளை நடக்கிறது
- மாலை மற்றும் இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக மின்சார விளக்குகள் அமைத்து தரவேண்டும்.
புதுச்சேரி:
புதுவை விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கும், விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கும் சுகாதாரமான நவீன கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மாலை மற்றும் இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக மின்சார விளக்குகள் அமைத்து தரவேண்டும்.
இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் மற்றும் ராஜீவ் காந்தி உள் விளையாடரங்கத்தின் பாதுகாப்பு உறுதி செய்திட தகுதியான காவலாளிகளை நியமிக்க வலியுறுத்தியும் ரூ. 7 கோடி ரூபாய் செலவு செய்து சிந்தடிக் ஓடு பாதை அமைத்து 2 ஆண்டு களாகியும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் பூட்டி வைத்து ள்ளனர்.
ராஜீவ் காந்தி உள்விளை யாட்டு அரங்கத்தில் ஏசி வசதி செய்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் தகுந்த மின்சார வசதி புதுவை அரசு செய்து கொடுக்க வேண்டும்.
விளையாட்டு போட்டி கள் நடத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதை குறைக்க வேண்டும். கோவாவில் நடைபெற வுள்ள தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு மாநிலத்தின் சார்பில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர்கள் வீராங்கனை களுக்கு தேவை ப்படும் அனைத்து செலவையும் முழுவது மாக புதுவை அரசை ஏற்க வேண்டும்.
ராஜீவ் காந்தி விளை யாட்டு அரங்க த்திலும் இந்திரா காந்தி விளை யாட்டு அரங்கத்திலும் முழுவதுமாக சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விளையாட்டு வீரர்கள நலச்சங்கம் சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. மேலும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அரசு இதுவரை எதனையும் நிறைவேற்ற வில்லை.
இது தொடர்பாக விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களும் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக அனைத்து தனியார் பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
- இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பொது மக்கள் புகார் செய்து வந்தனர்.
காடையாம்பட்டி:
சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக அனைத்து தனியார் பஸ்களும் பண்ணப்பட்டி, பூசாரிபட்டி, அக்கரகாரம், தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதால் பொது மக்கள் புகார் செய்து வந்தனர். இதை தொடர்ந்து இன்று காலை பூசாரிப்பட்டியை சேர்ந்த பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் பி. எஸ். கே. செல்வம் தலைமையில் பொது மக்கள் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உடுமலை கச்சேரி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
உடுமலை :
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் விலைவாசி உயர்வை குறைத்திடவும், பெட்ரோல் டீசல் கியாஸ் விலையை பாதியாக குறைக்கவும், அரசு துறைகளை தனியாருக்கு விற்க கூடாது , உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி., வரியை திரும்ப பெற வேண்டும், சிறு குறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு முழுமையாக நிதி ஒதுக்க வேண்டும் , விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலையை தீர்மானித்திட வேண்டும், பொதுவிநியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உடுமலை கச்சேரி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடுமலை போலீசார் 181 பெண்கள் உட்பட 283 பேரை கைது செய்தனர்.பின்னர் அவர்கள் அனைவரும் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோன்று தளி பகுதிக்கு உட்பட்ட பள்ளபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 52 பெண்கள் உட்பட 130 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து ஜல்லிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.பின்னர் மாலையில் விடுவித்தனர். உடுமலை மற்றும் தளி பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
- தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
- போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார்.
நெல்லை:
நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பாளை தாலுகா கமிட்டி மற்றும் பாளை கிளை சார்பில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள எல்.ஐ.சி. மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித் தார். தொடர்ந்து கட்சியினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பாளை பஸ் நிலையம் பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாளை பஸ் நிலையம் சிக்னல் பகுதியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் சிறிது நேரம் மாற்று பாதையில் இயக்கப பட்டது.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை பாளை உதவி கமிஷனர் பிரதீப் தலைமையிலான போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர்.
போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் கோபாலன், மாவட்டத் தலைவர் மதுபால், இடை கமிட்டி செயலாளர்கள் நாராயணன், குழந்தைவேலு, கவுன்சிலர் முத்து சுப்பிர மணியன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அம்பை, வி.கே புரம், வள்ளியூர், களக்காடு, முக்கூடல், வீரவநல்லூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
- கம்யூனிஸ்டு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதில் மொத்தம் 94 மனுக்கள் கொடுக்கப்பட்டது.
திருச்சுழி
திருச்சுழி ஒன்றியம் நரிக்குடியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் பேராணியாக சென்றனர்.
வீடற்றவர்களுக்கு வீடு கேட்டும், குடியிருப்பு மக்களுக்கு பட்டா கேட்டும், 100 நாள் வேலையை முறைப்படுத்தி வழங்கவும், கிராமப்புற மக்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் வளர்ச்சி அலுவ லரிடம் மனு கொடுக்கப் பட்டது.
இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 94 மனுக்கள் கொடுக்கப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பாலு, தாலுகா குழு செய லாளர் பெரியசாமி, விவசாய சங்க தாலுகா தலைவர் அயூப்கான், சி.ஐ.டி.யூ. உதவி தலைவர் சுரேஷ், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டத்தலைவர் பூங்கோதை, மாற்றுத்திற னாளி சங்க நிர்வாகி ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி பெயரில் வழிநெடுகிலும் பேனர், பதாகைகள் வைக்கப்பட்டது.
- நயினார் பாலாஜி தலைமையில் பா.ஜ.க. தொண்டர்கள் எஸ்.என். ஹைரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கிய முதல் கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது.
இன்று மாலை நெல்லைபேட்டை பாறையடி காலனியில் இருந்து தொண்டர் சன்னதி வழியாக டவுன் ஆர்ச் வரை அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி அண்ணாமலை மற்றும் மத்திய மந்திரியை வரவேற்று டவுன் எஸ்.என். ஹைரோடு பகுதியில் பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி பெயரில் வழிநெடுகிலும் பேனர், பதாகைகள் வைக்கப்பட்டது.
இதையறிந்த போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆவுடையப்பன், காமேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் டவுன் பகுதிக்கு சென்று, அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற உத்தரவிட்டனர். அதன் பேரில் அங்குள்ள ஒரு பேனரை போலீசார் அகற்றினர்.
இதையறிந்த நயினார் பாலாஜி தலைமையில் பா.ஜ.க. தொண்டர்கள் எஸ்.என். ஹைரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆவுடையப்பன், காமேஸ்வரன் ஆகியோர் சென்று பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனுமதி இல்லாமல் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய முறையில் அனுமதி வாங்க வேண்டும். இல்லையென்றால் அதனை அகற்றுவோம் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பேனர்களுக்கு அனுமதி வாங்கும் ஏற்பாடுகளை தொடங்கினர்.
- இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
- மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பண்ருட்டி அனைத்து வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி வக்கீல்கள் இன்று காலை 10 மணியளவில் பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மக்கள் படும் இன்னல்களை கண்டு கொள்ளாமல் புதுவைக்கு வருகை தரும் ஜனாதிபதியை வன்மையாக கண்டிக்கிறோம்.
- மக்கள் விரோதி யார் என்ற முழக்கத்தை முன்வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் லாசுப்பேட்டை பொதிகை நகர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தமிழரசன், சபரி ஷிஷாந்த், ஐயப்பன், மனோஜ், கீர்த்திவாஸ், பிரதீப்ராஜ்,, தேவநாதன் ,அபிஷேக், விஜய் ,கவுதம், கவிதரன் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நாடு முழுவதும் நடந்தேறி வரும் கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வராமலும் மணிப்பூர் அரியானா மாநிலங்களில் கலவரங்களால் மக்கள் படும் இன்னல்களை கண்டு கொள்ளாமல் புதுவைக்கு வருகை தரும் ஜனாதிபதியை வன்மையாக கண்டிக்கிறோம்.
தேசிய கல்விக் கொள்கை, முற்பட்ட சாதி இட ஒதுக்கீடு, சி.பி.எஸ்.இ திணிப்பு உள்ளிட்ட சனாதன திட்டங்களையும், சட்டமன்றத்தில்