search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.கவினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    கோவில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ள காட்சி.

    தி.மு.கவினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

    • சேலம் பள்ளப்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ விநாயகர்- மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டி வரும் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ விநாயகர்- மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படை யில் இந்த ஆண்டு வருகின்ற 8-ம் தேதி முதல் 12 -ம் தேதி வரை திருவிழா நடத்த கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலுக்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் திருவிழாவின் போது அப்பகுதியில் உள்ள மக்கள் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது திருவிழா நடைபெறுவதை யொட்டி அங்கு தற்காலிகடை அமைப்பதற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ெபாதுமக்களிடம் தி.மு.க.வினர் சிலர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பொதுமக்களுக்கும் தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை அறிந்து அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் தற்காலிக கடை அமைக்க பணம் கேட்ட திமுக பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார், பிரச்சினை நடைபெறாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது ஆண்டாண்டு காலமாக திருவிழாவின் போது தற்காலிக கடை அமைக்க பணம் ஏதும் கொடுக்காமல் தொழில் செய்து வந்தோம். தற்போது திமுகவிவை சேர்ந்த சிலர் தற்காலிக கடை அமைப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். மிரட்டி வருகின்றனர். இல்லை என்றால் கடை நடத்த முடியாது என மிரட்டுவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டி வரும் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×