என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
- சீட்டு பணம் கட்டி ஏமாந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
- குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ரூ. 50 ஆயிரம், ரூ.1 லட்சம் , ரூ. 2 லட்சம் என பல்வேறு மதிப்புகளில் சுமார் ரூ. 10 கோடிக்கு மேல் ஏல சீட்டு நடத்தி வந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் கணேசபுரம் புது தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ரூ. 50 ஆயிரம், ரூ.1 லட்சம் , ரூ. 2 லட்சம் என பல்வேறு மதிப்புகளில் சுமார் ரூ. 10 கோடிக்கு மேல் ஏல சீட்டு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏல சீட்டிற்கு பணம் கட்டியவர்களுக்கு குறிப்பிட்ட காலம் முடிந்தும் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இந்த நிலையில் கலை செல்வி திடீரென்று தலைமறைவாகி விட்டார். இதனால் ஏல சீட்டு பணம் கட்டிய ஏமாந்தவர்கள் கடந்த 2019 -ம் ஆண்டு நாமக்கல் போலீசில் கலைச்செல்வி உட்பட 7 பேர் மீது புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்து 2019 -ம் ஆண்டு கலைச்செல்வி சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்த போது அவரது உறவினர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இதனால் தன்னிடம் ஏல சீட்டுக்கு பணம் கட்டியவர்களுக்கு திருப்பி கொடுக்க பணம் இல்லை என கூறினார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.
இதனிடையே சீட்டு பணம் கட்டி ஏமாந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் போலீஸ்
சூப்பிரண்டு அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
இந்த வழக்கை பொரு ளாதார குற்றப்பிரிவுக்கு அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு மாற்றி விசாரித்து இருக்க வேண்டும். ஆனால் அவர், வழக்கை மாற்ற வில்லை, எங்களை ஏமாற்றி வாங்கிய பணத்தின் மூல மாக குற்றவாளிகள் வாங்கிய சொத்துக்களை முடக்கி இருக்க வேண்டும், ஆனால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கினை விசாரித்து எந்த சொத்துக்களையும் ஜப்தி செய்யாமல் சாதாரண மோசடி வழக்காக பதிவு செய்துள்ளனர்.
முக்கிய நபர்களை வழக்கிலிருந்து காப்பாற்றும் வகையில் அவர்களின் பெயரை வழக்கிலிருந்து நீக்கம் செய்துள்ளனர்.எனவே இந்த வழக்கினை மறு விசாரணை செய்து கோர்ட்டு அனுமதி பேரில் அனைத்து குற்ற வாளிகளையும் வழக்கில் சேர்த்து அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து சீட்டு தொகையை பெற்று தர போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்