search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN"

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
    • நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா) மற்றும் 2 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கோரி உள்ளது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும்போது, நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம். அது என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம் என்றார்.

    • விளையாட்டுக்களால் மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிகளை அடைகிறது.
    • விளையாட்டுக்கள் மூலம் மனித குலம் அமைதி பெறுவதே ஐநா சபையின் நோக்கமாகும்

    வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 6 - ந்தேதி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள  மக்கள் வாழ்வில் விளையாட்டு நேர்மறையான பங்கை அங்கீகரிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    இன்று 6 -ந்தேதி இந்த 2024- ம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்கான விளையாட்டு,  சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது.




    2013 -ல் ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சபையால் ஏப்ரல் 6 -ந் தேதி வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. விளையாட்டுக்கள் மூலம் ஏற்படும் உடல் வலிமை, மனஅமைதியை ஐநா சபை அங்கீகரித்துள்ளது. இதன்காரணமாக தனிநபர் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து, பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி வருகிறது.

    உலக அளவிலான விளையாட்டுகள், மற்றும் சிறு விளையாட்டுக்களில் ஆர்வமுடன் பங்கேற்கும் நபர்களால் விளையாட்டு போட்டிகள் மேம்படுத்தப்படுகிறது. விளையாட்டுக்களால் மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிகளை அடைகிறது.

    விளையாட்டுக்கள் மூலம் மனித குலம் எளிதில் அமைதி பெறுவதே ஐநா பொது சபையின் நோக்கமாகும்.



    இந்த விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக, ஏப்ரல் 6- ந்தேதியை ஐ.நா பொது சபை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக (IDSDP) அறிவித்து உள்ளது.

    இந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன.மனித சமுதாய வளர்ச்சிக்கு விளையாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்து வருகிறது. இந்த தினத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் உலகம் முழுவதும் அமைதி பெற நாம் அனைவரும்  சபதமேற்போம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.
    • தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள் என்றார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    சமீபத்தில் ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே, இந்தியாவிலும் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

    இந்நிலையில், தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா.சபை எங்களுக்கு சொல்ல தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள். எனவே அது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டார்.

    • உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள்.
    • 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் ‘லிப்ட்’ கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்.

    நியூயார்க்:

    ஐ.நா.வில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தொழிலதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள். ஆனால் நான் அனுபவித்து இருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் 'லிப்ட்' கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன். அப்போது பல்கேரியாவுக்கும் இன்றைய செர்பியாவுக்கும் இடையே உள்ள நிஷ் என்ற பகுதியில் 120 மணி நேரம் (5 நாட்கள்) பட்டினி கிடந்தேன்' என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் நிபுணர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
    • அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கம் ஆகிய பிரச்சனைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர்.

    நியூயார்க்:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    அதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் 3 நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார். இந்தியாவில் உள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

    அமெரிக்காவின் தலையீடு தேவையற்றது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை நேரில் அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.

    அதுபோல் ஏற்கனவே ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

    இருப்பினும், மீண்டும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இப்பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐ.நா.வும் இப்பிரச்சனை பற்றி கருத்து கூறியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் அன்றாட நிருபர்கள் சந்திப்பை நடத்தினார்.

    அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கம் ஆகிய பிரச்சனைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:-

    தேர்தல் நடக்கும் எந்த நாட்டையும் போலவே, இந்தியாவிலும் ஒவ்வொருவரது அரசியல் உரிமைகளும், சிவில் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று பெரிதும் நம்புகிறோம்.

    ஒவ்வொருவரும் நேர்மையான, சுதந்திரமான சூழ்நிலையில் வாக்களிக்க முடியும் என்றும் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிஏஏ குறித்து ஐ.நா.வில் கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
    • இந்தியா தொடர்புடைய விஷயங்களில் பாகிஸ்தான் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் பேசுகையில், அயோத்தி ராமர் கோவில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஐ.நா.சபையில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோவில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசித்ரா கம்போஜ் கூறியதாவது:

    இந்த அவையில் பாகிஸ்தான் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. உலகம் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடானது ஒரே இடத்தில் தேங்கி நிற்பதுடன், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

    எனது நாட்டுடன் தொடர்புடைய விஷயங்களில், அந்நாட்டு குழுவினர் தவறான கண்ணோட்டத்தை காண்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் மனித உரிமைகள் சாதனை "உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது.
    • தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்தி, உண்மையிலேயே மோசமான மனித உரிமை சாதனைகளைக் கொண்ட ஒரு நாடு.

    காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தான் ஐ.நா.சபையில் அடிக்கடி பேசி இந்தியா மீது குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் 55-வது அமர்வில், இந்தியாவின் செயலாளர் அனுபமா சிங் பேசியதாவது:-

    இந்தியாவைப் பற்றிய விரிவான பாகிஸ்தானின் குறிப்புகளைப் பொறுத்தவரை, சபையின் தளம் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    நாங்கள் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமூக- பொருளாதார மேம்பாடு மற்றும் நல்லாட்சியை உறுதி செய்வதற்காக இந்திய அரசு எடுத்துள்ள அரசியலமைப்பு நடவடிக்கைகள் இந்தியாவின் உள் விவகாரங்கள்.

    இதில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. பாகிஸ்தானில் மனித உரிமைகள் சாதனை "உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது. தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்தி, உண்மையிலேயே மோசமான மனித உரிமை சாதனைகளைக் கொண்ட ஒரு நாடு, சாதிப்பதில் பெரும் முன்னேற்றங்களைச் செய்து வரும் இந்தியாவைப் பற்றி கருத்துத் தெரிவிப்பது, வெறும் முரண்பாடானவை அல்ல. மாறாக விபரீதமானவை.

    உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பயங்கரவாதம், கடனில் சிக்கித் தவிக்கும் தேசிய இருப்புநிலைகள் மற்றும் தங்கள் நலன்களுக்கு சேவை செய்யத் தவறியதற்காக அதன் மக்கள் உணரும் அவமானம் ஆகியவற்றால் ரத்தம் சிந்தப்பட்ட ஒரு நாட்டிற்கு இந்தியா அதிக கவனம் செலுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது
    • பசியின் காரணமாக உணவு வாகனங்களை கும்பல்கள் தாக்கி களவாடுகின்றன

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படையினர் (Israeli Defence Forces) ஹமாஸ் (Hamas) அமைப்பினரை அழிக்க வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    மேலும், ஹமாஸ் அமைப்பினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை காசா பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகின்றனர்.

    இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வடக்கு காசாவில் இருந்து மக்களில் பலர் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.

    அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) எனும் சர்வதேச அமைப்பின் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு காசாவில் உணவுகளை வினியோகிக்க சென்ற இந்த அமைப்பினரின் வாகனங்களை பசி மற்றும் வறட்சி காரணமாக காசா மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர்.

    ஒரு சில இடங்களில் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரணமான சூழலால், உணவு வழங்குவதை உலக உணவு திட்ட அமைப்பினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.


    இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருப்பதாவது:

    வடக்கு காசா பகுதியில் வன்முறையும், கட்டுப்பாடற்ற சூழலும் நிலவுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை உருவாகி விட்டது.

    உணவுக்காக கும்பல் கும்பலாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு களவாடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.

    பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்கள் சிறிது சிறிதாக பசி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் தீவிர துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

    உணவு வினியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளோம்.

    விரைவில் வினியோகம் மீண்டும் தொடங்கப்படும்.

    இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் பாலஸ்தீனத்தில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
    • 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

    இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.

    • தாக்குதலை அதிகப்படுத்துவதுதான் பிணைக்கைதிகள் விடுவிப்பதற்கான வழி என இஸ்ரேல் நம்புகிறது.
    • நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட்டால்தான் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை.

    காசாவில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகிறது என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மனிதாபிமான உதவிகள் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும் வகையில் இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

    காசாவின் வடக்கு பகுதிகளை மட்டுமே தாக்கிவந்த இஸ்ரேல் ராணுவம் தெற்குப் பகுதி, மத்தியப் பகுதி என அனைத்தும் இடங்களிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    காசாவில் மொத்தம் 2.3 மில்லியன் (23 லட்சம் மக்கள்) பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் 85 சதவீதம் பேர் வீட்டைவிட்டு வெளியேறி மருத்துவமனை, முகாம்களில் தங்கி வருகின்றனர். இவ்வாறு மருத்துவமனை, முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு போதுமான வகையில் உணவு அளிக்க முடியவில்லை என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தியபோது, மக்கள் அனைவரும் தெற்குப் பதிகுதிக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது அங்கேயும் தாக்குதல் நடத்தப்படுகிறது. மருத்துவமனை, முகாம் என எல்லா இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது இஸ்ரேல ராணுவம். இதனால் எங்கு செல்வது எனத் தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

    இதற்கிடையே மனிதாபிமான உதவிப் பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால். இதனால் உடனடியாக போரை நிறுத்தி, உதவிப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்கா பாராளுமன்ற அனுமதி பெறாமலேயே அவசரகால உதவி என்ற அடிப்படையில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்கியுள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 போர் கொல்லப்பட்டனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா முற்றிலும் சிதைந்துள்ளது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 9 ஆயிரம் பேர் சிறுமிகள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள்.

    போரின் நடுவே ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்து சுமார் 300 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    • உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
    • நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் தாக்குதலில் வடக்கு காசா முற்றிலும் சீர்குலைந்ததுள்ளது.

    பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான உலக நாடுகளும் இதை வலியுறுத்துகின்றன.

    அரபு நாடுகள் ஏற்கனவே இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அப்போது அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லைஎன பெரும்பாலான நாடுகள் விமர்சனம் செய்திருந்தன.

    இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

    ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவிற்கு சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படாது. உலக மக்களுக்கு ஒரு சம்பவத்தில் உலக நாடுகள் எடுக்கும் முடிவை இதன் மூலமாக வலியுறுத்த மட்டுமே செய்ய முடியும்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.
    • மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்.

    காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வின் சர்வதேச அமைப்புக ளுக்கான துணை வெளி யுறவுத்துறை மந்திரி கிம்சன் கியோங் கூறும்போது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்த கூட்டாளியைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோத மற்றும் நியாயமற்ற இரட்டைத் தரங்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்" என்றார்.

    ×