என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா கூட்டம்"

    • ஐ.நா.சபை ஊழியர்கள் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
    • ஐ.நா.சபை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றிய போது அவர் முன்னால் வைக்கப்பட்டு இருந்த டெலி பிராம்ப்டர் செயல் இழந்தது.

    நியூயார்க்கில் நேற்று ஐ.நா. சபை பொது உறுப்பினர் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் சென்றார். அவர்கள் அங்குள்ள நகரும் படிக்கட்டில் (எஸ்கலேட்டர்) சென்றனர்.

    அப்போது திடீரென நகரும் படிக்கட்டு பழுதானதால் அப்படியே நின்றது. மெலனியா ஹீல்ஸ் செருப்பு அணிந்து இருந்ததால் நிலை தடுமாறினார். பின்னர் இருவரும் நகரும் படிக்கட்டில் நடந்தே சென்றனர்.

    இந்த பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    அதன் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஐ.நா.சபை ஊழியர்கள் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர்களை பணிநீக்கம் செய்து உடனடியாக விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இது பற்றி டிரம்ப் கூறும் போது, மெலனியா சுதாரித்துக்கொண்டதால் கீழே விழவில்லை. நாங்கள் இப்போது பலமாக இருக்கிறோம் என தெரிவித்து இருக்கிறார்.

    இந்த நிலையில் ஐ.நா.சபை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றிய போது அவர் முன்னால் வைக்கப்பட்டு இருந்த டெலி பிராம்ப்டர் செயல் இழந்தது. இருந்த போதிலும் அவர் தொடர்ந்து பேசினார். இதுவும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என ஐநா பொதுசபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டார். #SushmaSwaraj #UNGA
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் இன்று தொடங்கியது.

    இதில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். அங்கு நெல்சன் மண்டேலா அமைதி உச்சிமாநாட்டில் பேசிய அவர், இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறினார். இந்திய அரசாங்கம் மண்டேலாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்கி கெளரவித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் காந்தியடிகளும், மண்டேலாவும் அமைதி வழியில் பொதுமக்கள் விடுதலைக்காக  போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.



    பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்த அமைச்சர் சுஷ்மா, எந்த வகையிலும்  பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று அவர்  கேட்டுக்கொண்டார். பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிராக சர்வதேச தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, நமது சந்ததியினருக்கு சிறந்த உலகை உருவாக்குவோம் என்றும் அவர் பேசினார்.

    இந்த கூட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. #SushmaSwaraj #UNGA
    ×