என் மலர்
நீங்கள் தேடியது "மக்கள்தொகை"
- ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு சீனா கைவிட்டது.
- சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துக்கொண்டு வருகிறது.
மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில சீனா உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில், சீனா மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகிறது.
1980-ம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். இதனையடுத்து, ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் சீனாவின் மக்கள்தொகை சரிவடைய தொடங்கி இருப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
இதனால் ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு சீனா கைவிட்டது. 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு வரிச்சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் கடந்த ஆண்டு அறிவித்தது.
ஆனாலும் சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துக்கொண்டு தான் உள்ளது. இந்நிலையில், சீனாவில் சரிந்துவரும் மக்கள்தொகையை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, ஆணுறைகள்,
கருத்தடை மருந்துகளின் பயன்பாடுகளை குறைக்க கூடுதல் வரிகளை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், குழந்தைகள், முதியோர் பராமரிப்பு சேவைகள், திருமணம் தொடர்பான வணிகங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரிகளையும் சீனா நீக்கியுள்ளது.
- நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
- ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கின்றனர்.
2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
டாப் 10 நகரங்கள் பட்டியலில், 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் மும்பை நகரம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் காங்கோவின் Kasai-Oriental, Beni, பாகிஸ்தான் தலைநகர் கராச்சி, சூரத், ஹாங்காங்கின் Tamar, காங்கோவின் Kinshasa, சோமாலியா தலைநகர் Muqdisho அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள் உள்ளன.
அதேநேரம் இந்திய அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நகரங்களின் பட்டியலில் முறையே, மும்பை, சூரத், அகமதாபாத், பெங்களூரு, கல்யாண், அலிகார், பிரயாக்ராஜ், ஸ்ரீநகர், புது டெல்லி, கான்பூர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 146 கோடி பேருடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2024ஆம் ஆண்டில் 6,86,061 குழந்தைகள் பிறந்துள்ளன.
- 2023ஆம் ஆண்டை காட்டிலும் 5.7 சதவீதம் குறைவாகும்.
ஜப்பானில் எதிர்பார்க்கப்பட்டதை விட 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் அதிக அளவில் குறைந்துள்ளதாக அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2024-ல் 6,86,061 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2023ஆம் ஆண்டை விட 5.7 சதவீதம் குறைவாகும். 1899ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக குழந்தைகள் பிறப்பு 7 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப்பின், குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் 27 லட்சம் குழந்தைகள் பிறந்தன. அதில் நான்கில் ஒரு பகுதிதான் தற்போது பிறந்துள்ளது.
அதிகரித்து வரும் வயது மூப்பு மற்றும் சுருங்கி வரும் மக்கள் தொகை ஆகியவை ஜப்பானின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைத்தன்மை குறித்து கவலை அடையச் செய்துள்ளது.
இந்த சூழ்நிலை அமைதியான எமர்ஜென்சி எனத் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, திருமண தம்பதிகள் வேலை மற்றும் குடும்பத்தை பேலன்ஸ் செய்து கொள்ளும் வகையில் வேலை செய்யும் இடத்தில் மேலும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும், மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.
ஆகிய நாடுகளில் வயது மூத்த மக்கள் தொகையை அதிகமாகவும், குழந்தை பிறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவிலும் கொண்ட நாடாக ஜப்பான் மாறியுள்ளது. தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள குடும்பங்களை ஊக்குவிக்க கடுமையாக போராடி வருகின்றன. வியட்நாம் நேற்று, இரண்டு குழந்தைகள் என்ற சட்டத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர்.
- பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர். அதன் பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.
பாதிப்பு
இதனால் திண்டமங்கலம் ஊராட்சியில் அப்பிநாயக்கன்பாளையம், நல்லகவுண்டம்நாளையம், திண்டமங்கலம், வடக்குபட்டி மற்றும் திண்டமங்கலம் புதூர் ஆகிய 5 கிராமங்களில் அடிப்படை வசதிகளான தெரு அமைப்பது, திண்டமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி செய்து தராமல் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்க ப்பட்டுள்ளன. இதே போல ஊராட்சியில் உள்ளார். 5 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாதசூழ்நிலை உள்ளது.
மனு
திண்டமங்கலம் ஊராட்சியில் மக்கள் தொகையை குறைத்து காட்டி உள்ளதால் 15- வது நிதிக்குழு மானியத்தில் நிதி ஒதுக்கப்படாததால் ஊராட்சியில் குடிநீர், சாலை, தெரு அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் , இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக திண்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமசாமி தெரிவித்தார்.
- இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 1.451 பில்லியனாக உள்ளது.
- சீனா அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகையில் பாதியை இழக்க உள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை 1.45 பில்லியன், 2085-ல் சீனாவை விட இரட்டிப்பாகும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மக்கள்தொகை 2100-ம் ஆண்டு 1.5 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சீனாவை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம் ஆகும். வளர்ச்சிக்கான குடியேற்றத்தில் முன்னணி நாடுகளில் அமெரிக்கா உள்ளது.
இந்தியா மற்றும் சீனாவை தொடர்ந்து 2100 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் (511 மில்லியன்), நைஜீரியா (477 மில்லியன்), காங்கோ ஜனநாயகக் குடியரசு (431 மில்லியன்), மற்றும் அமெரிக்கா (421 மில்லியன்) மக்கள்தொகையை கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தற்போதைய மக்கள்தொகை 345 மில்லியன்.
இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 1.451 பில்லியனாக உள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையை விட ஒன்பது மில்லியன் அதிகம். 2011-க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை 2054-ல் 1.692 பில்லியன் ஆகவும், 2061-ல் 1.701 பில்லியன் ஆகவும் உயரும் என்று அறிக்கை கூறுகிறது.
சீனா அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகையில் பாதியை இழக்க உள்ளது. இந்திய மக்கள்தொகையின் தற்போதைய சராசரி வயது 28.4 ஆண்டுகள் ஆகும், இந்தியாவோடு ஒப்பிடுகையில் சீனா 39.6 ஆண்டுகள் மற்றும் அமெரிக்கா 38.3 ஆண்டுகள் ஆகும். 2100-ல் இந்த எண்கள் முறையே 47.8 ஆண்டுகள், 60.7 ஆண்டுகள் மற்றும் 45.3 ஆண்டுகள் ஆகும்.
- உலக மக்கள்தொகை தின உறுதிமொழி பேரணி நடந்தது
- சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழியுடன் பேரணி நடத்தப்பட்டது
பேரணியில் காலை 8:30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது அதனை தொடர்ந்து சுகாதார நிலையம் முன்பு புற நோயாளிகளுடன் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் பின்பு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து திருமானூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் வரை மாணவர்கள் மருத்துவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சுகாதார மேற்பார்வையாளர்கள் போன்றோர் பேரணையாக நடந்து சென்று மக்கள் தொகை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் சிந்துஜா மருத்துவர் முன்னிலை வகித்தார் சுகாதார மேற்பார்வையாளர் வகில். சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் தமயந்தி உமா .சீதாராமன். நரேந்திரன். கருப்பண்ணன். ஜோயல். விவின் போன்ற சுகாதார நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர் பேரணிக்கு திருமானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் செல்போன் ஆப்பை பற்றி விளக்கம் அளித்து மாணவர்களுக்கு மாணவிகளுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால் ஆப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு விளக்கமளித்தார்.






