search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Population Day"

    • சாரதா மகளிர் கல்லூரியில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்ககம் இணைந்து நடத்திய மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் ராமநாதன் சுகாதாரத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்கினார்.

    நெல்லை:

    பாளை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி யில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்ககம் இணைந்து நடத்திய மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரிச் செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா ஆசியுடனும், இயக்குநர் சந்திரசேகரன் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நலப்பணிகள் இணை இயக்குநர் லதா தலைமை உரை ஆற்றினார்.

    மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் ராமநாதன் சுகா தாரத்தை எவ்வாறு பாது காப்பது குறித்த விழிப்பு ணர்வை மாண வர்களுக்கு வழங்கினார்.

    மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கனகா, பெண்கள், சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து எடுத்துரைத்தார். கல்லூரி மாணவி ஸ்ரீசங்கினி மக்கள் தொகை பெருக்கமும் வருங்கால இந்தியாவும் என்ற தலைப்பில் தனது கருத்துகளை பகிர்ந்தார். மாவட்ட விரிவாக்க கல்வி யாளர், மாவட்ட குடும்பநல இயக்ககம் ஜெயசித்ரா நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களும், பேராசிரி யர்களும் கலந்து கொ ண்டனர். நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பொருளியல்துறை மற்றும் வணிக நிர்வாகத் துறை பேராசிரியைகள் இணைந்து செய்திருந்தனர்.

    • உலக மக்கள்தொகை தின உறுதிமொழி பேரணி நடந்தது
    • சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழியுடன் பேரணி நடத்தப்பட்டது

    பேரணியில் காலை 8:30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது அதனை தொடர்ந்து சுகாதார நிலையம் முன்பு புற நோயாளிகளுடன் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் பின்பு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து திருமானூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் வரை மாணவர்கள் மருத்துவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சுகாதார மேற்பார்வையாளர்கள் போன்றோர் பேரணையாக நடந்து சென்று மக்கள் தொகை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் சிந்துஜா மருத்துவர் முன்னிலை வகித்தார் சுகாதார மேற்பார்வையாளர் வகில். சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் தமயந்தி உமா .சீதாராமன். நரேந்திரன். கருப்பண்ணன். ஜோயல். விவின் போன்ற சுகாதார நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர் பேரணிக்கு திருமானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் செல்போன் ஆப்பை பற்றி விளக்கம் அளித்து மாணவர்களுக்கு மாணவிகளுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால் ஆப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு விளக்கமளித்தார்.

    • மயிலத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பள்ளி வளாகத்தில் புறப்பட்டு மயிலம் பஸ் நிறுத்தம் வரை பேரணியாக சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    விழுப்புரம்:

    மயிலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மயிலம் யூனியன் தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் இளம் வயது திருமணத்தை தடை செய்வீர், ஒளிமயமான வாழ்விற்கு ஒரு குழந்தை போதுமே, திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம், என்பனவற்றை கோஷங்களை எழுப்பி பள்ளி வளாகத்தில் புறப்பட்டு மயிலம்பஸ் நிறுத்தம் வரை பேரணியாக சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர், குமாரசிவ விஸ்வநாதன், மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்எல்ஏ வழக்கறிஞர் சேது நாதன் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன், பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், வீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ் கொல்லியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி லட்சுமி வர்ணமுத்து, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×