search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணக்கெடுப்பு"

    • வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது 3 எம்.பி. தொகுதிகளிலும் 59 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இந்த 3 தொகுதிகளிலும் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    இவர்கள் வாக்கு அளிப்பதற்காக 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை எந்தெந்த பள்ளிகளில் மற்றும் சமூக நலக்கூடங்களில் அமைப்பது என்பது பற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    அதுபோல இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 5 தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுவார்கள். அவர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் அமைக்கப்படும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகளையும் சென்னை மாநகர போலீசார் 3 பிரிவுகளாக பிரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். சுமூகமாக வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகள், பதட்டமான வாக்குச் சாவடிகள், மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று 3 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் போலீசார் நடத்திய ஆய்வில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டன. 157 வாக்குச் சாவடிகள் மிக மிக பதட்டமானவை என்று கண்டு பிடிக்கப்பட்டன. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது சென்னை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 550 ஆக உயர்ந்தது. என்றாலும் மிக பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தது.

    இது தொடர்பாக தற்போது சென்னை மாநகர போலீசார் தீவிர கணக்கெடுப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் எந்தெந்த வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பதட்டமான, மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என்பது தெரியவரும்.

    அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அடுக்கு பாதுகாப்பு செய்ய சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது 3 எம்.பி. தொகுதிகளிலும் 59 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. சட்டசபை தேர்தலின் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சற்று அதிகரித்து இருந்தது.

    இந்த தடவை வாக்கு பதிவை 70 சதவீதமாக அதிகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    • கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
    • பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.

    உடுமலை:

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட என். மருள்பட்டிகுளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராயகுளம், தேன்குளம், சின்ன ஆண்டிபாளையம்குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர்குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் அணை உள்ளிட்ட 20 குளங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இந்த கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    உடுமலை வனச்சரகத்தில் உள்ள செங்குளம் மற்றும் பெரியகுளம் பகுதி கணக்கெடுப்பு பணியில் உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உயிரியளாளர் மகேஷ் குமார், ஆரண்யா அறக்கட்டளை கார்த்திகேயன்,ரவிக்குமார், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் மாங்குயில், நீல தாளை கோழி, நீர்காகம், புள்ளிச்சில்லை, நாமகோழி, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, மைனா, புதர் காடை, கொக்குகள், மீன்கொத்தி, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகள் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த பணியானது இன்றும் நடைபெற்றது. 

    • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி கணக்கெடுப்பு பணிகளை நடத்த அறிவுறுத்தல்
    • வருகிற 22-ந் தேதி வரை 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்து உள்ளது.

    இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கடமான்கள், புள்ளி மான்கள், பன்றிகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பருவமழைக்கு முன்பாகவும் அதன்பிறகும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு க்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு தெப்பகாடு வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்காக பிரத்யேக கருவிகளும் வழங்கப்பட்டன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது.

    அவர்கள் முதுமலை காப்பக பகுதிகளுக்கு சென்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்களுக்கு உயர்அதி காரிகள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கினர்.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் 321 சதுர கி.மீ., பரப்பளவில் உள்மண்ட லம் அமைந்து உள்ளது. இங்கு தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை மற்றும் மசினகுடி ஆகிய 5 வனச்சரகங்கள் இடம்பெற்று உள்ளன.

    மேற்கண்ட பகுதிகளில் தற்போது பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அப்போது அவர்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்படி கணக்கெடுப்பு பணிகளை நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று தொடங்கிய பணியானது வருகிற 22-ந் தேதி வரை நடக்க உள்ளது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.
    • கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

    உலக மக்கள்தொகை தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்தது. கடந்த செப்டம்பர் 26-ந் தேதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.

    உலக மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது.

    மக்களின் சராசரி வயது 32-ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060-ம் ஆண்டு அது 39-ஆக உயரும். கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

    கடந்த 1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 மடங் காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. பெண்கள் கருவுறும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருவது கடந்த 50 ஆண் டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் கழித்து தான் அமலுக்கு வரும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப்பது இந்த ஏமாற்று வேலைக்கு சிறந்த சான்று.
    • சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஐந்து ஆண்டுகளில் அகில இந்தியப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் பிரதி நிதித்துவம் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் காட்டும் சில திடுக்கிடும் புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன.

    இதற்கு ஒரே வழி, தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக பா.ஜனதா அரசு இருப்பதால் தான், சாதிவாரி கணக்கெடுப்பை முடக்கப் பார்க்கிறார்கள். மகளிர் இடஓதுக்கீடு கூட முழு மனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலை வாக்கு வங்கி அரசியலை கணக்கில் கொண்டு, கண்துடைப்புக்காக நிறைவேற்றியிருக்கிறார்கள். மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் கழித்து தான் அமலுக்கு வரும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப்பது இந்த ஏமாற்று வேலைக்கு சிறந்த சான்று.

    சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது. அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.

    வருகிற 2024 தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படுகிற போது, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமுதாயத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று தலைவர் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அது நிறைவேறுகிற காலமே சமூகநீதியின் பொற்காலமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டது.

    தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணியில் கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால், வீடு மற்றும் பொது சமூக கழிப்பறை, கழிவு சேகரிப்பு, கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதில் தூய்மைப் பணியாளா்களின் குடும்ப விவரங்கள் குறித்து சேகரித்து, அரசு நலத் திட்டங்களுக்கு உள்படுத்தபடவுள்ளது.

    இது குறித்து திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்துக்கு, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலக உதவித் திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆண்டவன் தலைமை வகித்தாா். தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

    • மொத்தம் 11 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
    • இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப் புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-

    கடந்த ஆண்டு பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் , சட்டமன்றம், சட்டமேலவை ஆகியவற்றின் ஒப்புதலோடு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த மாநிலத்தில் சாதிவாரி கணக்கீடை நடத்த உத்தரவிட்டார்.

    மொத்தம் 11 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.

    இதே போல கேரளாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    இதுவே உண்மையான சமூகநீதி என்று முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் நீண்ட காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    பீகாரை முன்மாதிரியாக கொண்டு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

    அதேபோல தேசிய அளவிலான கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் தற்போது 3,122 வரையாடுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது
    • 5 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை

    தமிழகத்தின் மாநில விலங்கு நீலகிரி வரையாடுகள். தமிழகத்தில் தற்போது 3,122 வரையாடுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.அழிவின் விளிம்பில் இவை உள்ளன. அவற்றை மீட்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக அரசு டிசம்பர் 2022ம் ஆண்டு அறிவித்தது.

    இத்திட்டத்தை, 2022 - 2027 என, 5 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் அவற்றின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட உள்ளன. வரையாடுகள் தற்போது தமிழகம், கேரளாவில் பரவலாக உள்ளன. இதையடுத்து இரு மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பை நடத்த வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி நவம்பர்மாதம் தென்மேற்கு பருவமழைக்குப் பிறகு மற்றும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் என தமிழக வனத்துறை இரு விதமாக, கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. 

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது.
    • புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி வனக்கோட்டத்தில் ஊட்டி வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள சின்னகுன்னூரில் தாய்புலி ஒன்று 4 குட்டிகளுடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 குட்டிபுலிகள் சடலமாகவும், ஒரு குட்டிப்புலி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது. ஆனால் அந்த புலியும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

    மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இறந்த குட்டி புலிகளின் தாய் புலியின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதனை தொடர்ந்து தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாளில் 4 வயதான புலிகள், 6 குட்டிப்புலிகள் என 10 புலிகள் இறந்துள்ளன. ஆகஸ்டு 16-ந் தேதி சீகூர் வனப்பகுதியில் நீரோடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன. அதனை ஆய்வு செய்தபோது அவை தாய்புலியால் கைவிடப்பட்டது தெரியவந்தது.

    ஆகஸ்டு 17-ந் தேதி நடுவட்டத்தில் ஒரு புலி இறந்து கிடந்தது. அந்த புலியின் உடலில் உள்ள காயங்களை ஆய்வு செய்த போது வேறு ஒரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

    இதேபோல் புலிகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆகஸ்டு 31-ல் ஒரு புலி இறந்தது.

    தொடர்ந்து கடந்த 9-ந் தேதி அவலாஞ்சி உபரி நீர் ஓடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன.

    மாட்டு மாமிசத்தில் விஷம் வைத்து இந்த புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உடல் உறுப்புகள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தி சேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.

    கடந்த 14-ந் தேதி சின்னக்குன்னூரில் புலிக்குட்டிகள் சுற்றுவதாக வந்த தகவலின் பேரில் புலிகளை கண்டுபிடிக்கும் வல்லுநர்களை அனுப்பி தேடும் பணி நடந்தது.

    அடர்ந்த வனப்பகுதியில் 3 புலிக்குட்டிகள் இறந்த நிலையிலும், ஒரு புலிக்குட்டி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது.

    அதனை மீட்டு சிகிச்சை அளித்த போது அந்த குட்டிபுலியும் இறந்துவிட்டது.

    இறந்த குட்டிகளை ஆய்வு செய்த போது, 4 குட்டிகளும் உணவின்றி இறந்தது தெரியவந்தது. இவற்றின் உடல் உறுப்பின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதன் மாதிரியும் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும் குட்டிகளின் தாய்புலியை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும்.

    மேலும் கோரகுந்தா, குந்தா, நடுவட்டம் உள்ளிட்ட 6 சரகங்களில் முகாம்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும். அத்துடன் அங்கு தொடர் கண்காணிப்புக்காக வேட்டை தடுப்பு காவலர்களும் நியமிக்கப்படுவர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பெற்றோர்களிடையே தங்களது குழந்தைகளை இடையில் நிறுத்தாமலிருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அங்கன்வாடி பணியாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    விழுப்புரம்:

    மயிலம் ஒன்றியத்தில் மயிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளான கோயில் அடிவாரம், பிள்ளையார் கோயில் தெரு மற்றும் மயிலாடும் பாறை ஆகிய பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம் வட்டாரக் கல்வி அலுவலர் மதன்குமார், தலைமையில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் குழு மூலம் நடைபெற்றது. பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு கள ஆய்வின்போது அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே தங்களது குழந்தைகளை இடையில் நிறுத்தாமல் குழந்தைகளை பள்ளிக்கு தொடர்ச்சியாக அனுப்பிவைக்க வலியுறுத்தி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மயிலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் லட்சுமி நரசிம்மன், செந்தில் ராஜா, ஆனந்தி, சுப்பிரமணியன், ஸ்ரீதர், சிவக்குமார், மயிலம் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் , சிறப்புப் பயிற்றுநர் நந்தீஷ்வரி மற்றும் மயிலம் அங்கன்வாடி பணியாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    • திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர்.
    • பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர். அதன் பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.

    பாதிப்பு

    இதனால் திண்டமங்கலம் ஊராட்சியில் அப்பிநாயக்கன்பாளையம், நல்லகவுண்டம்நாளையம், திண்டமங்கலம், வடக்குபட்டி மற்றும் திண்டமங்கலம் புதூர் ஆகிய 5 கிராமங்களில் அடிப்படை வசதிகளான தெரு அமைப்பது, திண்டமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி செய்து தராமல் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்க ப்பட்டுள்ளன. இதே போல ஊராட்சியில் உள்ளார். 5 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாதசூழ்நிலை உள்ளது.

    மனு

    திண்டமங்கலம் ஊராட்சியில் மக்கள் தொகையை குறைத்து காட்டி உள்ளதால் 15- வது நிதிக்குழு மானியத்தில் நிதி ஒதுக்கப்படாததால் ஊராட்சியில் குடிநீர், சாலை, தெரு அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் , இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக திண்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமசாமி தெரிவித்தார்.

    • பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை கண்டறியவும், அது தொடர்பான விவரங்களை பெறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட உள்ளனர்.

    கோவை,

    தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுகிறது.

    இப்படி கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டிற்கான பள்ளி செல்லா மாணவர்கள் கணக்கெடுப்பு பணியானது இன்று முதல் தொடங்கியது. கணக்கெடுப்பின்போது ரெயில் நிலையம், பஸ் நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி, குடிசை பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    தவிர, கட்டுமான பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, தொழிற்சாலை களில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்து கண்டறிய வேண்டும்.

    இந்த கணக்கெடுப்பு பணியின் போது கொரோனா காரணமாக பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். கணக்கெ டுப்பு சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.

    பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளை உடனடியாக பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். சிறப்பு பயிற்சி தேவைப்படும் குழந்தைகளை இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட உடன் எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கணக்கெடுப்பு பணியின் போது, சிறப்பு கவனம் செலுத்தி தங்கள் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாத பெண் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த குழந்தைகள் யாரேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக அக்குழந்தைகளை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, வயதுக்கு ஏற்ற வகுப்பில் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியானது இன்று துவங்குகிறது.

    இப்பணியில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட உள்ளனர்.

    எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கணக்கெடுப்பை மிகச்சரியாக எடுக்க வேண்டும். பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை கண்டறியவும், அது தொடர்பான விவரங்களை பெறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு கவுன்சலிங் தேவைப்பட்டால் அளிக்கப்படும். கணக்கெடுப்பின் தகவல்களை செல்போன் செயலில் பதிவேற்றம் செய்யப்படும். இதில், பள்ளியில் இருந்து இடை நின்ற மாணவர்களின் புகைப்படம் பதிவு செய்யப்படும் என்றார்.

    ×