என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் 2-வது கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு - 173 இனங்கள் கண்டறியப்பட்டன
- பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வருவது வழக்கம்
- மொத்தம் 23 இடங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடை பெற்றன
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் ஆண் டுதோறும் 2 பருவ மழைகள் பெய்வதால் இங்குள்ள நீர்நி லைகளில் எப்போதும் தண் ணீர் நிறைந்து காணப்படு கிறது. இதனால் உணவு, இனப்பெருக்கம் மற்றும் புக லிடம் தேடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந் தும், வெளிநாடுகளில் இருந் தும் பறவைகள் வருவது வழக் கம். பொதுவாக அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரை பறவைகள் வருகின்றன.
அவ்வாறு வரும் பறவை களில் எத்தனை இனங்கள் உள்ளன? பறவைகளின் எண்ணிக்கை எந்த அளவு உள்ளது? என்பது குறித்து வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பை 3 கட் டமாக நடத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன் படிமுதற்கட்டமாக நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு புத்தளம், தேரூர், சுசீந்திரம், மேம்பனூர், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்பட 20 இடங்களில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி நடந்தது.
இதனைதொடர்ந்து காடு கள் மற்றும் நிலங்களில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நேற்று நடந்தது. மாவட்ட வன அதிகாரி இளையராஜா மேற்பார்வையில் 47 பறவையியலாளர்கள், 50 வனப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இந்த பணி நேற்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வனப்பகுதிகள், கிராமப் புறப்பகுதிகள் மற்றும் நகர்ப்புறப்பகுதிகள் என 3 வகையான இடங்களில் நடந்தது.
மாவட்டத்தில் அசம்பு, கோதையார், மாறாமலை, பாலமோர், தெற்குமலை உள் பட 14 வனப்பகுதிகளிலும், உதயகிரி, ஆரல்வாய்மொழி, ஆசாரிபள்ளம், கோணம் போன்ற 9 நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகள் உள்பட மொத்தம் 23 இடங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன.
இதில் சுமார் 173 இனங்களைச்சேர்ந்த 3,864 பறவைகள் கண்டறியப்பட்டன. இது கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட 2,002 பறவைகளை விட அதிக மாகும்.
நேற்று நடைபெற்ற கணக்கெடுப்பில் மலை இருவாட்சி, தீக்காக்கை, பூமன் ஆந்தை, கள்ளிக்குயில் போன்ற பறவைகள் காணப்பட்டன. வனப்பகுதிகளில் காணப்படும் அரிய வகையான இந்தியபொன்னுத்தொட்டான் நகர்ப்புறப்பகுதியான ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்