search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் மீட்டர் கணக்கெடுப்பில் குளறுபடி
    X

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. 

    மின் மீட்டர் கணக்கெடுப்பில் குளறுபடி

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தா விட்டால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

    மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் என்று தேர்தல் வாக்குறுதி தந்த தி.மு.க. அந்த வாக் குறுதியை இன்னமும் நிறைவேற் றவில்லை. இது ஒரு புறம் இருக்க 60 நாட் களுக்கு சரியாக ரீடிங் எடுப்பதிலும் குளறு படி நடக்கிறது. பல இடங்களில் காலம் தள்ளி வந்து கணக்கெ டுக்கிறார்கள். அதன் காரணமாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் யூனிட் கூடி விடுகிறது.

    இதன் காரணமாக கட்டண விகிதமும் தாறு மாறாக எகிறுகிறது. ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தா விட்டால் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டுமென விதிகள் உள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதில் மக் கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

    அதே வேளை நுகர்வோருக்கு மின்வாரியத்தால் ஏற்படுகிற பாதிப்புகளுக்கு எந்தவித நிவாரணமும் இல்லை. மொத்தத்தில் இந்த ஆட்சியில் மக்கள் எல்லா வகை யிலும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×