search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Severe punishment"

    • மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வன்முறையாளர்களுக்கு கடும் தண்டனை விதக்க வேண்டும்.
    • மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தி ஏழை, எளிய மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    தேசிய தவ்ஹீத் கூட்ட மைப்பு சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் மாநிலச் செயலாளர் முஹம்மது பாரூஸ் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வருகிற ஜனவரி 8-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ள நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பு மாநாடு குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் மாநில பேச்சாளர் சபீர் ரஹ்மான், இம்ரான்கான் ஆகியோர் பேசினர். தேசிய தவ்ஹித் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் நபிகள் நாயகத்தின் சிறப்பு பண்புகளை விவரித்து பேசினார். மாவட்டப் பொருளாளர் முஹம்மது கான் தீர்மானம் வாசித்தார், மாவட்ட பேச்சாளர் அப்துல் சத்தார் நன்றி கூறினார்.

    முன்னதாக தேசிய தவ்ஹித்கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்து, மத்திய அரசின் அடக்குமுறைப் போக்கை நிலைநாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள என். ஐ. ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமையை உடனடியாக கலைத்து விட்டு, மாநில அரசுகளின் ஒப்புதலோடு சி.பி.ஐ. மட்டுமே புலனாய்வுக்கு பயன்படுத்த வேண்டும்.

    நீண்டகால சிறைவாசி களை நன்னடத்தையின் அடிப்படையிலும், அரசின் பரிந்துரையின் அடிப்படையிலும் விடுதலை செய்யும்போது, ஒவ்வொரு முறையும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. மத அடிப்ப டையிலான இந்த பாரபட்சம் ஜனநாயக விதிகளுக்கு முற்றிலும் மாறானது. இத்தகைய அநீதியைக் களையும் வகையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

    கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பை டி.ஜி.பி. உத்தரவின் பேரில் கோவை காவல்துறையினர் விரைந்து எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறோம். மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கும் வன்முறை, பயங்கரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உயர்ந்தபட்ச கடும் தண்டனைக்கு உட்படுத்தபட வேண்டும். அதே சமயம் இந்த வழக்கை புலன் விசாரணை செய்து வரும் என்.ஐ.ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள், இறந்துபோன ஜமேஷா முபினுக்கு பின்புலத்தில் இருந்த உண்மையான சூத்திரதாரியை நாட்டிற்கு அடையாளம் காட்டக் கூடியதாக இருக்க வேண்டும். சம்பந்தமில்லாத அப்பாவிகளை சோதனை என்ற பெயரில் வேட்டை யாடி அவர்களை குற்றவாளி களாக சித்தரிக்கும் போக்கு கூடாது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். குறிப்பாக மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தி ஏழை, எளிய மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×