என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra CM"

    • 5 ஆயிரம் கோவில்களைக் கட்ட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன்.
    • ஏழுமலையான் கோவில் நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் இருக்க வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆந்திரா மாநில அரசு சார்பில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன் ஆகியோர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர்.

    அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    உலகம் முழுவதும் இந்துக்கள் இருக்கும் இடங்களில் ஏழுமலையான் கோவில்களைக் கட்டி அவரது சக்தியை அனைத்து திசைகளிலும் பரப்புவது அனைவரின் பொறுப்பு.

    ஏழுமலையானுக்கு பலமுறை பட்டு வஸ்திரங்களை காணிக்கை செய்யும் பாக்கியத்தை இறைவன் எனக்கு அளித்துள்ளார். சிறுவயதில் இருந்து ஏழுமலையானை வணங்கி வளர்ந்தவன்

    எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும், அவர் மீது தனது பாரத்தை சுமத்தி முன்னேறினேன். ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நிதியுடன் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் கோவில்களைக் கட்ட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன்.

    மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராம மக்கள் இறைவனை வழிபடும் வகையில் அனைத்து கிராமங்களிலும் ஏழுமலையான் கோவில் இருக்க வேண்டும்.

    அவை நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் இருக்க வேண்டும். உலகில் இந்துக்கள் எங்கிருந்தாலும், அங்கு ஏழுமலையான் கோவில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    இதற்காக, திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் சில குழுக்களை அமைத்து, அவ்வப்போது அங்குள்ள மக்களிடம் பேசி, உலகம் முழுதும் ஏழுமலையான் கோவில்கள் நிறுவப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை ரூ 2,038 கோடியைப் பெற்றுள்ளது. நாங்கள் ரூ. 837 கோடியை செலவிட்டுள்ளோம். இன்னும் ரூ. 1,700 கோடி உள்ளது. அதில் ஏழுமலையான் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரியை வெளியிட்டார்.

    பின்னர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

    பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார்.
    • சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், ஜெகன் பயணித்த வாகனமே சிங்கையாவை மோதியது உறுதியானது.

    ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா என்பவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

    ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார்.

    அப்போது, அவரது கான்வாயைப் பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில், செலி சிங்கையா மலர்கள் தூவ முயன்றபோது தவறி விழுந்து, ஜெகனின் காரின் முன் வலது சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.

    முதலில், விபத்து ஜெகனின் கான்வாயில் உள்ள மற்றொரு வாகனத்தால் நடந்ததாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், ஜெகன் பயணித்த வாகனமே சிங்கையாவை மோதியது உறுதியானது.

    விபத்துக்குப் பிறகு, சிங்கையாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள், சிங்கையாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தேர்தல் பிரசாரத்தின் போது ஆந்திர முதல் மந்திரி மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார்.
    • இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்துக்காக ரோடு ஷோ நடத்தினார். சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் நடந்த ரோடு ஷோவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் ஜெகன்மோகன் காயமடைந்தார்.

    இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அருகிலிருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் முதல் மந்திரி அருகிலிருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையைத் தொடர்ந்தார்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர முதல் மந்திரி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கலப்பட நெய் விவகாரம் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கோயில் பரிகார பூஜைகள் செய்வது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.

    அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்கி 9 நாட்கள் திருப்பதி மலையில் ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது.

    அதனால், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சந்திப்பின்போது கலப்பட நெய் விவகாரம் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கோயில் பரிகார பூஜைகள் செய்வது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    • பிரசாதங்களின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • திருப்பதி மலை வனப்பகுதிகளை 70 முதல் 80 சதவீதம் வரை அடர்ந்த வனப்பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும்.

    திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது, திருப்பதி மலையில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், பிரசாதங்களின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி மலை வனப்பகுதிகளை 70 முதல் 80 சதவீதம் வரை அடர்ந்த வனப்பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதுடெல்லியில் சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடு புதுடெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய பிரமாண்ட மாநாடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    சந்திரபாபு நாயுடு பங்கேற்ற அம்மாநாட்டில் சில கட்சிகள் ராகுல் காந்தி தலைமையை ஏற்க தயாராக இல்லை என்று கூறி வருகின்றன. இது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

    மேலும் சந்திரபாபுநாயுடு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயையும் சந்தித்தார். அப்போது அமராவதியில் ஐகோர்ட்டு கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். #ChandrababuNaidu #RahulGandhi


    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #AndhraCM #JaganMohanReddy
    நகரி:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

    அம்மாநில சட்டசபை காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து சந்திரசேகரரராவ் ஆட்சியை கலைத்து கடிதம் கொடுத்தார்.

    வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல ஆந்திராவிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் தெலுங்கானா, ஆந்திரா சட்டசபை தேர்தலில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்று ஆங்கில டி.வி. சேனல் இந்தியா டூடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா ஆகியவை இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.

    10 ஆயிரத்து 650 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் தெலுங்கானாவில் மீண்டும் சந்திர சேகரராவ் முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அம்மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்சமார் ரெட்டிக்கு 18 சதவீதம் பேரும், பா.ஜனதா தலைவர் கி‌ஷன்ரெட்டிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்துக்காக போராடிய பேராசிரியர் கோதண்டராமுவுக்கும் 6 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.


    இதன் மூலம் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 38 சதவீதம் பேர் ஆதரவு கொடுத்துள்ளனர்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு 5 சதவீத ஆதரவே உள்ளது.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டமாக பாதயாத்திரை சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

    இதனால் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு பெருகி இருப்பதாக கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி மீது 35 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    கர்நாடகாவில் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிக்கு 55 சதவீத பேரும், ராகுல்காந்திக்கு 42 சதவீத பேரும் ஆதரவு அளித்துள்ளனர். #AndhraCM #JaganMohanReddy
    ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்மந்திரி குமாரசாமியை இன்று சந்தித்து தென்னிந்திய கட்சிகள் ஒன்றிணைவது குறித்து ஆலோசனை நடத்தினார். #KarnatakaCM #Kumaraswamy #AndhraCM #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக கனகதுர்கா ஆலையத்துக்கு வழிபட வந்த கர்நாடக மாநில முதல்மந்திரி குமாரசாமியை ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், தென்னிந்திய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக இணைவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பை அடுத்து, இதுதொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. #KarnatakaCM #Kumaraswamy #AndhraCM #ChandrababuNaidu
    ×