என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ezhumalayan Temple"

    • 5 ஆயிரம் கோவில்களைக் கட்ட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன்.
    • ஏழுமலையான் கோவில் நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் இருக்க வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆந்திரா மாநில அரசு சார்பில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன் ஆகியோர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர்.

    அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    உலகம் முழுவதும் இந்துக்கள் இருக்கும் இடங்களில் ஏழுமலையான் கோவில்களைக் கட்டி அவரது சக்தியை அனைத்து திசைகளிலும் பரப்புவது அனைவரின் பொறுப்பு.

    ஏழுமலையானுக்கு பலமுறை பட்டு வஸ்திரங்களை காணிக்கை செய்யும் பாக்கியத்தை இறைவன் எனக்கு அளித்துள்ளார். சிறுவயதில் இருந்து ஏழுமலையானை வணங்கி வளர்ந்தவன்

    எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும், அவர் மீது தனது பாரத்தை சுமத்தி முன்னேறினேன். ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நிதியுடன் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் கோவில்களைக் கட்ட திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன்.

    மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராம மக்கள் இறைவனை வழிபடும் வகையில் அனைத்து கிராமங்களிலும் ஏழுமலையான் கோவில் இருக்க வேண்டும்.

    அவை நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் இருக்க வேண்டும். உலகில் இந்துக்கள் எங்கிருந்தாலும், அங்கு ஏழுமலையான் கோவில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    இதற்காக, திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் சில குழுக்களை அமைத்து, அவ்வப்போது அங்குள்ள மக்களிடம் பேசி, உலகம் முழுதும் ஏழுமலையான் கோவில்கள் நிறுவப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை ரூ 2,038 கோடியைப் பெற்றுள்ளது. நாங்கள் ரூ. 837 கோடியை செலவிட்டுள்ளோம். இன்னும் ரூ. 1,700 கோடி உள்ளது. அதில் ஏழுமலையான் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரியை வெளியிட்டார்.

    பின்னர் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

    பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் சர்ச்சையில் சிக்கினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் வகையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பிராங்க் வீடியோ எடுத்ததை தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, டிடிஎஃப் வாசன் மீது வழக்கு எண் 72/2024 பிரிவு 299 கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பினர்.

    டிடிஎஃப் வாசனுக்கு திருப்பதி காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் திருப்பதி விரைந்துள்ளனர்.

    ×