என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரபாபுநாயுடு"

    • இந்தியாவின் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.
    • பால் உற்பத்தி நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் சந்திரபாபுநாயுடுவின் குடும்பத்தினரிடம் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் மம்தா பானர்ஜிக்கு கடைசி இடமே கிடைத்துள்ளது.

    ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) ஆண்டுதோறும் பல்வேறு புள்ளிவிவரங்களை வெளியிடும். அதன்படி இந்த ஆண்டில் இந்தியாவின் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அந்த பட்டியலின்படி ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, ரூ.931 கோடி சொத்து மதிப்புகளுடன் இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இதற்கு காரணம் அவர் அரசியலுக்கு வருவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே அவர் தொடங்கிய பால் உற்பத்தி நிறுவனமாகும்.

    கடந்த 1992-ம் ஆண்டு ரூ.1 கோடி அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடனும் ரூ.7 ஆயிரம் செலுத்தப்பட்ட மூலதனத்துடனும் அவர் தொடங்கிய அந்த நிறுவனம் தற்போது பல இடங்களில் கிளைகளை பரப்பி, விரிவடைந்து ரூ.931 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளது.

    இந்த நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் சந்திரபாபுநாயுடுவின் குடும்பத்தினரிடம் உள்ளது. இதில் சந்திரபாபுநாயுடு பெயரில் எந்த சொத்தும் இல்லை என்றாலும் அவருடைய மனைவி புவனேஸ்வரிக்கு 24.37 சதவீத பங்குகள் உள்ளன. அந்த பங்குகள் சந்திரபாபுநாயுடுக்கு சொந்தமானதாகவே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

    அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் நாரா (சந்திரபாபுநாயுடு குடும்ப பெயர்) குடும்பத்தினர் மொத்தம் 41.3 சதவீதத்தை வைத்துள்ளனர். இதன் மதிப்பு 1995-ம் ஆண்டு ரூ.25 கோடியாக இருந்தது. அதன் சந்தை மூலதனம் ரூ.4,381 கோடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.6,755 கோடியை எட்டியது. அதிகபட்சமாக 1,81,907 பங்குதாரர்களை கொண்டுள்ளது.

    ஏ.டி.ஆர். வெளியிட்டுள்ள பட்டியலில் கடைசி வரிசையில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளார். அவர்தான் மிகவும் வசதி குறைந்தவராக உள்ளார்.

    இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் தேர்தலின்போது பிரமாணப்பத்திரத்தில் தாக்கல் செய்ததின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

    • ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை.
    • வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை வெளியிட்டார்.

    ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவருடைய குப்பம் தொகுதியில் வசிக்கும் 250 குடும்பத்தினரை தத்தெடுத்துள்ளார்.

    ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

    அப்போது வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை வெளியிட்டார்.

    அவர் கூறுகையில்:- நான் குப்பம் தொகுதியில் 250 குடும்பங்களை தத்தெடுக்கிறேன். அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி எனது பொறுப்பு.

    வறுமையை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நானே களம் இறங்கி இதனை நடைமுறைப்படுத்துகிறேன். சமூகத்தில் பொருளாதார இடைவெளியை குறைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப்போல மாநிலத்தில் ஏழை குடும்பத்தினரை தத்தெடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதுடெல்லியில் சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடு புதுடெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய பிரமாண்ட மாநாடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    சந்திரபாபு நாயுடு பங்கேற்ற அம்மாநாட்டில் சில கட்சிகள் ராகுல் காந்தி தலைமையை ஏற்க தயாராக இல்லை என்று கூறி வருகின்றன. இது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

    மேலும் சந்திரபாபுநாயுடு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயையும் சந்தித்தார். அப்போது அமராவதியில் ஐகோர்ட்டு கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். #ChandrababuNaidu #RahulGandhi


    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது என்று கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார். #Kanimozhi #DMK #MKStalin #BJP
    சென்னை:

    பா.ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைக்க ஆந்திர முதல்-மந்திரி சந்திபாபு நாயுடு தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

    இதற்காக டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதனைதொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக சென்று பா.ஜனதா அல்லாத கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சென்று மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கவுடாவை சந்தித்தார்.சென்னையில் நேற்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.




    இந்த சந்திப்பு குறித்து கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-

    தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னெடுத்து வரும் பா.ஜனதா எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள் பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது. இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளதை போல, மதவாத பா.ஜனதாவையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார். #Kanimozhi #DMK #MKStalin #BJP


    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார். பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். #ChandrababuNaidu #RahulGandhi
    புதுடெல்லி:

    பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளார்.

    இதற்காக அவர் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சரத்யாதவ், பா.ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த்சின்கா ஆகியோரை சந்தித்து பேசி இருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.



    பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். ஏற்கனவே இரு கட்சியினர், இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திவிட்டனர். இதன் தொடர்ச்சியாக இரு கட்சிகளின் தலைவர்களும் இன்று சந்திக்கிறார்கள்.

    ராகுல் காந்தியை நேரடியாக சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச இருப்பது இது முதல் முறையாகும்.

    ஆந்திராவில் காங்கிரசும், தெலுங்கு தேசமும் எதிர்துருவங்களாக இருக்கும் கட்சிகளாகும். பா.ஜனதாவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க இந்த இரு கட்சியும் கூட்டணி அமைக்கின்றன.

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு முன்பு மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தான் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார்.

    இந்த சந்திப்பின் போது தெலுங்கானா தேர்தலில் இரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி இறுதி செய்யப்படும்.

    ராகுல் காந்தியை தொடர்ந்து சரத்பவார், பரூக் அப்துல்லா, வீரப்பமொய்லி உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். #ChandrababuNaidu #RahulGandhi

    ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்தியது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் அல்ல என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu #JeganMohanReddy
    நகரி:

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர் செல்பி எடுக்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். ஜெகன்மோகன் ரெட்டி செல்பிக்கு போஸ் கொடுத்தபோது அந்த வாலிபர் திடீரென்று கத்தியால் ஜெகன்மோகன் ரெட்டி மீது குத்தினார்.

    இதில் அவரது இடது கையில் கத்திக்குத்து விழுந்தது. தப்பி ஓட முயன்ற வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் சீனிவாஸ் என்பதும் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அந்த ஓட்டல் உரிமையாளர் ஹர்சவர்தன் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் ஆவார்.

    எனவே தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் ஜெகன்மோகன் ரெட்டியை கொல்ல முயன்றதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

    இதற்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அமராவதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்தியது அவரது தீவிர ரசிகர், அவர் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் அல்ல. சம்பவம் நடந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் விமான நிலையம் ஆகும். அவர்கள் திட்டமிட்டு நாடகம் நடத்திவிட்டு தெலுங்கு தேசம் கட்சி மீது குற்றம் சுமத்துகிறார்கள். அவர்களின் தமாசும், ஆட்டமும் என்னிடம் எடுபடாது. இதை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்த ஒருவரை எப்படி விமானத்தில் ஏற்ற அனுமதித்தார்கள். அவர் விமானத்தில் ஏறாமல் விமான ஊழியர்கள் தடுத்திருக்க வேண்டும். அவர் விமான நிலைய போலீசாரிடம் புகார் செய்யவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவும் இல்லை. அவருக்கு நரேந்திர மோடி பாடம் கற்றுக் கொடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

    சம்பவம் நடந்ததும் கவர்னர், டி.ஜி.பியிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர் என்னிடம் தான் கேட்டிருக்க வேண்டும். எனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இப்படி ஒரு கேவலமான அரசியலை பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் அதிகார பிரதிநிதி விஜய்சாய் ரெட்டி கூறியதாவது:-



    ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த தாக்குதல் கொலை முயற்சி. அவர் எப்போதும் லட்சக்கணக்கான மக்களின் மத்தியிலேயே இருப்பார். எனவே அப்போது அவரை நெருங்க முடியாது என்பதால் விமான நிலையத்தில் வைத்து கத்தியால் குத்தியுள்ளனர். 5 மாதம் திட்டம் போட்டு இதை நடத்தியுள்ளனர்.

    கத்தியால் குத்திய சீனிவாஸ் வேலை பார்க்கும் ஓட்டல் உரிமையாளர் ஹர்சவர்தன் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர். அவர் ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவுக்கு கார் ஓட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தாமலேயே அவர் ஜெகன்மோகன் ரெட்டி ரசிகர் என்று டி.ஜி.பி. கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்த ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை அவரது தாயார் விஜயலட்சுமி, நடிகை ரோஜா ஆகியோர் நேரில் பார்த்தனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். #ChandrababuNaidu #JeganMohanReddy
    திருப்பதியில் ரூ.1000 கோடியில் அமையும் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு மற்றும் ரத்தன் டாடா ஆகியோர் அடிக்கல் நாட்டினர். #ChandrababuNaidu

    திருப்பதி:

    திருப்பதியில் இருந்து திருமலை செல்லும்பாதையில் அலிபிரி அருகே வனவிலங்குகள் சரணாலயம் (எஸ்.வி.ஜூ பார்க்) அமைந்துள்ளது. இதன் அருகே 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடியில் வெங்கடேஸ்வரா புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு நேற்று காலை கண்ணவரத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டார். அவரது விமானம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் 11.20-க்கு தரை இறங்கியது. விமானத்தில் இருந்து இறங்கிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கலெக்டர் பி.எஸ்.பிரதியும்ணா, டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஜி.சீனிவாஸ், திருமலை தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாசராஜூ, விமான நிலைய இயக்குனர் புல்லா நானி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெங்கடேஸ்வரா புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை அமைய உள்ள இடத்துக்கு சென்று இறங்கினார். விழாவில் பங்கேற்பதற்காக தொழில் அதிபர் ரத்தன் டாடாவும் வந்திருந்தார்.

    ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நாராயணா, துணை கலெக்டர் பி.எஸ்.கிரீஷா, புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் மஹந்தி, சுகுணம்மா எம்.எல்.ஏ., ரஷ் மருத்துவமனை இயக்குனர் சிப்பாயி சுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் நடந்த விழாவில் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு பூமி பூஜை நடந்தது. இதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ரத்தன் டாடா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத்தன்டாடா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவிலில் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதத்துடன் வெங்கடாசலபதி படமும் வழங்கப்பட்டது. #ChandrababuNaidu

    ×