search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opinion Poll"

    • 27 சதவீத சிறுமிகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகியதாக தெரிவித்தனர்
    • சிறுவர்களில் 24 சதவீதம் பேர் தனியே நடந்து செல்ல அச்சப்படுவதாக ஒப்புக்கொண்டனர்

    இங்கிலாந்தில் பதின் வயதுகளில் (13லிருந்து 19 வரை) உள்ள 1000 சிறுவர்களிடமும் 1000 சிறுமிகளிடமும் ஒரு தனியார் செய்தி நிறுவனம் சார்பில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் அவர்கள் வீட்டிலும், பள்ளிகளிலும், வீதிகளிலும் மற்றும் பொது இடங்களிலும் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.

    இதில் 27 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் தாங்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு முறையாவது பாலியல் தாக்குதலுக்கோ அல்லது தொந்தரவிற்கோ ஆளானதாக தெரிவித்துள்ளனர்.

    நகர வீதிகளில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என 44 சதவீதம் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிகம் இடம்பெறும் ஆபாச படங்களும் செய்திகளும் தங்களை பாதிப்பதாகவும், இணையதளங்களில் எதிர்பாராத நேரங்களில் திடீரென தோன்றும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தங்கள் கவனத்தை பாதிப்பதாகவும் அவர்களனைவரும் தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்தவர்களில் பலர் தாங்கள் எப்போதும் மன அழுத்தத்திலும் உளைச்சலிலும் இருப்பதாக கூறினர்.

    பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பாதுகாப்பற்று உணர்வதாக பல சிறுமிகள் கூறினர். உடுத்தும் உடை, உடல் தோற்றம் மற்றும் முக அழகு குறித்த விமர்சனங்களும் கிண்டல்களும் பகிரங்கமாக செய்யப்படுவதாக கவலையுடன் பல சிறுமிகள் தெரிவித்துள்ளனர். இறுக்கமான உடையணியும் போதெல்லாம் அச்சுறுத்தல்கள் அதிகம் இருப்பதாக பலர் தெரிவித்தனர்.

    பின்னால் யாராவது தொடர்கின்றனரா என எப்போதும் பார்க்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதனால் வீடு அல்லது பள்ளி நோக்கி செல்ல மாற்று பாதைகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதாகவும் சில சிறுமிகள் கூறினர்.

    ஆச்சரியம் அளிக்கும் விதமாக, இக்கருத்து கணிப்பில் 24 சதவீத சிறுவர்களும் பாதுகாப்பின்மையை உணர்வதாக ஒத்துகொண்டுள்ளனர். கும்பலாக குழுமியிருக்கும் பிற சிறுவர்கள் மற்றும் இரவு நேரம் ஆகியவை அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கருத்து கூறினர்.

    இன்ஃப்ளுயன்ஸர்கள் (influencers) எனப்படும் சமூக வலைதளங்களில் பதின் வயதினருக்கு மாறுபட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறி வருபவர்கள் தங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஒப்புக்கொண்டனர்.

    ஆனால், கருத்து கணிப்பில் பங்கேற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் அனைவரும் தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை எத்தகைய அம்சங்கள் தீர்மானித்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக லோக்நிதி அமைப்பு சார்பில் சர்வே நடத்தப்பட்டது.

    குறிப்பாக வாக்களிக்கும்போது பிரதமர் யார் என்ற வி‌ஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதா? என்று அந்த கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது.

    அதில், மோடியின் தலைமை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, பா.ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு மிக, மிக சாதகமாக இருந்தன என்று தெரிய வந்துள்ளது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது கடும் அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக, பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.

    அந்த வகையில் 44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், படித்தவர்கள். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    தனிப்பட்ட முறையில் மோடிக்கு இருக்கும் இந்த செல்வாக்குதான் பா.ஜனதா கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க வழி வகுத்துள்ளது. வேட்பாளர்கள் மீது அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.



    ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இத்தகைய தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை 24 சதவீதம் பேர்தான் ஆதரித்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. பா.ஜனதா தொண்டர்களில் 80 சதவீதம் பேர் 2014-ல் மோடியை ஆதரித்து இருந்தனர். தற்போது அது 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. காங்கிரசை சேர்ந்தவர்களில் 7 சதவீதம் பேரும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களில் 11 சதவீதம் பேரும் மோடிக்கு ஆதரவளித்துள்ளனர்.

    மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாமல் இருந்திருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து இருக்க மாட்டேன் என்று 32 சதவீதம் பா.ஜனதா தொண்டர்கள் தெரிவித்தனர். மற்ற கட்சிகளில் இருக்கும் மோடி மீதான அனுதாபிகளும் இதே கருத்தை வெளியிட்டனர். இதன் மூலம் மோடிக்கு பா.ஜனதாவையும் தாண்டி மற்ற கட்சிகளிலும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    கட்சிக்காக வாக்களித்ததாக அனைத்து மாநிலங்களிலும் கணிசமானவர்கள் கூறியுள்ளனர். அது போல வேட்பாளரை பார்த்து வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.

    பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பிரதமர் யார் என்பதை பொருத்து வாக்களித்து இருப்பதாக கணிசமானவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்காக பா.ஜனதா கட்சிக்கு அதிக அளவு வாக்குகள் விழுந்தது தெரிய வந்துள்ளது.

    ஒட்டுமொத்தத்தில் 46 சதவீதம் பேர் கட்சியை பார்த்து வாக்களித்துள்ளனர். 32 சதவீதம் பேர் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பார்த்து வாக்களித்துள்ளனர். 17 சதவீதம் பேர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பார்த்து ஓட்டு போட்டுள்ளனர்.

    ஆந்திராவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 4 மாநில சட்டசபை தேர்தல்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. நேற்று இரவு அந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

    ஆந்திராவில் மொத்தம் 175 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 102 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 இடங்களை கைப்பற்றியது.

    கடந்த தேர்தலில் 1.6 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. எனவே இந்த தடவை அவர் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவான நிலை தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ். என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 130 முதல் 135 இடங்கள் வரை என்று கூறப்பட்டுள்ளது.

    ஐ நியூஸ் நெட்வொர்க் நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகனுக்கு 122 இடங்கள் வரையும், சந்திரபாபு நாயுடுவுக்கு 65 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    சில கருத்து கணிப்புகளில் ஆந்திராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. லகத்பதி ராஜாகோபால் சர்வேயில் சந்திரபாபு நாயுடுவுக்கு 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதுபோல ஆர்.ஜி. பிளாஷ் நடத்திய கருத்து கணிப்பில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு 90 முதல் 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 65 முதல் 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 130 முதல் 135 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு 37 முதல் 40 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    பெரும்பாலான கருத்து கணிப்புகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான அதிருப்தி அலை, ஊழல், ஜாதி அரசியல் போன்றவை தெலுங்கு தேசம் கட்சிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு தோல்வி அடையும் பட்சத்தில் அவரது தேசிய அரசியலிலும் கடும் பின்னடைவு ஏற்படும்.

    நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் அவரது கட்சிக்கு ஆந்திர மக்களிடையே அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் அந்த மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். தற்போது நடந்துள்ள தேர்தலில் நவீன் பட்நாயக் 5-வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைப்பார் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தாலும் சட்டசபை தேர்தலில் மக்கள் நவீன் பட்நாயக்கே தேர்ந்தெடுத்து இருப்பதாக கருத்து கணிப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

    ஒடிசா மாநில சட்டசபையில் 147 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அங்கு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 74 இடங்கள் வேண்டும்.

    அங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி 80 முதல் 100 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒடிசாவை தலைமையிடமாகக் கொண்ட கணக் நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் 85 முதல் 95 இடங்கள் நவீன் பட்நாயக்குக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


    25 முதல் 35 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளிதழ் ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலையே உள்ளது. அதனால்தான் மோடியின் பிரசாரம் வெறுப்பை வெளிக்காட்டும் வகையில் இருந்தது. அரசியல் ரீதியாக நான் அன்பையே வெளிப்படுத்துகிறேன்.

    23-ந் தேதி மக்கள் முடிவு என்ன என்பது தெரிந்து விடும். அதன்பிறகு தேர்தல் முடிவுகள் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம். புதிய அரசு அமைவதில் நீண்ட இழுபறி இருக்காது என்று நினைக்கிறேன்.

    தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அது பற்றி சொல்வது சரியாக இருக்காது. பிரதமர் மோடியை தேர்தலில் தோற்கடிப்பதும், ஆர்.எஸ்.எஸ்.சின் தவறான கொள்கைகளை வீழ்த்துவதும் தான் எனது இலக்காகும்.

    இந்த தேர்தலில் மோடி நிச்சயமாக தோல்வி அடைவார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மோடியால் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கவே முடியாது. மோடி மீது உள்ள பரவலான அதிருப்தி அவரை கண்டிப்பாக வீழ்த்தும்.

    தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பிறகுதான் புதிய ஆட்சி பற்றி தெளிவாக தெரிய வரும். எனவே அது பற்றி இப்போதே பதில் சொல்வது சரியாக இருக்காது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது.

    மக்களின் விருப்பம் என்ன என்பது 23-ந் தேதி தெரிந்து விடும். அந்த முடிவுக்கு ஏற்ப எங்களது நடவடிக்கைகள் அமையும்.

    மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் மக்களின் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வோம். அனைத்துத் துறைகளும் மேம்படும் வகையில் பொருளாதார கொள்கையை சீரமைப்போம். மோடியின் ஆணவத்தால் நமது நாட்டின் பொருளாதாரம் சிதைந்து விட்டது.

    பொருளாதார கொள்கைகளை மோடி செயல்படுத்தும் முன்பு மன்மோகன்சிங் போன்ற பொருளாதார மேதைகளை கலந்து ஆலோசிக்க வேண்டும். நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். எதிர்க் கட்சிகளுக்கு மதிப்பு அளிப்போம்.


    மோடி அரசு, அரசியல மைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதால் தான் நாங்கள் முழு மூச்சாக எதிர்க்கிறோம். மக்களின் குரலுக்கு இந்த அரசு மதிப்பு அளிப்பது இல்லை. எனவேதான் மோடிஅரசை வீழ்த்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    ஏப்ரல் 9-ந்தேதிக்கு பிறகு யாரும் கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் முழுமையாக அமலில் இருக்கும் நிலையில், எந்தவித ஆவணமும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.33.46 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் 209 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.



    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 40 பொது பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு மட்டும் 2 பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர 18 சட்டசபை இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே ஊடகங்கள் தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது. அந்த வகையில் ஏப்ரல் 11-ந்தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. எனவே ஏப்ரல் 9-ந்தேதிக்கு பிறகு எவரும் கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது.

    கருத்து கணிப்புகளை சேகரிக்கலாம், ஆனால் கடைசி கட்ட தேர்தல் நடக்கும் வரை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019  #SatyabrataSahoo

    பாராளுமன்ற தேர்தலில் சிறந்த ஆட்சியை தருவது யார் என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #PMModi #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் சிறந்த ஆட்சியை தருவது யார் என்ற தலைப்பில் சமீபத்தில் ஆன்லைன் மூலம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

    பிப்ரவரி 11-ந்தேதி முதல் 20-ந்தேதிவரை சுமார் 2 லட்சம் பேரிடம் ஆன்லைன் மூலம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. 9 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு சுமார் 2 லட்சம் பேர் ஆன்லைனிலேயே பதில் அளித்தனர்.

    இந்த கருத்து கணிப்பில் பாராளுமன்ற தேர்தலில் சிறந்த ஆட்சியை தருவது யார் என்று கேட்கப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2-வது இடத்தில் உள்ளார். அவருக்கு 8.33 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 1.44 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 0.43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 5.9 சதவீதம் பேர் மற்ற தலைவர்கள் பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு ராகுல் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக 31 சதவீதம் பேரும், அதிகரிக்கவில்லை என்று 63 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.



    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்லாத அரசு அமைய வேண்டும் என்று 3.47 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    5 வருடம் நடந்துள்ள மோடி ஆட்சி மிகவும் நன்று என 59.51 சதவீதம் பேரும், நன்று என 22.29 சதவீதம் பேரும், பரவாயில்லை என 8.25 சதவீதம் பேரும், மோசம் என்று 9.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். #PMModi #RahulGandhi #ParliamentaryElection
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சி 70 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #ChandrasekharRao #TelanganaElection
    நகரி:

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ் நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பு நடத்தின.

    இதில் 119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 70 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ், தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 4 கட்சிகள் கூட்டணிக்கு 33 இடங்களும், பா.ஜனதாவுக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 37-55 சதவீத ஓட்டுகள் பெறும் என்று கணித்துள்ளது. காங்கிரசுக்கு 27.98 சதவீத ஓட்டுகளும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 5.66 சதவீத ஓட்டுகளும், முதல்வராக சந்திரசேகரராவுக்கு 45 சதவீத பேரும், காங்கிரஸ் தலைவர் உத்தம்குமாருக்கு 30 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 52 சதவீத பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர் பதவிக்கு மோடிக்கு 33.61 சதவீத பேரும், ராகுல்காந்திக்கு 30 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



    தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணிக்கு பெரும் பாலானோர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தெலுங்கு தேசம் கட்சியையும், அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவை குறிப்பிடாமல் பேசினார். #ChandrasekharRao #TelanganaElection
    மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பை தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. #ThanthiTV #ThanthiTvopinionPoll
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

    ஆனால் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை பறிக்க காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டார்கள். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பை தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா? என்று கருத்து கணிப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று 71 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

    ஆட்சி மாற்றம் வேண்டாம் என்று 13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் தேர்தல் வரும்போது முடிவு செய்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.


    அடுத்த பிரதமராக யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று 36 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

    ஆனால் மோடி-ராகுல் இருவரும் வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். 3-வது நபர் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணையுமா? என்ற கேள்விக்கு இணையும் என்று 25 சதவீதம் பேரும், இணையாது என்று 45 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். பின்னர் இணையலாம் என்று 30 சதவீதம் பேர் கருத்து கூறி உள்ளனர். #ThanthiTV #ThanthiTvopinionPoll
    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #AndhraCM #JaganMohanReddy
    நகரி:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

    அம்மாநில சட்டசபை காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து சந்திரசேகரரராவ் ஆட்சியை கலைத்து கடிதம் கொடுத்தார்.

    வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல ஆந்திராவிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் தெலுங்கானா, ஆந்திரா சட்டசபை தேர்தலில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்று ஆங்கில டி.வி. சேனல் இந்தியா டூடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா ஆகியவை இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.

    10 ஆயிரத்து 650 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் தெலுங்கானாவில் மீண்டும் சந்திர சேகரராவ் முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அம்மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்சமார் ரெட்டிக்கு 18 சதவீதம் பேரும், பா.ஜனதா தலைவர் கி‌ஷன்ரெட்டிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்துக்காக போராடிய பேராசிரியர் கோதண்டராமுவுக்கும் 6 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.


    இதன் மூலம் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 38 சதவீதம் பேர் ஆதரவு கொடுத்துள்ளனர்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு 5 சதவீத ஆதரவே உள்ளது.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டமாக பாதயாத்திரை சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

    இதனால் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு பெருகி இருப்பதாக கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி மீது 35 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    கர்நாடகாவில் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிக்கு 55 சதவீத பேரும், ராகுல்காந்திக்கு 42 சதவீத பேரும் ஆதரவு அளித்துள்ளனர். #AndhraCM #JaganMohanReddy
    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க வேண்டும் என்று 48 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 11 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். #Ipacsurvey
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கி விட்டன.

    பாரதிய ஜனதாவும், காங்கிரசும் தேர்தல் வியூகம் அமைப்பதில் மும்முரம் காட்ட தொடங்கி உள்ளன. பா.ஜனதாவை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.

    இதற்காக எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் மக்கள் யார் பக்கம் என்பதை அறிவதற்காக கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஐ.பி.ஏ.சி. என்ற தனியார் நிறுவனம் தற்போது கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று 48 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 11 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.



    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9.3 சதவீதம் பேரும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 7 சதவீதம் பேரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 4.2 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 3.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். #Ipacsurvey
    பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்பது குறித்து தந்தி டி.வி. நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. #ThanthiTVOpinionPoll #Modi #Rahul
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்தலில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.

    இந்த சூழ்நிலையில் ஜூலை 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தந்தி டி.வி. கருத்து கணிப்பு நடத்தியது. 8,250 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் தெரிவித்த பதில்கள் பல்வேறு புதிய தகவல்களை அளிக்க கூடியவையாக இருந்தன.

    தற்போது தேர்தல் நடந்தால், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்று மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் கணிசமானவர்கள் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களிடையே ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதாவது பிரதமர் பதவிக்கு மோடியை ராகுல் காந்தி முந்துகிறார் என்ற அதிரடி தகவலை மக்கள் தெரிவித்தனர்.

    இன்றைய தேதியில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? என்றும் மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

    அ.தி.மு.க. வாக்குகளில் சிறிதளவு டி.டி.வி.தினகரனுக்கு செல்லும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் ரஜினி, கமல், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. மற்றும் சிறிய கட்சிகள் 4-ல் 1 பங்கு வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.


    இப்போது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்குகள் சிதறும் சூழ்நிலையில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்போம் என்பது பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, நீட் தேர்வு போன்ற கொள்கைகளில் மத்திய அரசு மீது மக்களின் அதிருப்தி போன்ற பல அதிர்ச்சிகரமான தகவலை பொதுமக்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    மக்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் “தந்தி” டி.வி.யின் இந்த கருத்து கணிப்பு விவரங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “மக்கள் யார் பக்கம்” என்ற சிறப்பு நிகழ்ச்சியில் காணலாம். #ThanthiTVOpinionPoll #Modi #Rahul
    சமூக வலைத்தளத்தின் கருத்து கணிப்புப்படி சராசரி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய மத்திய அரசின் அனைத்து துறைகளும் தோல்வி அடைந்து விட்டதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.#PChidambaram #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் டுவிட்டர் மூலம் தனது கருத்துக்களை அவ்வபோது பதிவு செய்து வருகிறார்.

    அவர் இன்று தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    சமூக வலைத்தளத்தின் கருத்து கணிப்புப்படி சராசரி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய மத்திய அரசின் அனைத்து துறைகளும் தோல்வி அடைந்து விட்டன.



    அந்த பட்டியலில் தொழிலாளர் நலத்துறை, விவசாயம், மனிதவளம் மேம்பாடு (கல்வி) வீட்டு வசதி, சுகாதாரம், இன்னும் பல அடங்கும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.#PChidambaram #Congress
    ×