search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanthi tv"

    • தமிழகத்தில் 5 தொகுதிகளில் கடும் போட்டி காணப்படுகிறது.
    • பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி தந்தி டி.வி. சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 35 ஆயிரத்து 600 வாக்காளர்களிடம் மார்ச் 20-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந்தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    இதில் 42 சதவீதம் பேர் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க போவதாக கூறியுள்ளனர். 34 சதவீதம் பேர் அ.தி.மு.க. கூட்டணிக்கும், 18 சதவீதம் பேர் பா.ஜ.க. கூட்டணிக்கும் வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு 5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    தந்தி டி.வி. கடந்த பிப்ரவரி மாதம் கருத்து கணிப்பு நடத்திய போது தி.மு.க.வுக்கு 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தி.மு.க.வின் செல்வாக்கு அப்படியே தொடருகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க.வுக்கு 30 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது அ.தி.மு.க. ஆதரவு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வுக்கு 13 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது பா.ஜ.க.வுக்கு 5 சதவீதம் ஆதரவு அதிகரித்துள்ளது.

    நாம் தமிழர் கட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது அக்கட்சிக்கு 3 சதவீத வாக்குகள் சரிந்துள்ளது.

    யார் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்கு 66 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கும், 33 சதவீதம் பேர் மோடிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. கூட்டணி 29 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்திய சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, கிருஷ்ணகிரி, சேலம், தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், சிதம்பரம், விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கன்னியாகுமரி, வடசென்னை, கரூர் ஆகிய 29 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    ஈரோடு, திருச்சி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் கடும் போட்டிக்கு மத்தியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் பா.ஜ.க. 39 சதவீதம் முதல் 45 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 36 முதல் 42 சதவீத வாக்குகளையும், அ.தி.மு.க. 10 முதல் 16 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 5 சதவீதம் முதல் 8 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 1 சதவீதம் முதல் 4 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் 5 தொகுதிகளில் கடும் போட்டி காணப்படுகிறது. பா.ஜனதா கூட்டணியில் பிரபலங்கள் போட்டியிடும் வேலூர், திருநெல்வேலி, கோவை ஆகிய தொகுதிகளில் கடும் இழுபறி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சியில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜ.க. கூட்டணி 18 இடங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. மத்திய சென்னை, அரக்கோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காசி, விருதுநகர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை, வேலூர், திருநெல்வேலி, கோவை ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி கணிசமான வாக்குகளை பிரிப்பதால் மத்திய சென்னை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 3-ம் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 34 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 5 தொகுதிகளில் கடும் இழுபறி இருக்கலாம் எனவும் தெரிகிறது.

    இவ்வாறு தந்தி டி.வி. கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய வெளிவராத பல்வேறு தகவல்கள் தந்தி டிவி நிகழ்ச்சியின் மூலம் வெளியாகி வருகின்றன. #Jayalalithaa #ThanthiTV
    சென்னை:

    ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற பெயரில் தந்தி டி.வி.யில் நேற்று முதல் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதா பற்றி இதுவரையில் யாரும் அறிந்திராத அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் வருகிற வெள்ளிக்கிழமை வரை தந்தி டி.வி.யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

    முதல் நாளான நேற்றே ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சியில் ஜெயலலிதா பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியானது. இதுவரையில் யாரும் சொல்லாத தகவல்களாக அது இருந்தது.

    ஜெயலலிதாவின் சித்தி அமீதா மகள் தெரிவித்த தகவல்கள் உருக்கமாக இருந்தன. ஜெயலலிதாவின் மாமா மகளும் நிகழ்ச்சி வாயிலாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். ஜெயலலிதா அனாதை போல கிடந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். போயஸ் கார்டனில் பணியாற்றிய ராஜம்மா, இனி எனக்கு யார் இருக்கா? என்று கூறியது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

    ராஜம்மா

    2014-ம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டது தொடர்பாகவும், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளன. 2016-ம் ஆண்டு செப். 22-ந்தேதி ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஆம்புலன்சில் நடந்தது என்ன? என்பது பற்றி அவரது குடும்ப டாக்டர் சிவக்குமார் விவரித்துள்ள பல்வேறு வி‌ஷயங்களும் உருக்கமாக உள்ளன.

    கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இடங்களுள் ஒன்றாகும். அங்கு சென்று ஓய்வு எடுப்பதை அவர் வழக்கமாகவே வைத்திருந்தார். அந்த எஸ்டேட் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களும் நேற்றைய நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தன.

    2-வது நாளாக இன்று இரவு 9 மணிக்கு ஜெ.ஜெயலலிதா எனும் நான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஜெயலலிதாவின் தினசரி வாழ்வில் என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பது ருசிகர தகவல்களாக தொகுக்கப்பட்டுள்ளது. போயஸ் தோட்டம் இல்லத்தில், பல்வேறு அரசியல் முடிவுகளை எடுத்து வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. இது மட்டுமே பலருக்கு தெரியும்.

    ஆனால் ஜெயலலிதா தனது இல்லத்தில் பண்டிகைகளையும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடி உள்ளார். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளை அவர் சந்தோ‌ஷத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

    ஜெயலலிதாவின் மகிழ்ச்சியான அந்த தருணங்களை கண்முன்னே நிறுத்தும் வகையில், இன்றைய நிகழ்ச்சியில் இனிமையான நிகழ்வுகள் நினைவு அலைகளாக விரிகின்றன.

    ஜெயலலிதாவை பொறுத்தவரையில் மிகவும் தைரியமான பெண் ஒன்று பெயரெடுத்தவர். எதற்கும் பயப்படமாட்டார் என்பதை உணர்த்தும் வகையில் போயஸ் தோட்டத்து இல்லத்தில் சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

    ஒருமுறை ஜெயலலிதாவின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கூட பயந்து நடுங்கி உள்ளனர். ஆனால் ஜெயலலிதாவோ அந்த பாம்பை கண்டு கொஞ்சமும் பயப்படாமல் இருந்துள்ளார். அந்த சம்பவமும் இன்றைய நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.

    செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் ஜெயலலிதா. குரங்குகள், நாய்க்குட்டிகள் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்துள்ளார்.

    வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டி திடீரென இறந்து போனதால் தனது டெல்லி நிகழ்ச்சியையே ரத்து செய்துள்ளார் ஜெயலலிதா. இதுபற்றிய தகவல்களும் நிகழ்ச்சியில் பாசமழையாக பொழிய உள்ளது.

    அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா முதன்முதலில் பேசிய வார்த்தை என்ன? என்பது அனைவரது மனதிலும் இப்போது வரையில் மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. இதற்கும் இன்றைய நிகழ்ச்சி விடை தருகிறது.

    கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவரான ஜெயலலிதா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி தரிசனம் செய்த போது ஒரு முறை சன்னதியில் கதறி அழுதுள்ளார்.

    சந்தோ‌ஷமான தருணம் ஒன்றில் கருணாநிதி குரலிலும் ஜெயலலிதா மிமிக்ரி செய்து பேசிக் காட்டியுள்ளார். இதன் மூலம் அவரது மிமிக்ரி ஆற்றலும் வெளிப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டியவர் ஜெயலலிதா. மோடிக்கு அவர் அளித்த விருந்தின் போது சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

    இனிப்பு வகைகள் மீது ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஈர்ப்பு அதிகம். இரவில் குறிப்பிட்ட இனிப்பு ஒன்றை அவர் விரும்பி கேட்டு சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்துள்ளார். அது என்ன இனிப்பு? ஜெயலலிதாவின் விருப்ப உணவுகள் என்ன? என்பது போன்ற தகவல்களும் இன்றைய நிகழ்ச்சியில் ஆச்சரியமூட்டும் வகையில் இடம் பெற்றுள்ளது.

    தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மூலம் ஜெயலலிதாவின் வாழ்வில் யாரும் அறிந்திராத இன்னொரு பக்கத்தை பார்க்க முடிகிறது என்றால் அது மிகையல்ல.

    இதே போல நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலும், அதன் பின்னர் 6, 7-ந்தேதிகளில் வர இருக்கும் நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாக உள்ளன.

    இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு மறுநாள் மாலை 5 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. #Jayalalithaa
    மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பை தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. #ThanthiTV #ThanthiTvopinionPoll
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

    ஆனால் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை பறிக்க காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டார்கள். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கருத்து கணிப்பை தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா? என்று கருத்து கணிப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று 71 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

    ஆட்சி மாற்றம் வேண்டாம் என்று 13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் தேர்தல் வரும்போது முடிவு செய்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.


    அடுத்த பிரதமராக யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று 36 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

    ஆனால் மோடி-ராகுல் இருவரும் வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். 3-வது நபர் ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்று 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணையுமா? என்ற கேள்விக்கு இணையும் என்று 25 சதவீதம் பேரும், இணையாது என்று 45 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். பின்னர் இணையலாம் என்று 30 சதவீதம் பேர் கருத்து கூறி உள்ளனர். #ThanthiTV #ThanthiTvopinionPoll
    தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும்? என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. #ThanthiTV #ThanthiTVOpinionPoll
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகிறது.

    தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக யார் வரவேண்டும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு 51 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோருக்கு 25 சதவீத மக்களும், டிடிவி தினகரன், ரஜினி ஆகியோருக்கு தலா 6 சதவீத மக்களும், கமலுக்கு 5 சதவீத மக்களும், அன்புமணிக்கு 4 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு 3 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



    மோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு, ஆம் என 8 சதவீதம் மக்களே கருத்து தெரிவித்துள்ளனர். பாதியளவு பலன் பெற்றதாக 23 சதவீத மக்களும், பலன் பெறவில்லை என 61 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

    இதேபோல் காவிரி ஆணையம் அமைய காரணம் குறித்த கேள்விக்கு மத்திய அரசுதான் என 14 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிக ஆதரவை அளித்துள்ளனர். 41 சதவீத மக்கள் உச்ச நீதிமன்றத்தால் காவிரி ஆணையம் அமைந்ததாக கூறியுள்ளனர். அ.தி.மு.க. காரணம் என என 21 சதவீத மக்களும், எதிர்க்கட்சிகள் காரணம் என 24 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு அருமை என 10 சதவீத மக்களும், நன்று என 11 சதவீத மக்களும், சராசரி என்று 28 சதவீத மக்களும், சரியில்லை என 35 சதவீத மக்களும், மோசம் என 16 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    2016ல் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..? என்ற கேள்விக்கு ஆம் என 11 சதவீதம் பேரும், ஓரளவு என 28 சதவீதம் பேரும், இல்லை என 61 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். #ThanthiTV #ThanthiTVOpinionPoll
    பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்பது குறித்து தந்தி டி.வி. நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. #ThanthiTVOpinionPoll #Modi #Rahul
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்தலில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.

    இந்த சூழ்நிலையில் ஜூலை 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தந்தி டி.வி. கருத்து கணிப்பு நடத்தியது. 8,250 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் தெரிவித்த பதில்கள் பல்வேறு புதிய தகவல்களை அளிக்க கூடியவையாக இருந்தன.

    தற்போது தேர்தல் நடந்தால், பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்று மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் கணிசமானவர்கள் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களிடையே ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதாவது பிரதமர் பதவிக்கு மோடியை ராகுல் காந்தி முந்துகிறார் என்ற அதிரடி தகவலை மக்கள் தெரிவித்தனர்.

    இன்றைய தேதியில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? என்றும் மக்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

    அ.தி.மு.க. வாக்குகளில் சிறிதளவு டி.டி.வி.தினகரனுக்கு செல்லும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் ரஜினி, கமல், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. மற்றும் சிறிய கட்சிகள் 4-ல் 1 பங்கு வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.


    இப்போது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்குகள் சிதறும் சூழ்நிலையில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்போம் என்பது பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, நீட் தேர்வு போன்ற கொள்கைகளில் மத்திய அரசு மீது மக்களின் அதிருப்தி போன்ற பல அதிர்ச்சிகரமான தகவலை பொதுமக்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    மக்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் “தந்தி” டி.வி.யின் இந்த கருத்து கணிப்பு விவரங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “மக்கள் யார் பக்கம்” என்ற சிறப்பு நிகழ்ச்சியில் காணலாம். #ThanthiTVOpinionPoll #Modi #Rahul
    ×