என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு
Byமாலை மலர்21 May 2019 6:40 AM GMT (Updated: 21 May 2019 6:40 AM GMT)
மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை எத்தகைய அம்சங்கள் தீர்மானித்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக லோக்நிதி அமைப்பு சார்பில் சர்வே நடத்தப்பட்டது.
குறிப்பாக வாக்களிக்கும்போது பிரதமர் யார் என்ற விஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதா? என்று அந்த கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில், மோடியின் தலைமை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, பா.ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு மிக, மிக சாதகமாக இருந்தன என்று தெரிய வந்துள்ளது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது கடும் அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக, பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.
அந்த வகையில் 44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், படித்தவர்கள். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இத்தகைய தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை 24 சதவீதம் பேர்தான் ஆதரித்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. பா.ஜனதா தொண்டர்களில் 80 சதவீதம் பேர் 2014-ல் மோடியை ஆதரித்து இருந்தனர். தற்போது அது 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. காங்கிரசை சேர்ந்தவர்களில் 7 சதவீதம் பேரும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களில் 11 சதவீதம் பேரும் மோடிக்கு ஆதரவளித்துள்ளனர்.
மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாமல் இருந்திருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து இருக்க மாட்டேன் என்று 32 சதவீதம் பா.ஜனதா தொண்டர்கள் தெரிவித்தனர். மற்ற கட்சிகளில் இருக்கும் மோடி மீதான அனுதாபிகளும் இதே கருத்தை வெளியிட்டனர். இதன் மூலம் மோடிக்கு பா.ஜனதாவையும் தாண்டி மற்ற கட்சிகளிலும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கட்சிக்காக வாக்களித்ததாக அனைத்து மாநிலங்களிலும் கணிசமானவர்கள் கூறியுள்ளனர். அது போல வேட்பாளரை பார்த்து வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.
பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பிரதமர் யார் என்பதை பொருத்து வாக்களித்து இருப்பதாக கணிசமானவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்காக பா.ஜனதா கட்சிக்கு அதிக அளவு வாக்குகள் விழுந்தது தெரிய வந்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில் 46 சதவீதம் பேர் கட்சியை பார்த்து வாக்களித்துள்ளனர். 32 சதவீதம் பேர் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பார்த்து வாக்களித்துள்ளனர். 17 சதவீதம் பேர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பார்த்து ஓட்டு போட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை எத்தகைய அம்சங்கள் தீர்மானித்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக லோக்நிதி அமைப்பு சார்பில் சர்வே நடத்தப்பட்டது.
குறிப்பாக வாக்களிக்கும்போது பிரதமர் யார் என்ற விஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதா? என்று அந்த கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில், மோடியின் தலைமை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, பா.ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு மிக, மிக சாதகமாக இருந்தன என்று தெரிய வந்துள்ளது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது கடும் அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக, பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.
அந்த வகையில் 44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், படித்தவர்கள். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தனிப்பட்ட முறையில் மோடிக்கு இருக்கும் இந்த செல்வாக்குதான் பா.ஜனதா கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்க வழி வகுத்துள்ளது. வேட்பாளர்கள் மீது அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இத்தகைய தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை 24 சதவீதம் பேர்தான் ஆதரித்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. பா.ஜனதா தொண்டர்களில் 80 சதவீதம் பேர் 2014-ல் மோடியை ஆதரித்து இருந்தனர். தற்போது அது 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. காங்கிரசை சேர்ந்தவர்களில் 7 சதவீதம் பேரும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களில் 11 சதவீதம் பேரும் மோடிக்கு ஆதரவளித்துள்ளனர்.
மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாமல் இருந்திருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து இருக்க மாட்டேன் என்று 32 சதவீதம் பா.ஜனதா தொண்டர்கள் தெரிவித்தனர். மற்ற கட்சிகளில் இருக்கும் மோடி மீதான அனுதாபிகளும் இதே கருத்தை வெளியிட்டனர். இதன் மூலம் மோடிக்கு பா.ஜனதாவையும் தாண்டி மற்ற கட்சிகளிலும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கட்சிக்காக வாக்களித்ததாக அனைத்து மாநிலங்களிலும் கணிசமானவர்கள் கூறியுள்ளனர். அது போல வேட்பாளரை பார்த்து வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.
பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பிரதமர் யார் என்பதை பொருத்து வாக்களித்து இருப்பதாக கணிசமானவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்காக பா.ஜனதா கட்சிக்கு அதிக அளவு வாக்குகள் விழுந்தது தெரிய வந்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில் 46 சதவீதம் பேர் கட்சியை பார்த்து வாக்களித்துள்ளனர். 32 சதவீதம் பேர் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பார்த்து வாக்களித்துள்ளனர். 17 சதவீதம் பேர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பார்த்து ஓட்டு போட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X