search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jaganmohan reddy"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 16 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கல்லால் தாக்கப்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ் யாத்திரை பிரசாரத்தின் போது கல் வீசி தாக்கபட்டார்.

    இதில் அவருக்கு கண் புருவத்திற்கு மேல் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 16 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து விஜயவாடா நகர போலீஸ் கமிஷனர் காந்தி ராணா கூறியதாவது:-

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கல்லால் தாக்கப்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருட்டாக இருந்தது. 1480 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி இருந்தோம். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கண்காணிப்பு கேமரா காட்சிகள், வீடியோக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் படி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லை வலுக்கட்டமாக வீசியதை கண்டறிந்துள்ளோம்.

    முதல் மந்திரி மீது கல் வீசியவர்களை போலீசார் கைது செய்ய உதவும் வகையில் தகவல் அளிப்ப வர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும்

    அவர்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
    • தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர், கோழி பிரியாணியுடன் ரூ.500 வரை வழங்கப்படுகிறது.

    பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு இரவு நேரங்களில் மது விருந்து அளிக்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கர்னூல் அருகே உள்ள எமிங்கனூரில் பிரசாரம் செய்தார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்ட னர்.

    ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களை அழைத்து வந்த ஒவ்வொருவருக்கும் தலா ஒரு குவாட்டர் மது பாட்டில், கோழி பிரியாணி பொட்டலம் மற்றும் ரூ.300 முதல் 500 வரை பணம் வழங்க தொடங்கினர்.

    கூட்டத்தில் இதனை அவர்கள் பகிங்கரமாக வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இதனை வாங்கிய குடிமகன்கள் உற்சாகமடைந்தனர்.அவர்களில் சிலர் மது குடிக்க தொடங்கினர்.

    இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அரசியல் கட்சியினர் ஆண் வாக்காளர்களுக்கு மது பாட்டில், சிகரெட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை வழங்கி வருகின்றன.
    • பெண் வேட்பாளர்களை கவர்வதற்காக மட்டன் பிரியாணி, இலவச சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என தேர்தல் பிரசார வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தார்.

    அரசியல் கட்சியினர் ஆண் வாக்காளர்களுக்கு மது பாட்டில், சிகரெட் உள்ளிட்டவை அடங்கிய கிப்ட் பாக்ஸ்களை வழங்கி வருகின்றன. பெண் வேட்பாளர்களை கவர்வதற்காக மட்டன் பிரியாணி, இலவச சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் வழங்கப்படுவதால் பரிசு பொருட்கள் குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் பிரகாசம் மாவட்டம், கனிகிரி நகராட்சி மண்டலத்தில் தன்னார்வலராக 500 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று தன்னார்வலர்கள் 500 பேரையும் பொது இடத்திற்கு வரவழைத்தனர்.

    தன்னார்வலர்களுக்கு பரிசு பை ஒன்று வழங்கினர். ஜெகன்மோகன் ரெட்டி உருவபடம் பொறிக்கப்பட்ட அந்த பையில் ரூ.5 ஆயிரம் பணம், ஹாட் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் மற்றும் டின்னர் செட் உள்ளிட்டவை இருந்தன.

    திடீர் அதிர்ஷ்டமாக பணத்துடன் பரிசு பொருட்கள் கிடைத்ததால் தன்னார்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பையை பெற்றுச் சென்றனர்.

    இதே போல் மற்ற கட்சியினரும் வேட்பாளர்களை வெகுவாக கவரும் வகையில் என்னென்ன பரிசு பொருட்களை வழங்கலாம் என ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆந்திராவில் உள்ள வாக்காளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்கவில்லை.
    • ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஐதராபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தோல்வியை சந்திப்பார். அது சாதாரண தோல்வி அல்ல. மிகப்பெரிய தோல்வியை அவரால் தவிர்க்க முடியாது.

    ஆந்திராவில் படித்த இளைஞர்கள் அரசு தரும் சலுகைக்காக காத்திருக்க வில்லை. வேலை வாய்ப்புக்காக வேலை தேடி அலைகின்றனர்.

    கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வளங்களையும் ஒரு சில பிரச்சினைகளுக்காக செலவழித்து ஆந்திராவின் வளர்ச்சியை புறக்கணித்தது ஜெகன்மோகன் ரெட்டி பெரிய தவறு செய்துவிட்டார்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் தற்போதைய நிலையை பார்க்கும் போது மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். அதுபோல் இல்லாமல் அரண்மனைகளில் தங்கி மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நினைக்கிறார்கள்.

    இதுபோன்ற அணுகு முறையால் மக்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் சிறந்த பாத்திரமாக விளங்க வேண்டும். ஆனால் பல தலைவர்கள் தங்களை பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குபவர்களாகவே பார்க்கின்றனர்.

    அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் பெரும் விலை கொடுக்க வேண்டியது வரும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற முடியாது.

    பொதுமக்கள் மாறி மாறி வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல்வாதியாக மாறிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.
    • ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா விசாகப்பட்டினத்தில் பேட்டி அளித்தார்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் வருகிற தேர்தலில் வெற்றி பெற போவதில்லை என்பதை உணர்ந்து விரக்தியில் இருக்கிறார். சத்தம் போட்டு கத்தி கூச்சிலிடுவதால் ஓட்டு கிடைக்காது.

    இதனை அரசியல்வாதியாக மாறிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும். பவன் கல்யாணின் விரக்தி அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் கூச்சல் போடும் அளவிற்கு சென்று விட்டது.

    அவரது தோல்விகளுக்கு தொண்டர்களை குறை கூறுவது வெட்கக்கேடானது.

    தற்போது பூத்துக் கமிட்டி இல்லாதது குறித்து அவர் பேசி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்காக பவன் கல்யாண் வேலை செய்து வருகிறார். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தங்கள் கட்சிகளை தோற்றுவித்தனர்.

    ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகிவிட்டார். ஆனால் பவன் கல்யாண் 2 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை.

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை.
    • நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கிறார்கள்.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில் இன்று ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி தலைமையில் மாநில அரசின் தலைமை செயலக அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்தை தடுக்க முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் இருந்து வெளியே வராதபடி வீட்டு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் வீட்டுக்காவலை தவிர்க்கும் முயற்சியாக ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் படுத்து உறங்கினார்.


    இதுகுறித்து விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் ஒய்.எஸ்.ஷர்மிளா கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்கள், வேலையில்லாதோர் மற்றும் மாணவர்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்து விட்டார். வேலையற்றோர் சார்பாக நாங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், எங்களை வீட்டுக் காவலில் வைக்க முயற்சி செய்வது கண்டிக்கதக்கது. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை இல்லையா? இது வெட்கக்கேடானது. ஒரு பெண்ணாக நான் வீட்டுக் காவலை தவிர்க்க காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடிக்கு, திருப்பதி வெங்கடாசலபதி மாதிரி சிலையை ஆந்திர முதல்வர் வழங்கினார்.
    • ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு.

    ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை டெல்லிக்கு சென்றார்.

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துள்ளார்.

    சந்திப்பின்போது, திருப்பதி வெங்கடாசலபதி மாதிரி சிலையை பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் வழங்கினார்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ள நிலையில், தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

    • பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
    • மத்திய பா.ஜனதா அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அதற்காக தயாராகி வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அப்போது கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த சந்திப்பு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை டெல்லிக்கு சென்றார். பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பாராளுமன்றத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி சென்றார். அவரை ஆந்திர எம்.பி.க்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

    இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி அமித்ஷாவை ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்திதது பேசுகிறார். தேர்தல் கூட்டணி மற்றும் ஆதரவு குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    சந்திரபாபு நாயுடுவின் டெல்லி பயணத்துக்கு மறுநாளே ஜெகன்மோகன் ரெட்டியும் அங்கு சென்று பா.ஜனதா தலைவர்களை சந்திக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    மத்திய பா.ஜனதா அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் மசோதாக்கள் நிறைவேற்றுவதில் அவரது கட்சி ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
    • சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளைத் திறந்து வைத்தார்.

    ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 2 முறை தனக்கு ஆதரவளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவேன்.

    ஆரம்பத்தில் சீட் கிடைக்காது என்றார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டியிடுவேன் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.

    சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்மிளா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
    • மாநிலத்தைப் பிரித்த காங்கிரசுக்கு ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு குறைவாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    திருப்பதி:

    காங்கிரஸ் கட்சி தென் மாநிலங்களில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அந்த மாநிலத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இப்போது இருந்தே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை கட்சிகள் நடத்தி வருகின்றன.

    ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாண் கூட்டணியை அறிவித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி இந்த முறையும் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுமா? அல்லது தெலுங்கு தேசம் கட்சியுடன் இணையுமா என்பது புதிராக உள்ளது.

    ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ஜனவரி மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சர்மிளா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக பார்முலாவான பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்தது. அதேபோல ஆந்திராவிலும் வாக்குறுதிகளை அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    ஆனாலும் மாநிலத்தைப் பிரித்த காங்கிரசுக்கு ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு குறைவாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    இது ஒரு புறம் இருக்க ஆளுங்கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் நேற்று சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். இது முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆந்திர அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-மந்திரி ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
    • சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக கனமழை பெய்தது.

    இதில் நெல்லூர், திருப்பதி, கிழக்கு கோதாவரி, பிரகாசம், என்.டி.ஆர். உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்காணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது.

    இந்நிலையில், முதல்-மந்திரி ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும்.

    மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 நிவாரண தொகை உடனடியாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உயர்மட்ட தணிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து நடந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

    ரெயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில் விபத்து குறித்து விரிவான உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

    தனது எக்ஸ் பக்கத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் அலர்ட் சிஸ்டம் ஏன் செயல்படவில்லை, சிக்னலில்லிங் ஏன் தோல்வியடைந்தது.

    தகவல் தொடர்பு அமைப்பு எவ்வாறு தோல்வியடைந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார். அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உயர்மட்ட தணிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.

    விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆதரவு, பிரார்த்தனைகளும் இருக்கும் காயமடைந்தவர்களுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து சிறந்த சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

    ×