search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Helipad"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயங்கரவாத அமைப்புகளும், மாவோயிஸ்ட் குழுக்களும் பக்தர்கள் வேடத்தில் சபரிமலைக்குள் நுழையலாம்.
    • அவசர காலத்தில் சன்னிதானத்தில் இருந்து ஏராளமான மக்களை வெளியேற்ற மாற்றுவழிகளை கண்டு பிடிக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(கார்த்திகை 1-ந்தேதி) முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்தபடி இருக்கிறது.

    இந்நிலையில் பாதுகாப்பு விஷயங்களுக்காக கண்காணிப்பை அதிகரிக்கவும், அவசர காலக்கட்டங்களில் பக்தர்களை அவசர அவசரமாக வெளியேற்றவும் வசதியாக சபரிமலையில் ஹெலிபேட் அவசியம் தேவை என்று கேரள அரசுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

    அதுமட்டுமுன்றி மேலும் பலவற்றையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு காவல்துறை பரிந்துரைத்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    பயங்கரவாத அமைப்புகளும், மாவோயிஸ்ட் குழுக்களும் பக்தர்கள் வேடத்தில் சபரிமலைக்குள் நுழையலாம். இதனால் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் அவசர கால சூழ்நிலையை முன்னறி வித்து, மாதிரி நடத்தை விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

    சன்னிதானத்தில் உள்ள ஓட்டல்களில் 30 முதல் 130 எல்.ஜி.பி. சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டுப்படுத்தி எல்.ஜி.பி. வினியோகத்தை தேவசம்போர்டு கட்டுப் படுத்த வேண்டும். சிலிண்டர்களை பாதுகாப்பாக ஒன்றாக வைப்பதற்கு சேமிப்பு வசதி தேவை.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்களுக்கு முனபதிவுமுறையை கொண்டுவர வேண்டும். அவசர காலத்தில் சன்னிதானத்தில் இருந்து ஏராளமான மக்களை வெளியேற்ற மாற்றுவழிகளை கண்டு பிடிக்க வேண்டும்.

    கூட்ட நெரிசலை கடடுப்படுத்த சன்னி தானத்தில் அதிக திறந்த வெளி இடங்கள் இருக்க வேண்டும். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்குகளை கொண்டு செல்ல ரோப்-வே அமைப்பு தேவை.

    இவ்வாறு கேரள அரசுக்கு காவல்துறை அனுப்பியுள்ள பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹெலிபேட் அமைத்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி விடுதலை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக மருது பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ராமநாதபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தேர்த லில் போட்டியிட்ட வேட்பா ளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்னை யில் இருந்து ராமநாதபுரம் வரை தனி விமானம் மூலம் வந்தார்.

    அவருக்காக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் விருந்தினர் மாளிகை அருகில் ஹெலி பேட் தளம் அமைக்கப் பட்டது. இது தொடர்பாக அப்போதைய தேர்தல் ஆணையம் இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் அப்போ தைய அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் மருது பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப் பட்டது. அது தற்போதைய மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ள மருதுபாண்டியன் மீதும் மற்றும் 2 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ பத்மாவதி மல்டி சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படுகிறது.
    • மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரவும், கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய அறுவைசிகிச்சை மருத்துவமனையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆய்வுசெய்தார்.

    2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி இந்த மருத்துவமனையை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். கடந்த 15 மாத காலத்தில், இங்கு 1,110 குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் ஆரோக்ய ஸ்ரீ திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இங்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அன்னமய்யா மாவட்டம் சிட்டி வேல் மண்டலம் கே.எஸ்.ஆர். அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இப்போது உடல்நிலை தேறி இன்னும் ஒருவார காலத்தில் வீடு திரும்ப உள்ளார்.

    ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ பத்மாவதி மல்டி சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இங்கு கட்டப்படுகிறது.

    இந்த மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரவும், இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திருப்பதி மலைஅடிவாரத்தில் சிற்ப கலாசாலையை பார்வையிட்ட அவர் இங்கு செதுக்கப்படும் சிலைகளை விற்பனை செய்ய கவுன்டர் அமைக்கப்படும் என்றார்.

    ×