search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "liberation"

    • விருதுநகரில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • பெண்களுக்கான உண்மையான விடுதலை பொருளாதார சுதந்திரமாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் அல்லம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஒன்றிய, மாநில அரசுகள் பெண் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் குறித்து, எடுத்துரைக்கும் வகையில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் இந்தக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆண்களும், பெண்களும் சமம் என்ற சட்டத்தின் அடிப்படையில் சொத்து ரிமை, சமஊதியம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் இருக்கின்றன. ஆனால், நடைமுறையில் குடும்பத்திலும், சமூகத்திலும், பெண்க ளுக்கான சம உரிமைகளை செயல்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. பல்வேறு சட்ட உரிமைகள், சட்ட விழிப்புணர்வுகள் இருந்தும் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்றால் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இதற்காக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    பெண் குழந்தைகளை காக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். பெண்களின் முன்னேற்றத் திற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், மிகவும் எளிமையான வழிமுறை கல்வியாகும். கல்வி மூலம் பெண்கள் முன்னேற்றம் அடைய முடியும்.

    அதோடு மட்டுமல்லாமல் தற்போதைய நிலையில் பெண்களுக்கான உண்மையான விடுதலை என்பது பொருளாதார சுதந்திரமாகும். பெண்கள் பொருளாதாரம் ஈட்டுவ தற்கான வழிமுறைகளை மேம்படுத்து வதோடு, அவர்கள் சம்பாதித்த பணத்தின் மீது அவர் களுக்கான உரிமை வேண்டும். தமிழக அரசின் மூலம் புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவவர் பேசினார்.

    இதில் மாவட்ட சமூக நல அலுவலர் தங்கலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஹெலிபேட் அமைத்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி விடுதலை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக மருது பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ராமநாதபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தேர்த லில் போட்டியிட்ட வேட்பா ளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்னை யில் இருந்து ராமநாதபுரம் வரை தனி விமானம் மூலம் வந்தார்.

    அவருக்காக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் விருந்தினர் மாளிகை அருகில் ஹெலி பேட் தளம் அமைக்கப் பட்டது. இது தொடர்பாக அப்போதைய தேர்தல் ஆணையம் இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் அப்போ தைய அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் மருது பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப் பட்டது. அது தற்போதைய மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ள மருதுபாண்டியன் மீதும் மற்றும் 2 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    • புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்.
    • இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் அஜீஸ்நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பின் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததற்கும் சாவார்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    செங்கோலுக்கும், விடுதலை அதிகார பரிமாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் பா.ஜனதா அரசியல் செய்கிறது.

    புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டசபையில் விவாதிக்கவில்லை. கட்டாய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

    கியாஸ் மானியம் வழங்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு வைப்புத்தொகை நிதியும் அளிக்கவில்லை. அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. எல்.டி.சி, யூ.டி.சி பணிகளை உடனே நிரப்ப வேண்டும்.

    ரெஸ்டோபார்கள் திறப்பது சமூக சீரழிவை ஏற்படுத்துகிறது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுப்பு நடந்தது.
    • 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அம்பேத்கர் 132-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

    கள்ளந்திரி, குறிஞ்சி நகர், ஏ.என்.புரம் முகாம் அமைப்பாளர்கள் மணிபாரதி, நொண்டிசாமி, அஜித் ஆகியோரது தலைமையில் 30 பேர், பொய்கைக்கரைப்பட்டி நந்தகோபால் தலைமையில் 10பேர், வெள்ளியங்குன்றம் நொண்டிசாமி தலைமையில் 10பேர், பில்லுச்சேரி தினேஷ் தலைமையில் 10பேர், மாத்தூர், மாத்தூர் காலனி காசி, சின்னையா ஆகியோரது தலைமையில் 20பேர், குருத்தூர் மாரி காளி தலைமையில் 25பேர், மாங்குளம் மீனாட்சி புரம் சபரிநாதன், கண்ணன், செல்வம் ஆகியோரது தலைமையில் 25பேர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    ராவணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுத்து வந்தனர். மேற்கு ஒன்றியம் சார்பில் 22 வாகனங்களில் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். கிழக்கு ஒன்றியம் சார்பில் 15 வாகனங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

    • மாநில செயலாளர்கள் சித்தார்த்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
    • மாவட்ட செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்

    கடலூர்:

    சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை விடுதலை செய்யக்கோரி சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை மக்கின் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா. சம்பத்குமார் சம்பந்த மூர்த்தி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் அன்பு என்கின்ற அன்பரசன், நகர செயல் தலைவர் தில்லை. குமார், மாவட்ட செயலாளர் சின்ராஜ் நெல்சன், மாவட்ட ஓ.பி.சி. குமரவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பரங்கிப்பேட்டை வட்டார தலைவர் சுந்தர்ராஜன் வரவேற்றார். மாநில செயலாளர்கள் சித்தார்த்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், மாவட்டத் துணைத்தலைவர்கள் குமார், வெங்கடேசன், சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி வேளாங்கண்ணி, மாவட்ட செயலாளர் சசிகுமார், நகர பொருளாளர் மிஸ்கின் பாய், அண்ணாமலை நகர் நகர தலைவர் சக்திவேல், பிரதிநிதி மீதிகுடி ராஜவேல், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் அபு சையத், கலை பிரிவு தலைவர்கள் பொன். மாதவ ஷர்மா நாராயணசாமி, இளைஞர் அணி ராஜ்குமார், பாலகிருஷ்ணன், லாரன்ஸ், தில்லை. சித்தார்த்தன், கலியபெருமாள், சக்திவேல், சஞ்சய், ஆனந்தராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் அஞ்சம்மாள், ருக்மணி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்

    • மேட்டூர் நகர தி.மு.க. செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமையில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இது தொடர்பாக 46 பேர்கள் மீது மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேட்டூர்:

    மேட்டூர்பஸ் நிலையத்தில் 2017 -ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உருவ பொம்மையை மேட்டூர்

    நகர தி.மு.க. செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமையில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக 46 பேர்கள் மீது மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பத்மபிரியா குற்றம் சாட்டப்பட்ட காசி விஸ்வநாதன் உட்பட 46 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

    • போராட்டத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட முகிலன் விடுதலை செய்யப்பட்டார்.
    • கல்குவாரிக்கு எதிராக போராடியவர் கொல்லப்பட்ட விவகாரம்

    கரூர்:

    கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் சமூக ஆர்வலர். இவருக்கும் செல்வகுமார் என்பவருக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செல்வகுமாரின் கல்குவாரி உரிமம் முடிந்த பிறகும் இயங்கி வருவதாக ஜெகநாதன் கனிமவளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து கல்குவாரி சட்ட விரோதமாக செயல்பட்டது தெரிய வந்ததால், கனிம வளத்துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி க. பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகநாதன் மீது மினிலாரி ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே. பரமத்தி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி டிரைவர் சக்திவேல், ரஞ்சித் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெகநாதனின் உடல் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஜெகநாதனின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்டு உடலைப் பெற மறுத்து அவரது உறவினர்களும், சமூக ஆர்வலர் முகிலன், சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை தூண்டுவதாக, போலீசார் முகிலன் உட்பட 2 பேைர கைது செய்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு இருவரும் பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

    முன்னதாக கலெக்டர் பிரபுசங்கரை சந்தித்த ஜெகநாதனின் மனைவி ரேவதி தன் கணவர் உடலை பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து நேற்று மாலை ஜெகநாதன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாள் அன்று தமிழக அரசு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது.
    • அரசியல் சட்டப்பிரிவு சாசனம் 161-ன் படி மாநில அமைச்சரவை முடிவு செய்து சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்காக மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து அதை அவர் ஏற்று பரிந்துரைக்கப்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய படுகிறார்கள்.

    திருச்சி :

    மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாள் அன்று தமிழக அரசு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது. அரசியல் சட்டப்பிரிவு சாசனம் 161-ன் படி மாநில அமைச்சரவை முடிவு செய்து சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்காக மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து அதை அவர் ஏற்று பரிந்துரைக்கப்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய படுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

    இஸ்லாமிய சிறைவாசிகள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஜாமினில் செல்ல கூட அனுமதிக்க படுவதில்லை. சிறை விதிகளின் படி சிறைவாசிகளுக்கு வழங்கும் பரோல் விடுவிப்பு கூட இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ஆகவே இஸ்லாமிய சிறைவாசிகளின் உடல் நலன் கருதி தாமதிக்காமல் உடனடியாக பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

    தமிழக சிறைகளில் இஸ்லாமிய சிறைவாசிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கபட்டு சிலர் இறந்துள்ளனர். மேலும் சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு முழு தகுதிகள் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய எந்தவித பாரம்பட்சம் பார்க்காமல் தமிழக அரசு முன்வர வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

    எனவே தமிழக சிறைகளில் பத்தாண்டுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் கருணையின் அடிப்படையில் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    நாகை அருகே பனங்குடியில் விடுதலை சிறுத்தை கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கதிர்நிலவன், மாவட்டத் துணைச் செயலாளர் பேரறிவாளன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். சன்னமங்கலம் கிளை நிர்வாகி முத்து வரவேற்றார். இதில் சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த 5 குடும்பத்தினர் மாற்று கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ சால்வை அணிவித்தார். 

    இதில் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    ×