என் மலர்

    நீங்கள் தேடியது "Marxist Communist"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனித்து போட்டியிடுவதுதான் ஒரே வழி என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவுக்கு வந்துள்ளது.
    • இந்தியா கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடை பெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" எனும் கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன.

    காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. கம்யூ னிஸ்டு கட்சியினரும் அந்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தனர்.

    இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்காக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 13 கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அறிவித்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மட்டும் பிரதிநிதி பெயரை தெரிவிக்காமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் உயர்நிலை அமைப்பான பொலிட்பீரோ அமைப்பின் கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடந்தது. அந்த கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில் சில முக்கிய முடிவுகளை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எடுத்துள்ளது.

    அதன்படி இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு எடுத்துள்ளது. பாட்னா, பெங்களூர், மும்பையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட் டத்தில் பங்கேற்ற போதிலும் தொடர்ந்து இந்தியா கூட் டணியில் நீடிக்க இயலாது என்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஆனால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சில தலைவர்கள் கூறுகையில், "இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் இடம் பெறுகிறோம். மாநில அளவில் இடம் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே ஒட்டு மொத்தமாக ஒருமித்த அளவில் கூட்டணியில் நீடிக்க இயலாது" என்று தெரிவித்து உள்ளனர்.

    டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஒரு முடிவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மிக உறுதியாக எடுத்துள்ளனர். அதாவது மேற்கு வங்காளம், கேரளாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இயலாது. எனவே இந்த 2 மாநிலங்களிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்துள்ளனர்.

    கேரளாவில் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் எலியும், பூனையுமாக உள்ளனர். எனவே அங்கு ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தது.

    அதுபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுடன் சுமூகமான மனநிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பரம விரோதிகளாக பார்க்கிறார்கள். எனவே தனித்து போட்டியிடுவதுதான் ஒரே வழி என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவுக்கு வந்துள்ளது.

    டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கும் கூட்டணி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டு இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தெரி வித்து உள்ளனர். சில மாநி லங்களில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட விரும்புகிறது.

    எனவே மேலும் சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு செய்து கொள்வதில் இந்தியா கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இவற்றையும் ஆய்வு செய்து இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொலிட் பீரோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மூத்த தலைவர் பிரகாஷ்காரத் அளித்த பேட்டியில் கூறி இருப்பதா வது:-

    இந்தியா கூட்டணியில் அடிப்படை புரிதல் வேண்டும். அது இல்லாமல் எந்த அரசியல் கூட்டணியையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மேற்கொள்ளாது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

    எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி ஆய்வு செய்யப்படும். அதற் கேற்ப கூட்டணி அமைப்பதும், தொகுதி பங்கீடு செய்வதும் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

    இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி விலகி செல்வது உறுதியாகி இருக்கிறது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.பி.யும், பொலிட் பீரோ உறுப்பினருமான நிலோத்பல் பாசு கூறியிருப்பதாவது:-

    இந்தியா கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன. நாங்கள் சில இடங்களில் சமரசம் செய்து கொண்டால் ஓட்டுகள் சிதறி விடும். ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக நாங்கள் சில முடிவுகளை எடுத்து இருக்கிறோம்.

    கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் தனித்து போட்டியிடும் முடிவை திட்டவட்டமாக சொல்லி விட்டோம். எனவே தேசிய அளவில் தொகுதி பங்கீடு செய்து கொள்ளமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் எடுத்துள்ள முடிவை காங்கிரஸ் தலை வர்களிடமும், மற்ற கூட் டணி கட்சி தலைவர்களிடமும் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இது காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தங்கள் கட்சி சார்பில் பிரதிநிதி நியமனம் செய்யமாட்டாது என்றும் எதிர்க்கட்சிகளிடம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 7-ந்தேதி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடக்கிறது
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நாட்டில் மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்கிட வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக்கான சட்டம் இயற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. ஒப்பந்த அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், கூலி ரூ.600-ம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நூதன போராட்டம் நடந்தது.
    • கைகளில் கட்டு போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. நகர் குழு உறுப்பினர் பிரபு தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். கிருஷ்ணன்கோவிலில் இருந்து பூவாணி, கூட்டுறவு நூற்பாலை, ராமகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் உள்ள பாலங்களை விரிவுபடுத்த வேண்டும், சாலையின் இரு புறங்களிலும் உள்ள மணல் குவியல்களை அப்புறப்படுத்த வேண்டும்,

    மதுரை-தென்காசி சாலையை பழுது பார்ப்பதற்கு பதில் புதிய சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. சேதமடைந்த சாலைகளால் பொதுமக்கள் விபத்தில் சிக்குவதை பிரதிபலிக்கும் வகையில் தலை மற்றும் கைகளில் கட்டு போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த இடத்தில் கொட்டப்பட்டு வந்தன.
    • மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சியின் பொது பயன்பாட்டிற்காக நகர தி.மு.க செயலாளரான நவநீத பாண்டியன் தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை கடந்த ஆண்டு தானமாக வழங்கினார். இதன் அன்றைய மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும்.

    ஆறுமுகநேரி ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் பேரூராட்சி யில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனிடையே அந்த இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி பூங்காவுடன் கூடிய நவீன மின் மயானம் அமைக்க ரூ. 1 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

    இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரியான்விளை, செல்வ ராஜபுரம், பெருமாள்புரம், கணேசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திரண்டு இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இந்தப் போராட்டம் காரணமாக திருச்செந்தூர்- தூத்துக்குடி நெடுஞ்சாலை யில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு பகுதியாக கட்டணம் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் உரிமையை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • பலமுறை பொய்யான வாக்குறுதிகளை அளித்த அமைச்சரின் தற்போதைய வாக்குறுதியையும் விவசாயி கள் நம்பப்போவதில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு மின்துறையை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிக்க, அதை விற்கும் நடவடிக்கையில் தொடர்ந்து மத்திய பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கட்டணம் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் உரிமையை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விவசாய பம்ப் செட்டுக்கு மின் மீட்டர் பொருத்தும் பணியை அரசு செய்து வருகிறது. புதுவை அரசும், மத்திய பா.ஜனதா அரசும் விவசாயிகளின் மின்சார உரிமையை பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    விவசாயிகளுக்கு தனி மின்தடம் என்பதும் அவர்களை கடுமையாக பாதிக்கும். பலமுறை பொய்யான வாக்குறுதிகளை அளித்த அமைச்சரின் தற்போதைய வாக்குறுதியையும் விவசாயி கள் நம்பப்போவதில்லை.

    எனவே முதல்-அமைச்சர் மவுனம் கலைந்து பம்பு செட்களுக்கு மின்மீட்டர் பொருத்தும் பணியை நிறுத்த வேண்டும். மின்துறை தனியார்மய நடவடிக்கை அனைத்தையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளை திரட்டி, தொடர் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்.
    • இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் அஜீஸ்நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பின் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததற்கும் சாவார்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    செங்கோலுக்கும், விடுதலை அதிகார பரிமாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் பா.ஜனதா அரசியல் செய்கிறது.

    புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டசபையில் விவாதிக்கவில்லை. கட்டாய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

    கியாஸ் மானியம் வழங்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு வைப்புத்தொகை நிதியும் அளிக்கவில்லை. அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. எல்.டி.சி, யூ.டி.சி பணிகளை உடனே நிரப்ப வேண்டும்.

    ரெஸ்டோபார்கள் திறப்பது சமூக சீரழிவை ஏற்படுத்துகிறது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து சட்டமன்றம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.
    • மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து சட்டமன்றம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.

    காமராஜர் சிலை அருகில் தொடங்கிய ஊர்வலத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சண்முகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மின்துறை தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும்.

    மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். தன்னாட்சிக் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். பஞ்சாலைகளை திறக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரி யத்தை செயல்படுத்த வேண்டும். 8 மணிநேர, வேலை பணி பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.

    விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், சுதா சுந்தரராமன், ராமச்ச ந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், சத்தியா, கலியமூர்த்தி, முருகன், செயலாளர்கள் மதிவாணன், உட்பட பலர் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்
    • மக்கள் அமைப்பு சார்ந்த 20-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்ஜெட் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்க்கு மணிகண்டன் தலைமை தாங்கினார், மக்கள் அதிகாரம் ஆனந்தராஜ் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் செல்வம், மகேஷ், யோகராஜ் மற்றும் மக்கள் அமைப்பு சார்ந்த 20-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.
    • மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார்.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார். செக்கு என்றும், சிவன் என்றும் தெரியாமல் நடந்து கொள்வதைப் போல கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.

    அறிவில் அந்நிய அறிவு, உள்ளூர் அறிவு என்றும் கிடையாது. சொல்லப்போனால் ஆர்.என்.ரவியின் ஞான பீடம் ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே நாடு என்கிற உதவாக்கரை தத்துவத்தையும், சாகாவையும் பாசிஸ்ட் முசோலினியிடமிருந்தும், கொடி வணக்கம், மார்பில் கை வைத்து வணங்கும் முறை, சுவஸ்திக் ஆகியவற்றை ஹிட்லிரிடமிருந்தும் கடன்பெற்றுக் கொண்ட அமைப்பு.

    இன அழிப்புக் கொள்கைக்கு ஹிட்லரை முன்னோடியாக கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் நாஜியை குருவாக ஏற்றுக் கொண்ட அமைப்பு. தத்துவம், நடைமுறை என அனைத்தையும் ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த ஆர்.என்.ரவி மார்க்சியத்தை அந்நிய தத்துவம் என்று பேசுவது அவரது அறியாமையையே காட்டுகிறது.

    மனிதகுல வரலாற்றில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், ஒடுக்குமுறை கொடுமைகளிலிருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டு சுரண்டலற்ற பொதுவுடமை சமூகத்தை அமைக்க வழிவகுக்கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார். மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது என்று பேசுகிறார்.

    பெருநோய்களை சிதைக்கும் தடுப்பு மருந்துகளை தவறானது என்று யாரும் பேச மாட்டார்கள். உலகத்தை அதன் அனைத்து விதமான கோரங்களிலிருந்தும் மீட்டெடுத்து அனைவருக்குமான பூமியாக மாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம். அது சிதைக்கும் தத்துவமல்ல. அது செதுக்கும் தத்துவம். அறிவுச் சிதைவு ஏற்பட்டவர் மட்டுமே அதை சிதைக்கும் தத்துவமாக கருதுபவர்கள்.

    ஆர்.என்.ரவி அரசு அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அடாவடித்தனமாகவும், பொருத்தமற்ற முறையிலும் பேசுவதை கண்டித்தும், மார்க்சியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

    இதன் தொடக்கமாக 2023 பிப்ரவரி 28 அன்று கவர்னர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளும், ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் கலந்துகொண்டு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
    • மாவட்டத் தலைநகரம் 65 கி.மீ.தூரம் உள்ளதாக புகார்

    குடியாத்தம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சக்திவேல், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், பி.குணசேகரன் ஆகியோர் குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த அகரம்சேரி, கொல்லமங்கலம், கூத்தம்பாக்கம், பள்ளிக்குப் நம், சின்னச்சேரி ஆகிய ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு மாதனூரில் கருத்து கேட்பு கூட்டம் நடந்ததாக தகவல் வந்துள்ளது.

    இந்த கூட்டம் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபெற்றதா எனத் தெரியவில்லை.அப்பகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் யாருக்கும் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது. இது எந்த பலனையும் அளிக்காது.

    இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைப்பதால் மாவட்டத் தலைநகருக்கு 65 கி.மீ.தூரம் உள்ளது. இது இந்த ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார இழப்பு, பயண நேரம் என கடும் சிரமத்தை ஏற்படுத்தும்.

    வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செல்ல வாணியம்பாடிக்கும், தலுகா அலுவலகம் செல்ல ஆம்பூருக்கும் செல்ல வேண்டும். மேற்படி அலுவலகங்கள் அனைத்தும் தற்போது குடியாத்தத்திலேயே உள்ளது.

    உடனடியாக குடியாத்தம் செல்ல தடையாக இருப்பது பாலாறு மட்டுமே. எனவே மாவட்ட நிர்வாகம் நீண்ட கால கோரிக்கையாக உள்ள அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலப்பணியை உடனே தொடங்க கேட்டு கொள்கிறோம்.

    5 ஊராட்சிகளை மையப் படுத்தி அகரம்சேரியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் அதுவரையில் மாதனூர் மருத்துவமனையை பயன் படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print