என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "signature movement"

    • மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
    • சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவினாசி,நவ.16-

    அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சி 3வது வாா்டு தொட்டகளாம்புதூா் பகுதி விநாயகா் கோயில் பகுதியில் சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீா் சாலையில் தேங்கி நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே சாலை வசதி, சாக்கடை கால்வாய் அமைக்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தினா். இதில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • அம்பாசமுத்திரம் ரெயில்வே கேட் பஸ் நிலையம் அருகில் பா.ஜ.க. சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது
    • 300-க்கும் மேற்பட்ட கடிதங்களை கலெக்டருக்கு தபால் மூலம் அனுப்ப ப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேல்புறம் புதிதாக வர உள்ள மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே இருக்கும் பழைய கடையை அகற்றவும் அம்பாசமுத்திரம் ரெயில்வே கேட் பஸ் நிலையம் அருகில் அம்பாசமுத்திரம் சட்டமன்றத்தொகுதி பா.ஜ.க. சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.சுமார் 300-க்கும் மேற்பட்ட கடிதங்களை கலெக்டருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

    நிகழ்ச்சியில் அம்பை நகர பா.ஜ.க. தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவி மங்கள சுந்திரி, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வகனி,அம்பை ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ், விக்கிரமசிங்கபுரம் நகர தலைவர் தங்கேஷ்வரன்,சேரை மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவரும் அம்பை சட்டமன்ற பொறுப்பாளருமான வழக்கறிஞர் ராம்ராஜ் பாண்டியன் கலந்து கொண்டார். நகர பொதுச்செயலாளர்கள் சுகுமார், சுதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராம கிருஷ்ணன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவி வள்ளியம்மாள், நகர பிரபகாரி பால்பாண்டியன்,ஒன்றிய பிரபாகரி முத்து பாண்டி, மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
    • புதிய உறுப்பினர் சேர்க்கை என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசியில் தமிழ்நாடு அனைத்து எல்.பி.ஜி., சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    இதில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தி தொழிற்சங்கத்தை வலுப்படுத்துவது, மார்ச் 20ந்தேதியிலிருந்து 30ந் தேதிக்குள் கோவை மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி பொதுமக்களின் ஆதரவை பெறும் நிகழ்ச்சியை தொடங்குவது,மார்ச் 30 -ந்ேததி முதல் ஏப்ரல் 15-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம், ஏப்ரல் 15 முதல் 30-ந் தேதிக்குள் திருப்பூர் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பொதுமக்களிடம் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி கையெழுத்து வாங்கினர்.
    • மதுவிலக்கை அமல்படுத்த கோரி கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியும், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர்.

    நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ரமேஷ் செல்வன், கிழக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், வீரவநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் செவல் முத்துராஜ், துரை, அனந்தராமன், சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வந்து மதுவிலக்கை அமல்படுத்த கோரி கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

    • ராம் நகர் பகுதியில், முறையாக கழிவுநீர் கால்வாய் கழிவுகள் அகற்றப்படுவதில்லை.
    • மனுவாக தயாரித்து மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஈஸ்வரி அங்குள்ள ராம்நகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது:- 14வது வார்டு ராம் நகர் பகுதியில், முறையாக கழிவுநீர் கால்வாய் கழிவுகள் அகற்றப்படுவதில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனால் தற்போது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.இதனை மனுவாக தயாரித்து மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.

    இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதில் பாஜக., நகர தலைவர் வடிவேல், 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சசிரேகா மற்றும் பாஜக., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன.
    • இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    சென்னை:

    உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படுகிறது.

    இதன் தொடக்க விழா தி.நகர் பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன. இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மக்கள் பாதிக்க கூடிய சூழல் உள்ளது.

    தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சுற்று சூழலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுக்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை. இதை தீவிரப்படுத்த வேண்டும்.

    இதை தனிமனிதரால், சாத்தியப்படுத்த முடியாது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப் பாளர் மு.ஜெயராமன், பசுமைத்தாயம் மாநில செயலாளர் அருள், இணை செயலாளர்கள் எஸ்.கே.சங்கர், சத்ரிய சேகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, முத்துக்குமார், அடையார் வடிவேல், சவுமியா அன்பு மணியின் மகள் சுஞ்சத்ரா சவுமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது
    • இதில் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் துறை சார்பாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் துறையின் துணை ஆய்வாளர்கள் வி.கே.நடராஜன் மற்றும் பி.குணசீலன் முன்னிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் குழந்தைத் தொழிலாளர் எவரையும் பணியில் அமர்த்த மாட்டேன், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிட பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றுவோம், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பதாகையில் கையெழுத்திடப்பட்டது. இதில் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் செய்திருந்தார்.

    • குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    குழந்தை தொழிலா ளர்கள் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மதுரை கூடுதல் தொழிலா ளர் ஆணையர் ஜெயபால் மற்றும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆகியோரின் வழி காட்டுதலின்படியும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனு சரிக்கப்பட்டது.

    மதுரை, எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் குழந்தை தொழிலாளரி உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தை தொழி லாளர் முறைக்கெதிரான கையெழுத்து இயக்கம். வாகனங்களில் விழிப்பு ணர்வு. ஸ்டிக்கர்கள் ஓட்டு தல், பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    மேலும் குழந்தை தொழிலாளர் முறைக்கெதிரான வீதி நாடகம் மற்றும். பறை இசை ஆகிய கலை நிகழ்ச்சி கள் சைல்டு லைன் உதவி யுடன் நடத்தப்பட்டது. இதில் மதுரை தொழிலாளர் துணை ஆணையர் லிங்கம், மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்திகேயன், மதுரை தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மலர்விழி, தொழிலாளர் துணை ஆய்வர்கள், தொழி லாளர் உதவி ஆய்வர்கள். முத்திரை ஆய்வர்கள், மாவட்ட தடுப்பு படை உறுப்பினர்களான சைல்டுலைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கல்வித்துறை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ந்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தினை அமைச்சர் பெரியகருப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சிவ கங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் கையெழுத் திட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர், சிவகங்கை நகராட்சி தலைவர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மற்றும் அனைத்து அரசுத் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலர் தலைமையில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், சைல்டு லைன் மேற்பார்வையாளர்கள், மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும் சிவகங்கை, காரைக் குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவ னங்களின் உரிமையா ளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து தொண்டி ரோடு, அரண் மனை, நேரு பஜார், தெற்கு ராஜவீதி ஆகிய பகுதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு பிளக்ஸ் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ் வரி தெரிவித்துள்ளார்.

    • ம.தி.மு.க. துணை பொதுச்செயலர் தி.மு.ராஜேந்திரன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
    • இதுபோல் இனாம்மணியாச்சி விலக்கு அருகே ம.தி.மு.க. ஒன்றியம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில், தமிழக அரசுக்கும், சட்டப்பேரவையின் செயல்பாடுகளுக்கும், ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுகள் தான் என்றும், பா.ஜ.க. அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் மீறிவிட்டார். எனவே ஆளுநர் ஆர்.என். ரவியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலர் தி.மு.ராஜேந்திரன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ஜி.ரமேஷ், நகர செயலர் பால்ராஜ், நகர இளைஞரணி செயலர் முத்துகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலர் சரோஜா, மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலர் தெய்வேந்திரன், சக்திவேல், தி.மு.க. சார்பில் சிவா, காளியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலர் கதிரேசன், வக்கீல் அணி மாவட்ட செயலர் பெஞ்சமின் பிராங்கிளின், காங்கிரஸ் கட்சி முன்னாள் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, பொருளாளர் காமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதுபோல் இனாம்மணி யாச்சி விலக்கு அருகே ம.தி.மு.க. ஒன்றியம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் துணைப் பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞர் அணி செயலாளரும், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலர்கள் சரவணன் (மத்திய பகுதி), கேசவ நாராயணன்(மேற்கு), மாரிச்சாமி (கிழக்கு), ராஜ்குமார் (புதூர்), ராஜசேகர்(விளாத்திகுளம்), மாநில இலக்கிய அணி மகாராஜன், தூத்துக்குடி மத்திய பகுதி முருக பூபதி, முன்னாள் யூனியன் சேர்மன் கணேசன், வனராஜன், முத்தால், ராஜேஸ்வரி, மாரிமுத்து, சீனிவாசன், முத்துச்செல்வன், வெங்கடேசன், செண்பக ராஜ், நாகராஜ், முத்து பாண்டியன் உள்பட கூட்டணி கட்சியினர் திரளா னோர் கலந்து கொண்டனர்.

    இந்த கையெழுத்து இயக்கம் ஒரு மாதம் நடைபெறும் என்றும், பின்னர் கோரிக்கை மனுவை குடியரசு தலைவரிடம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழங்குவார் எனவும் ம.திமு.க.வினர் தெரிவித்தனர்.

    • கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கத்தினை தொடங்கினர்
    • கையெழுத்து இயக்கத்தினை ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்
    பெரம்பலூர்,


    பெரம்பலூரில் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த இதற்கான தொடக்க விழாவில், ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் எம்.எல்.ஏ.வு.மான சின்னப்பா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பிரபாகரன், முன்னாள் சேர்மன் அட்சயகோபால், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜா, முதல் கையெழுத்து இட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த தொடக்க விழாவில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் வக்கீல் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
    • கையெழுத்து பெற்றப்பட்ட இந்த மனு, இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அரியலூர்,

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில், மதிமுக மாவட்டச் செயலர் க.ராமநாதன், மாநில விவசாய அணிச் செயலர் வாரணவாசி கி.ராஜேந்திரன், திமுக சட்டத்திட்ட திருத்த குழு இணைச் செயலர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை க.சொ.க.கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலர் மு.கோபால், ஏஐடியுசி மாவட்டச் செயலர் தண்டபாணி, வி.சி.க தொகுதி செயலர் மருதவாணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலரும் கையெழுத்திட்டனர். கையெழுத்து பெற்றப்பட்ட இந்த மனு, இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    ×