search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "signature movement"

    • வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • கல்லூரி மாணவிகள், பெண்கள் கைரேகையை பதிவு செய்து கையெழுத்திட்டனர்.

    திருப்பூர்: 

    நாடு முழுவதும் இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய 181 என்ற எண் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா தேவி கலந்து கொண்டு துவக்கி வைத்து கையெழுத்திட்டு, கைரேகை பதிவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவிகள், பெண்கள் கைரேகையை பதிவு செய்து கையெழுத்திட்டனர்.

    • தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.
    • மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் மற்றும் எஸ்.ஆர். நகர் பகுதியில் தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.

    மேலும் "தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி" தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க மாட்டோம், பொருட்கள் வாங்க செல்லும் பொழுது தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளை பயன்படுத்த மாட்டேன் நம் நகரின் தூய்மை மற்றும் பசுமையை மேம்படுத்த நான் ஒத்துழைப்பேன். தூய்மை உறுதிமொழி எனது குப்பை எனது பொறுப்பு, என் நகரம் என் பெருமை. எனது நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்புமாகும், தூய்மைப்பணிகளுக்கு என்னைஅர்ப்பணித்து கொள்ள, என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்டமாட்டேன், பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்கமாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பேன், தூய்மை நகருக்கான எனது ஆர்வத்தில், என்னை சார்ந்தவர்களும் குறைந்தபட்சம் தினசரி 2 மணி நேரம் பங்கேற்க ஊக்குவிப்பேன்.நகர தூய்மைக்கு பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே ஒரே காரணம் என்பதை நான் நம்புகிறேன், என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது நகரத்தை தூய்மையாக வைக்க பேருதவி செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்ற தூய்மை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், உதவி ஆணையாளர் (மண்டலம்) வினோத், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. சார்பில் நடந்தது
    • பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர் அணி மாணவர் அணியினர் புதுப்பேட்டை சந்தை பகுதியில் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வீ. வடிவேல் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது பொதுக்குழு உறுப்பினர் சத்தியநாராயணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் புகழேந்தி, ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வேளாண் குழு தலைவர் சரவணன், ஒன்றிய இளைஞர் துணை அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சித் பிரதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார் பில் அரசடி ரெயில்வே மைதானம் முன்பு, மக்கள் நிலத்தை பாதுகாப்போம் என்ற நோக்கத்தில் பல்லாயி ரக்கணக்கான மக்கள் மற்றும் விளையாட்டு வீரர் கள் பயன்படுத்திவரும் பொது சொத்தான மதுரை ரெயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரெயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கையெ ழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். இதில் மாநக ராட்சி துணை மேயர் நாகரா ஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர் எம்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற் றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்ற னர்.

    தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில், ரெயில்வே மைதானத்தை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மதுரையின் நுரையீரலாக பெரும் மாசுவை தடுத்து நிறுத்தும் ஒரு இடமாக ரெயில்வே மைதானம் உள்ளது. இதை தனியார் கார்ப்பரேட் முத லாளிகளிடம் வழங்கி விட் டால் இப்பகுதியில் சுகாதா ரம் என்பதை பாதுகாக்க முடியாது.

    ஏற்கனவே காற்று மாசு பெருவாரியாக ஏற்பட்டு வரும் நிலையில் காற்றில் மாசினை குறைப்பதற்கு ரெயில்வே காலனி பெரும் பங்கு வகிக்கின்றது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மரங்களை விட இங்கு 50 சதவீதத்திற்கு மேல் மரங்கள் உள்ளது. எனவே மதுரையில் நுரையீ ரலாக இருக்கக்கூடிய ரெயில்வே மைதானத்தை தனி யார் பெரும் முதலாளிக ளுக்கு மத்திய அரசு தாரை வார்க்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்று ரெயில்வே மைதானம் பாது காப்பு கையெழுத்து இயக் கத்தை துவக்கி வைக்கிறோம் என்றார்.

    • கீழ்கோத்தகிரி, நெடுகுளா கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலையில் நடந்தது.
    • செயலாளர், அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதன் ஒருபகுதியாக கீழ்கோத்தகிரி, நெடுகுளா கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீமன் முன்னிலையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை ஆதரித்து கையொப்பமிட்டனர்.

    நிகழ்ச்சியில் நெடுகுளா கிளைக்கழக செயலாளர் மோகன், ஒன்றிய பிரதிநிதி மணி, மாவட்ட விவசாய அணி சுண்டட்டி முருகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருண்குமார், குன்னூர் நகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் மகாலிங்கம், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஸ்ரீதர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் தொடங்கி வைத்தார்
    • காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது

    கோவை,

    ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய தலித் உச்சி மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சமூக நீதி அமைப்புகள் பங்கேற்றன.

    இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளை ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி அந்தந்த மாநிலங்களில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் உட்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், மண்டபம் பேரூராட்சி கவுன்சிலருமான கே.சம்பத் ராஜா வரவேற் றார்.

    மாவட்ட தி.மு.க. செயலா ளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. இளை ஞரணி மாநில துணைச் செயலாளர் இன்பா ரகு, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் எம்.ஆசிக் அமீன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பிற்படுத் தப்பட்டோர் நலன் மற்றும் கதர் வாரியத்துறை அமைச் சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப் பன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பி.மெய்யநாதன், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

    மாநில திட்ட குழு துணைத்தலைவர் ஜெ.ஜெய–ரஞ்சன் கருத்துரை வழங்கி னார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார். விளை யாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், ராம நாதபுரம் 31-வது வார்டு கவுன்சிலருமான எம்.முஹம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா வரவேற்று பேசினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர் எஸ்.ரமேஷ் கண்ணா, சி.கே.குமரகுரு, சன் சம்பத்குமார், ஆர்.எஸ்.சத்தியேந்திரன், ஆர்.கே. கோபிநாத், எஸ்.தௌபீக் ரஹ்மான், மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜி.ஸ்டாலின், என்.பொன் மணி, சங்கர், எம்.வசந்த்,

    ஆர்.சண்முகப்பிரியா,ப.சம்பத்குமார், மருத்துவர் அணி துணை அமைப்பா ளர்கள் தி.சந்திரமோகன் வா.எபினேசர், செல்வராஜ், எம்.எம்.கார்த்திக், பா.சர வணபாலன், வே.சேகர், சி.கணேசன், த.கார்த்திகே யன், ந.மதிவாணன் வ.மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளை ஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் ஆலோசனையின்படி இன்று மதுரை திருப்பாலை குறிஞ்சி மகாலில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக நீட்தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் ஜனாதிபதிக்கு தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கையெழுத்திட்டனர்

    இந்த கையெழுத்து இயக்கத்திற்கு இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் ஜி.பி.ராஜா, வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலை மை வகித்தனர். தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் முன்னாள் எம்.பி., கம்பம் செல்வேந்திரன் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் பால சுப்பிர மணி யன், சோம சுந்தரபாண்டியன், நேரு பாண்டி, சசிகுமார், வீரராக வன், வாடிபட்டி பால் பாண்டி, சிறை செல் வன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் வைகை மருது, இளங்கோ, குமரேசன், மற்றும் கவுன் சிலர் ரோகினி பொம்மத் தேவன், பேரூ ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
    • கீழப்பாவூர் ஊராட்சி யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கும் கையெழுத்து இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ உத்தரவின் பேரிலும், முதன்மை செயலாளர் துரை வைகோ வழிகாட்டுதலிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராம. உதயசூரியன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஊராட்சி யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ். ராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாலையம்மாள், மதிச்செல்வன், ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் தங்கம், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமிழ்புலிகள் ஆகிய கட்சிகளின் ஒன்றிய செயலாளர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், தர்மராஜ், ராஜேஸ்வரி, மேரி,

    மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன், தணிக்கை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஏ. டி. நடராஜன், நோட்டரி வழக்கறிஞர் சுப்பையா, துணை செயலாளர்கள் எஸ்.கே.டி.துரைமுருகன், மருதச்சாமி பாண்டியன், சரவண விஜயா, பொதுக்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, தங்கம், கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகசாமி, சுரண்டை நகர செயலாளர் பொன் மகேஸ்வரன், கீழப்பாவூர் பேரூர் மதிமுக செயலாளர் குகன், கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய அவை தலைவர் திரவியம், பொருளாளர் திருமலை, ஒன்றிய துணைச் செயலாளர் சத்யராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ஆசிரியர் சொக்கத்தங்கம், கலையரசன், கார்த்திக், சமுத்திரம் மாணிக்கம், வைகோராஜ், மகாராஜா நாடார், என்.ஆர். தங்க நாடார், சிவன் பாண்டியன், தங்கச்சாமி, ராமகிருஷ்ணன், ஆதியப்பன், இயேசு ராஜா, ராஜபிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குளம் தெற்கு ஒன்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
    • இதில், கூட்டணி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.எஸ்.எஸ்.ராமசுப்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தென்காசி தெற்கு மாவட்டம், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலு வலகம் முன் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு.ராசேந்திரன் தலைமை தாங்கி னார். மாவட்ட செய லாளர் ராம உதயசூரியன் முன்னிலை வகித்தார். இதில், கூட்டணி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.எஸ்.எஸ்.ராமசுப்பு, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலை வர் எம்.திவ்யா மணி கண்டன் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
    • மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்,

    ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பெரியக்கடை வீதி பள்ளிவாசலில் ம.தி.மு.க. 44-வது வட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், பகுதி செயலாளர் சேகர், மாவட்ட பிரதிநிதி ராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லட்டு நாசர், சைபுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை தி.மு.க.திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ். எஸ். சண்முகசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

    பல்லடம்:

    திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவியை நீக்க கோரி பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ். எஸ். சண்முகசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். முத்துசாமி, பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் புத்தரச்சல் பி. கே. மணி சிறப்புரையாற்றினார். கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை தி.மு.க.திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×